ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2024

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 
மகரிஷிகளின் அருள் ஒளி பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து கடும் நோய்கள் நீங்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் அகன்று அவர்களது குடும்பங்களில் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று அவர்களது குடும்பங்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடலில் அறியாது சேர்ந்த வாத நோய்கள் நீங்கி அருள் ஒளியால் அருள் ஞானம் பெற்று அவர்களின் உடல் நலம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த சர்க்கரைச் சத்து நீங்கி அருள் சுரபிகள் உருவாகி அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அணுக்கள் உருவாகி அவர்களது உடல் நலம் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா
 
இவ்வாறு எண்ணும்போதெல்லாம் உடலில் உள்ள நோய்கள் அது அகன்று செல்வதை உங்களால் உணர முடியும். கடும் நோய்களை நீக்க அனைவரது ஒலிகளும் கேட்ணர்ந்தோர் உணர்வுகளில் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள கடும் நோய்களும் சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் வாத நோயால் உருவான நிலைகளும் விஷத்தால் தாக்கப்பட்டு விஷ உணர்வுகளால் உருவான அணுக்களும் இப்போது அகலும்.
 
அனைவரும் சேர்ந்து ஓதும் இந்த உணர்வுகள் அனைத்தும் அனைவரது உடல்களிலும் படர்ந்து கடும் நோய்களை நீக்க இது உதவும்.
 
ஓம் ஈஸ்வரா.
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இரத்தக் கொதிப்பு அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது உடல்களில் சாந்த உணர்வும் மலரைப் போன்ற மணம் பெற்றிடும் அணுக்கள் வளர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இருதயங்களில் உள்ள அடைப்புகள் நீங்கி இருதயங்கள் சீராக இயங்கி அருள் ஞான ஒளி படர்ந்து தெளிந்திடும் தெரிந்திடும் மனம் பெற்று மகிழ்ந்திடும் உணர்வு பெற்று அவர்களது வாழ்க்கையில் மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நச்சுத்தன்மைகள் அனைத்தும் அகன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து மகிழ்ச்சி பெறும் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்து மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் உடல் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்து வாத பித்த நோய்கள் அகன்று அருள் ஒளி அவர்கள் உடலிலே படர்ந்து அருள் ஞான அணுக்கள் விளைந்து மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மணம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த முடக்கு வாதம் முழங்கால் வாதம் செவி வாதம் மன வாதம் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தி உடல்களில் படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்து தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய அணுக்கள் மறைந்து அருள் ஞான அணுக்கள் வளர்ந்து அருள் வழியில் அருள் ஞானம் பெற்று வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் வந்த வயிற்று வலி நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் ஆற்றல் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி அவர்களது குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானமும் உலகைக் காத்திடும் உலக ஞானம் பெற்று உலகில் தீமைகளை மாற்றிடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
 
இந்நேரம் வரை உபதேசித்த உணர்வை
1.உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து
3.இங்கே வந்தோர் உடல்களில் உள்ள கடும் நோய்கள் நீங்கி அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தியாக உங்களில் விளையும்.
 
நீங்கள் எத்தகைய வேதனையுடன் வந்திருந்தாலும் இப்போது நாம் பாடிய
1.இந்த அருள் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் கருவுற்று தீய வினைகள் அகன்று
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அந்த சக்தி படர்ந்து
3.உங்கள் உடலிலே மகிழ்ச்சி பெறும் நிலையாக நோய்கள் அகன்று
4.உங்களில் அந்த அருள் ஞான சக்தி இப்பொழுது பெருகும்.
5.நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களில் விளையும்.
6.நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்பொழுது நீங்கள் உணரலாம்.
 
கை கால் குடைச்சலோ சர்க்கரை சத்தோ ரத்தக் கொதிப்போ வாத நீரோ மன நோயோ இவை அனைத்தும் அகலும். அருள் ஒளி உங்களில் பெருகும்.
 
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் வளர்ந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வு உங்களில் விளையும்.
 
மகிழச் செய்யும் அணுக்கள் உங்களுக்குள் விளையும் அருள் ஒளி வளரும் மெய்ப் பொருளைக் காணும் திறன் பெறுவீர்கள். உங்களுடைய பார்வையால் உங்களுடைய நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
1.பிறருடைய துன்பங்களைப் போக்கும் அந்த அருள் சக்தி வலுப் பெற்றால்
2.பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடுத்துக் கொள்ள முடியும் உங்கள் உணர்வால்...”
 
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகி மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று உங்கள் மூச்சும் பேச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாக வளர சகோதர உணர்வை வளர்த்திட மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி வாழ்ந்திட அருள் சக்திகள் உங்கள் மூச்சலைகளாகப் படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தி உங்களிலே விளைந்திட எமது குரு அருளைப் பிரார்த்திக்கின்றேன்.
 
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களில் படர்ந்திட
2.மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்திட
3.இந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.இந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி
5.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் கண்ணின் பார்வையிலே வெளிப்பட்டு
6.மகிழ்ச்சி பெறும் சொல்லாக அந்த சீதா ராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
7.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்து
8.நல்ல அரண் உங்களுக்கு உடலாக அமைந்து
9.இந்தப் பிறவியிலேயே அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் நிலையாக
10.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கி உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி
11.உங்கள் உயிரே சொர்க்கவாசலாக அமைத்திட
12.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களில் படர்ந்திட
13.எமது அருளாசி உறுதுணையாக இருந்திட பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட
14.எமது அருளாசியும் குரு அருளும் உங்களுக்குள் உறுதுணையாக விளைந்திட
15.உங்கள் பார்வை தீமைகளை அகற்றிட
16.மெய் வழியைப் பரப்பிடும் ஆற்றல் மிக்கவர்களாக வளர்ந்திட
17.பேரின்ப வாழ்க்கை வாழ்ந்திட
18.இந்த வாழ்க்கையில் என்றும் அழிவில்லா வாழ்க்கை வாழ்ந்திட மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் ஒளி உங்களிலே படர்ந்து
19.உங்கள் மூச்சும் பேச்சும் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகளாக விளைந்திட
20.அருள் மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை வளர்த்திட வளர்ந்திட குரு அருள் உறுதுணையாக என்றுமே இருக்கும்
 
அருள் வழியில் அருள் ஞான குருவாக அருள் வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தி உங்களில் வளர்ந்திடப் பிரார்த்திக்கிறேன் தியானிக்கின்றேன்.
 
இதைப் படித்துணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் இப்போது குறைந்திருப்பதைக் காணலாம் சர்க்கரைச் சத்து நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் நல்ல ரத்தங்கள் உருவாக வேண்டும் அருள் ஞானம் வளர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை அதிகாலையில் துருவ தியானத்தில் ஏங்கிப் பெறுங்கள்
 
இப்பொழுது உருவாக்கிய அருள் ஞான வித்தை…” நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் நினைவால் எண்ணும் பொழுது
1.”உங்கள் உயிரே அதை அணுக்களாக வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உங்களுக்குள் வளர்ந்து மன பலம் பெறச் செய்து
3.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
1.எண்ணியதை உருவாக்குவது உயிரே (ஈசன்)
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருள்வதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
5.நம்மை அரண் போல் காத்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் உயிரே.