ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2024

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் இன்றைய விஷமான உலகிலிருந்து தப்ப முடியும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் இன்றைய விஷமான உலகிலிருந்து தப்ப முடியும்


பக்தி கொண்டு எத்தனையோ கடவுள்களை நாம் வணங்குகின்றோம் நல்ல ஒழுக்கங்களையும் நாம் கடைப்பிடித்திருப்போம்.
 
ஆக நல்ல ஒழுக்கம் கொண்டு இருப்பினும் எதிர்பாராதபடி தீமையான நிகழ்ச்சியோ சம்பவங்களோ நடந்தால்
1.அது நம் நல்ல பண்புகளை நல்ல ஒழுக்கங்களைக் கெடுத்து விடுகின்றது
2.அந்த நேரத்தில் நல்ல குணங்கள் பாடைந்து விடுகின்றது.
3.அத்தகைய தீங்குகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால்
4.நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
5.அதை எடுத்துக் கொண்டால் உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம் பிறவி இல்லா நிலை அடையலாம்.
 
உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
 
இந்தச் சாமி செய்வார் அவர் செய்வார் அந்தக் கடவுள் செய்யும் மந்திரம் செய்யும்…! என்பதையெல்லாம் விடுத்துவிடுங்கள். காரணம் உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான் ஆண்டவனாகவும் இருக்கின்றான். கர்த்தராகவும் இருக்கின்றான் கடவுளாகவும் இருக்கின்றான்.
 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துத் தான் இந்த உயிரை அழைக்கின்றார்கள். கடவுள் என்று ஒரு உருவத்தை எண்ணியே நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
 
நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின்
1.உள் நின்று அதை இயக்கச் சக்தியாக மாற்றுவதே கடவுள் என்றும்
2.அந்த உணர்வு தன் இனத்தை மீண்டும் உருவாக்க அது முற்படும் பொழுது அது ஈசன் என்றும்
3.அவ்வாறு இயக்கிய பின் அணுக்களாக உருவாக்கும் பொழுது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது சிவம் என்றும்
5.இப்படி தெளிவான நிலைகளில் உண்மைகளை நம் சாஸ்திரங்கள் காட்டியுள்ளன.
 
அதை நாம் கடவுள் என்று எண்ண வேண்டாம்…!
 
நம் உட;லுக்குள் இயக்கும் உயிர் தான் கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நம்மைச் செயல்படுத்துகின்றது ன்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
 
விஞ்ஞானத்தினால் உலகமெங்கிலும் எத்தனையோ கொடிய விளைவுகள் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது என்ன…?
 
1.உங்களால் எந்த நேரமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் சக்திகளைப் பெற முடியும்
2.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத்தான் இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்
3.ஆகவே அதை நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
 
எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெறுவீர்கள்…!