ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2024

ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை

ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை

 
உயிரணுக்கள் இம்மண்டலம் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களிலும் கணக்கிலடங்கா மண்டலங்களிலும் உயிரணுக்களும் ஜீவராசிகளும் வாழ்கின்றன.
 
ஒன்றை ஒன்று பின்னியே வாழும் உயிரணுக்கள்
1.அவ்வுயிரணுக்கள் வாழ ஒன்றை ஒன்று அழித்தே ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றே
2.அழித்த நிலையிலும் மற்றொன்றின் சக்தியைத் தான் பெற்றே
3.ஒன்றில் ஒன்று பின்னியுள்ள உயிரணுக்கள் ஒன்றை ஒன்று அழித்துத் தான் ஒன்றிலிருந்து ஒன்று சக்தி பெற்று
4.இம்மண்டலம் பிற மண்டலங்கள் எல்லாமே சுழல்கின்றன.
 
இப்பூமி (மட்டும்) என்று எப்படிச் சொல்வது…?
1.மற்ற எல்லா நிலைகளிலும் உள்ள எதுவுமே அழிவதில்லை.
2.அழிவு என்ற நிலை ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் நிலையாகத் தான் அழியும் நிலை என்ற நிலையும் உள்ளது.
 
எல்லாமே எங்கு செல்கின்றன…?
 
இம்மனித உயிரணு உயிர் ஆத்மா இவ்வுடலை விட்டு மறு உடல் எடுக்கும் பொழுது அதன் நிலைக்கு வேண்டிய உயிர்ச்சத்தை எடுப்பதற்கு இக்காற்றினுள் கலந்துள்ள பல கோடி ஜீவ அணுக்களின் சத்தைத் தன்னுள் ஈர்த்துத் தன் நிலைக்கு ஏற்ப உடலுக்கு வருகின்றது.
 
உடலை விட்டுப் பிரியும் ஆத்மாக்களும் அவ்வாத்மாவிற்கு வேண்டிய சத்தை இக்காற்றினிலிருந்து ஈர்த்துச் சுற்றிக் கொண்டே உள்ளது மறு உடல் எடுக்கும் வரை.
 
இம்மண்டலங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு. கல் மண் காற்று தண்ணீர் எல்லாவற்றிற்குமே ஜீவன் உண்டு. இவ்வுலகினிலே இவ்வுலகம் மட்டுமல்ல
1.இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை.
2.பூமித்தாயும் ஜீவனுடன் தான் சுற்றுகின்றாள்.
3.இப்பூமியில் விளையும் எல்லா தாதுப் பொருள்களுக்குமே ஜீவன் உண்டு.
 
பல வகை உலோகங்களை பூமியிலிருந்து பிரித்து எடுக்கின்றோம். நாம் அதைப் பிரித்து எடுக்கும் நாள் வரை அந்த உலகத்திற்கு ஜீவன் உண்டு. தாமிரம் தங்கம் வைரம் என்று பல உலோகங்களை நாம் இவ்வுலகில் இருந்து பிரித்து எடுக்கும் நாள் வரை அதற்கு ஜீவன் உண்டு.
 
உதாரணமாக… மண்ணுக்குள் விலையும் வைரம் சூரியனில் இருந்து வரும் ஒளிக் கதிர்களில் இருந்து தனக்குகந்த நிலை கொண்ட சத்தைப் பிரித்து எடுத்து ஈர்த்தெடுத்து விளைகிறது.
1.அதை நாம் பிரித்து எடுக்கும் நாள் வரை அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
2.அதை வெட்டிய பிறகு தான் அது வளரும் தன்மையை இழக்கின்றது.
 
மற்ற உலோகங்களும் நிலக்கரி பூமியிலிருந்து ஊற்றாக எடுத்திடும் ரசாயன முறை கொண்ட பல வகைத் திரவ வஸ்துக்களும் பூமியிலிருந்து கிடைக்கும் எல்லாவற்றின் நிலைகளும் உயிர் என்னும் ஜீவனுடன் தான் உள்ளது.
 
நாம் வாழும் பூமியை போல் உள்ள எல்லா மண்டலங்களிலுமே இதே நிலையில் தான் ஜீவனுடன் தான் சுற்றுகின்றது.