ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2024

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

 
ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்திலே ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தினைக் கவர்ந்து செடியாக அது வளர்கின்றது.
 
இதைப் போன்று தான் ஒரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உடலில் பதிவாகும் பொழுது வேதனை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகிறது.
 
எந்த மனிதன் அந்த வேதனையை நமக்குள் உருவாக்கினானோ அவன் மடிந்தால் அவன் உயிரான்மா நமக்குள் வந்து வேதனைப்படும் அணுக்களாக நமக்குள் நோயாக மாற்றிவிடும்.
 
பின் வேதனைப்படும் புழுக்களாக பூச்சிகளாக பாம்பாக உயிர் உருவாக்கி விடும்.
1.இதைப் போன்ற நிலையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.
2.காரணம் கடும் தீமைகளை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… அந்த உணர்வை நாம் பருக வேண்டும்,
 
ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டுங்கள்.
 
அவன் தான் எண்ணியைதை உருவாக்குகின்றான் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதைப் பெறுவதற்கு
1.எம்முடைய உபதேசங்களை இப்போது கூர்மையாகப் பதிவாக்குவதும்…
2.செவிப்புலனிலே இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டதும் அந்த உணர்ச்சிகளை நீங்கள் நுகர்ந்ததும்
3.அது அனைத்தையுமே உயிர் அணுவாக உங்களுக்குள் மாற்றியதும்
4,மெய்ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் அணுக்களாக அதிகமாகப் பெருக்குவதற்கும் தான்
5.இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
 
இதை நீங்கள் பெற்ற பின் நினைவு கொண்டு வந்து மீண்டும் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
 
அந்த தகுதியைப் பெறும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்… உபதேச வாயிலாகப் போதித்தது.
 
நீங்கள் இதை நுகர நுகர உங்களுக்குள் அணுத் தன்மையாக அது விளைகின்றது. விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அருள் உணர்வை நீங்கள் சேர்த்துக் கொண்டே வந்தால்
2.அதைப் பற்றுடன் பற்றும் நிலை உங்களுக்குள் வருகின்றது.
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நம் பற்று அங்கே இருப்பதால் உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடுகிறது.
 
ஆனால் அதற்கு மாறாக நான் நன்மை செய்தேனே எனக்கு இவன் தீமை செய்கிறானே…” என்று இங்கே பற்றிக் கொண்டால் இங்கே தான் மீண்டும் சுழல வேண்டி வரும்.
 
பழி தீர்க்கும் உணர்வுடன் அவன் உடலுக்குள் தான் செல்ல வேண்டும் அல்லது அந்த உணர்வு நம்மை அழித்துப் பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.
 
இது போன்ற நிலைகளில் இருந்து மீள்தல் வேண்டும்
1.அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்
2.எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.
3.அவர் கற்றுணர்ந்த உணர்வின் அலைகள் இங்கே பரவிப்டர்ந்துள்ளது.
4.குருநாதர் மெய் ஒளி பெற்ற அந்த அருள் உணர்வுகளும் இங்கே படர்ந்துள்ளது…!
5.அதை நீங்கள் பெற வேண்டும்பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
 
கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடல் வேண்டும். இருவரும் ஒன்றாக அருள் ஒளியைத் தனக்குள் அணுக்களாகப் பெருக்குதல் வேண்டும். அந்த எண்ணத்தைக் கொண்டு நல்வினைகளாக மாற்ற வேண்டும்
 
ஒவ்வொருவரும் நீங்கள் அதை பெற வேண்டும்
 
இதன் வழிகொண்டு உங்கள் வாழ்க்கையில் வந்த இருளை மாய்த்துக் கொள்ளுங்கள் மெய்ப் பொருள் காணுங்கள் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்…! என்று எல்லா மகரிஷிகளையும் நான் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு)”