ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2024

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”


நம் முன்னோர்கள் ஜெபித்த நிலை பூஜை முறை எல்லாமே அன்று இருந்த சித்தர்களின் ஜெப நிலையில் இருந்து அறிந்து வெளியிட்ட சக்தி நிலைகளை வைத்துத் தான் நம் முன்னோர்கள் ஆண்டவனை நாம் ஜெபிப்பதற்குக் கோவில்கள் பூஜை முறை என்று பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
1.48 மண்டலங்களின் தொடர்புடைய இப்பூமியின் ஈர்ப்பு நிலையை உணர்ந்து
2.48 மண்டலங்களில் இருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.
 
இப்பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இப்பூமியில் உள்ளதைப் போல் இப்பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது.
 
இம்மனித ஜீவாத்மாக்கள் இந்த 48 மண்டலங்களிலும் இல்லை. இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான் பூமியில் உள்ள மனிதர்களின் நிலை எல்லாம் உள்ளன.
 
இப் பூமியின் நிலையே இக்கலி முடிந்து கல்கி வந்த பிறகு பெறக்கூடிய உயிர் நிலைகளின் உருவ அமைப்புகள் மாறுபட்ட தன்மையில் தான் புதிய உயிரணுக்கள் எல்லாம் தோன்றும் நிலையில் உள்ளது.
 
1.மனிதன் பெண் ஆண் என்ற இன வேறுபாட்டுடன் வாழும் தன்மையில் இன்றுள்ள நிலை
2.அடுத்து வரும் கல்கி நிலையில் மாறுபட்ட நிலையில் தான் வருகின்றது.
3.வரும் உண்மைகளை இன்றே நாம் பகர்ந்து விட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலை நமக்கு எதற்கு…?
 
இந்நூலில் நாம் அறிந்த பல உண்மைகளை சிறுக சிறுகத்தான் அருளி உள்ளோம். இந்நிலையில் இன்னும் பல உண்மை நிலைகள் உள்ளன. அவரவர் எடுக்கும் ஜெப நிலையை கொண்டு அறிந்திடலாம்.
 
அனைத்தையுமே. ஒரு மண்டலம் - 48 நாள் என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதும்
1.நமக்கு முதலில் இருந்த சித்தர்கள் கடும் தவம் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மண்டலம் என்ற 48 நாளை ஜெபத்திற்கு உகந்ததாக எடுத்து ஜெபம் பெற்று அறிந்தனர் பல உண்மைகளை.
4.அதன் வழியில் வந்தது தான் இன்று ஒரு மண்டலம் 48 நாள் என்னும் முறையயெல்லாம்.
 
நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்கு புரிந்துவிடும்
 
நம் கண்ணிற்கு நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது கணக்கில் அடங்க நட்சத்திரங்களைக் காணுகின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியை காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன.
 
1.இம் மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இம்ம மனித உடலை பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
2.நம்மைக் காட்டிலும் திறம் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன பல மண்டலங்களில்.
 
ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை.
 
நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. இவ்வுலகிலே நாம் இப்பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தை ஜெபம் பெற்று எண்ணத்தையும் நினைவையும் என்றும் நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தி ஆக்கி
1.இக்கலி எனும் காலத்தில் மீண்டும் கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு
2.நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
3.இப்பாட நிலைக்கு ஈஸ்வரபட்டனாகிய நான் ஆசை என்னும் நிலை கொண்டே இந்நிலையில் வந்து அருளியுள்ளேன்.
4.ஒவ்வொருவரும் கால நிலையை கடத்திடாமல் அருள் பெறுங்கள்
 
இவ்வுலகில் பல நிலைகளை இன்னும் உங்களுக்கு விளக்குவேன்.