ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2024

ஆண்டவனைப் பற்றி முழுமையாக அறிந்திட “அந்த ஆண்டவனால் தான் முடியும்”

ஆண்டவனைப் பற்றி முழுமையாக அறிந்திட “அந்த ஆண்டவனால் தான் முடியும்”

 

கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.

கோவில் என்னும் இடத்தைப் புனிதம் ஆக்கி… அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணம் எல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள் தான்… இன்று இந்நாட்டில “நாம் வாழும் நாட்டில் அமைந்துள்ள பல கோவில்கள்...”

கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன் செல்வம் இல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத் தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாடு வைத்துள்ளார்கள்.
1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான் அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
2.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியிலிருந்து சகல அருளையும் தான் பெற்று
3.கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு வரும் பக்தர்களின் எண்ணத்தை எல்லாம் தன் நிலையில் ஈர்த்து
4.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
5.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்தரிஷிகளும் ஞான ரிஷிகளும் தான்.

இந்த நாட்டில் தோன்றிய ரிஷிகளும் ஞானிகளும் அவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் அமர்ந்து… அழியா உடலும் அழியா ஆத்மாவும் பெற்றுச் செய்யும் செயலினால் தான்… இத்தேசத்தில் இன்று மக்களின் மனதில் “ஒரு ஒற்றுமை நிலையும் தவறுக்குப் பயப்படும் நிலையும் இருந்து வருகின்றது…”

அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் இன்று உள்ளளவும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல் தான் நாமெல்லாம் இருந்திருப்போம்.

1.”நாம் செய்த பாக்கியம்” அன்று தோன்றிய நம்முடனே கலந்துள்ள நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
2.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் ரிஷிகள் தாம் கலந்துள்ளனர்.

நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர் நமக்குத் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும்…? என்று எண்ணம் கொள்ளலாம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ… ஜாதி மத வேறுபாட்டினாலேயோ வருவதல்ல.

நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ்வீஸ்வரனின் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும் நமக்கும் உயர்ந்த ஞானம் பெற்ற “அத்தேவர்களை வணங்குவது தான்” நம் ஆத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.

ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.

யாராலும் என்பது…
1.ஆண்டவன் என்பவன் எங்கிருக்கிறான்…? அச்சக்தியின் ரூபமென்ன…? சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய
2.இன்று ஆண்டவன் என்ற ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபம் அளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி
3.நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலை கொண்டு வாழும் பல பெரியோர்களைக் கேட்டாலும்
4.எந்த ரிஷித் தன்மை பெற்றவர்களானாலும் எந்த ஞான நிலை பெற்றவரினாலும்
5.ஆண்டவன் என்ற ரூபத்தைக் கண்டறிய முடியாது… கேட்டறிய முடியாது.
6.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண “அவ்வாண்டவனால் தான் முடிந்திடும்…”

சக்தியின் அருள் பெற்று ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே… தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு… அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள உணர்ந்து கொள்ள… இவ் ஆத்மாவை அழியா நிலை கொண்டு
1.சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர
2.ஆண்டவன் என்ற ரூபத்தையும் ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?

ஆண்டவன் என்பவருக்கு ரூபமே இல்லை… இல்லை… இல்லை… என்று சொல்வதற்கும் நம் சக்தியில் பொருள் இல்லை. நம் எண்ணம் கொண்டு தான் நம் சுவாச நிலையின் அருளினால்… நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும்.

நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இப்பாட நிலைகளும் இவ்வாண்டவன் என்ற வழிபாடுகளும். எண்ணும்
1.எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
2.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்து சகல அருளையும் பெற்றிடலாம்.