ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2024

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

 
உபதேசங்களை நான் (ஞானகுரு)
1.“வேகமாகச் சொல்கிறேன்…” என்றால்
2.யார் அதைக் கூர்மையாக்க் கவனித்துப் பின்பற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.
 
“என்னமோ” சாமி சொல்கின்றார். அவரிடம் தலைவலிக்கும் மேல் வலிக்கும் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் என்று ஒரு சிலர் இருக்கலாம். சரி அதுவெல்லாம் நீங்கிவிடும் என்று சொன்னால் இப்பொழுது நீங்கி விடுகின்றது ஆனால் இரவு படுக்கப் போகும் பொழுது எனக்குத் தூக்கமே வரவில்லை என்று கேட்பார்கள்.
 
வேதனை ருக்கும் பொழுது தான் தூக்கம் வரவில்லை நன்றாகிப் போகும் தூக்கம் வந்துவிடும் என்று சொன்னால்
1.இப்பொழுது சரிங்க…! ராத்திரிக்குத் தூங்கப் போகும் பொழுது தூக்கம் வராது என்று
2.மறுபடியும் இழுத்துக் கொள்வார்கள்... இப்படியும் உள்ளார்கள்.
 
உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே தபோவன மண்டபத்திலே படரப்பட்டுள்ளது. தியானித்த பின் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு இங்கேயே படுத்திருந்து அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
 
அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்திட ஏதுவாக இருக்க வேண்டும் என்று தான் நேரத்தையும் காலத்தையும் கடத்திச் சென்று எப்படியும் இங்கே முடங்கிப்டுத்துவிட்டு காலையில் செல்லலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
 
இங்கே இருக்கப்படும் பொழுது
1.அருள் உணர்வுகளை என்று ஜீவ அணுவாக மாற்றி ம்” என்று உடலாக ஆக்கி
2.அருள் ணர்வின் சக்திகளை உங்களுக்குள் கூட்டிக் கொள்வதற்கே இதைச் செய்கின்றேன்.
 
மணிக்கணக்கில் பேசி அந்த உணர்வின் அணுக் கருக்களாக மாற்றுவதற்குத் தான் இதைச் செய்வது. உங்களிடம் பேசிச் சொல்லும் போது
1.எனக்குள்ளும் அணு கருக்களாக விளைகின்றது நுகர்ந்தவர் உணர்வுக்குள்ளும் அந்த அணுக்கள் விளைகின்றது.
2.தீமை அகற்றும் சக்திகளாக நமக்குள் பெருகுகின்றது
3.நாம் விடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப்ரவுகின்றது.
 
விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷமான கதிரியக்கப் பொறிகளை விண்ணிலே செலுத்தி விட்டதால்… அவ்வாறு பரவப்பட்ட அந்தக் கதிரியக்கங்களினால்… விஷத்தைத் தடுத்து நிறுத்தும்… நம் பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையும் கிழிந்து விட்டது…”
 
ஆகையினால் விண்ணிலிருந்து வரும் விஷங்கள் அதிலே வடிக்காதபடி நேரடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றது நம்முடைய காற்று மண்டலத்தில் படர்கின்றது.
 
எங்கெங்கெல்லாம் இது படர்கின்றதோ விஷத்தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டோர் உணர்வுகளிலும் துரித கதியில் பரவுகின்றது அவர் உடல்கள் பாதிக்கப்படுகின்றது.
 
ஓசோன் திரை கிழிந்திருந்தாலும்
1.நாம் கூட்டு தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரப்பி விட்டால்
2.நம் உணர்வுகள் வலுப்பெறும் போது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.
 
தனி ஒரு மனிதனால் முடியாது…! நாம் பலரும் சேர்த்து ஆங்காங்கு கூட்டு தியானங்கள் நடத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை பரப்பிக் கொண்டால் “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது…”
 
நஞ்சின் தன்மை வந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.தை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது.
 
விஞ்ஞான அறிவு கொண்டு பல நிலைகள் செயல்பட்டு இருந்தாலும் மெய் ஞான அறிவு கொண்டு அதை வெல்ல முடியும் அந்த மெய்ஞான அறிவை உங்களுக்குள் வளர்க்கலாம்.
1.நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் விளைந்து
2.அதை எல்லாம் நீங்கள் பெறும் தகுதியாக இப்போது உருவாக்குகின்றோம்.
 
ஆகவே எண்ணிய உணர்வை “ஓ” என்று ஜீவனாகி “ம் என்று அணுவாக உருவாக்கும் ஈசனை மதிப்போம். அவனே நமக்குள் இருந்து இயக்குகின்றான் என்ற நிலையில் அவன் நாமத்தைச் சொல்வோம்.
 
நாம்ண்ணிய உணர்வுகள் கடவுளாக இயக்குகின்றது. ஆகவே
1.அருள் ஒளியை ண்ணும் பொழுது – ம்” என்று ஜீவ அணுவாக மாற்றி
2.அதுவே கடவுளாக இருந்து தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.