ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2024

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?


கிறிஸ்து பிறந்தநாளில் வான மண்டலத்திலிருந்து புதிய நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசமான ஒளி தந்ததை அன்று வாழ்ந்து வந்தவர்களில் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.
 
வான மண்டலத்தில் தோன்றிய அந்நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இப்பூமியின் மேல் எப்படிப் படிந்தது…? என்ற நிலையென்ன…?
 
இப்பூமி சுழலும் வேகத்தில், பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்களை இப்பூமி ஓடும் ஓட்டத்தில் காண்கின்றது.
 
இப்பூமி சுழன்று ஓடும் வேகத்தில் அங்கங்குள்ள அமில நிலையினால் உருப்பெற்ற இந்நட்சத்திர மண்டலங்கள் இப்பூமியின் ஈர்ப்பில் சிக்கி இப்பூமியுடன் வந்து சேருகின்றது.
 
நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவதுதான்.
 
1.நட்சத்திர மண்டலத்திற்கும், பால்வெளி மண்டலத்திற்கும், நம் பூமியின் சக்திக்கும்
2.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு,
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாய் இருந்திட்டால்
4.இப்பூமியின் பிடிப்புடன், அந்நட்சத்திர மண்டலத்தை இப்பால்வெளி மண்டலத்திலுள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ் ஈர்ப்பு சக்தியில் அந்நட்சத்திர மண்டலம், இச் சூழலும் வேகத்தில் பட்டு,
6.ஒன்றுக்கொன்று திடமாய் உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்நட்சத்திர மண்டலமே
7.இப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன், கரைந்த அமிலமாய், இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.
 
இந்நிலைப்போல்தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்‌.
 
இப்பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில் அதனதன் அமில சக்தியின் தொடர் நிலைகொண்ட நட்சத்திர மண்டலங்களெல்லாம்அது ஈர்த்து, செயல் கொண்ட சக்தியிழந்து, அந்நட்சத்திர மண்டலத்தின் ஆத்மாவும் பிரிந்து அதன் சக்தி அமிலம் மற்றப் பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாய்க் கலந்து விடுகின்றது.
 
இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம் மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திர மண்டலங்கள் சுழன்று கொண்டே ஓடி வருகின்றன.
 
இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்
1.இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும்
2.நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் சத்ரு மித்ரு நிலையாய் இருந்தால்
3.இம்மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாய் எரிந்து அந்நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.
 
இவ்வான மண்டலத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன.
 
இப்பூமியில் இருந்து வாழ்ந்து சாதாரண நிலையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமேஇப்பூமியிலிருந்து இப்பூமியைச் சுற்றி படர்ந்துள்ள இக்காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேயே தான் இவ்வனைத்து ஆவி ஆத்மாக்களும் சுற்றிக்கொண்டே உள்ளன.
 
இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.
 
மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ.. இப்பூமியில் உயிரணுவாய் உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.
 
வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாய் மின்னும் சக்திக்குக்கூட இப்பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாய் மின்ன முடியாது.
ஆனால் இப்பூமியிலேயே பிறப்பில் வந்து இப்பிறப்பின் பயனைப் பெற்று சூட்சம நிலைகொண்ட ஆத்மாக்கள் பல இன்று நட்சத்திர மண்டலமாய் ஒளிர்ந்து வாழ்கின்றன.
 
இன்று இப்பூமியில் உள்ள நிலைபோல் மனித ஆத்மாக்களாய் வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இப்பூமியைச் சார்ந்த இந்த 48 மண்டலங்களிலும் இல்லை என்று உணர்த்தினேன்.
 
இதுவே
1.இன்னும் இருபது முப்பது ஆண்டிற்குள் இப்பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களே
2.இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்களே
3.வரப்போகும் இக்கலியின் மாற்றத்தினால்
4.இன்று இப்பூமியிலுள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற சந்திரனில் வாழத்தான் போகின்றான்.
 
இன்று நாம் வாழும் இப்பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சி நிலையினால் வரப்போகும் கல்கியில் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகின்றது.
 
இம்மாற்றத்தின் அசைவினால் இப்பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.
 
1.மனித ஆத்மாக்களினால் இக்கலியின் கொடுமையினால் இவ்வியற்கையின் சக்தி கொண்ட இப்பூமியின் ஆத்மாவே
2.இம்மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத் தான் நம் பூமி சுழலப் போகின்றது.
 
இப்பூமியில் உதித்த மனித ஆத்மாவினால் தான் இக்கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது.