ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2024

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

 
ஜீவனுள்ள மண்டலம் ஜீவனற்ற மண்டலம் என்று இரண்டு நிலை பெற்ற மண்டலங்கள் பல சுற்றி கொண்டுள்ளன. ஜீவனுள்ள மண்டலங்களைப் பகர்ந்துள்ளேன் பல நிலையில்.
 
ஜீவனற்ற மண்டலம் எந்நிலையில் வந்தது…? அஜ்ஜீவனற்ற மண்டலங்களில் ஒலி ஒளி காற்று நீர் மற்ற ஜீவராசிகள் எவையுமே அந்நிலையில் இல்லை.
 
வெறும் கல்லும் மண்ணும் கலந்த பெரும் பெரும் கோளங்களாக இருண்ட நிலைகள் கொண்டு அந்தரத்தில் அப்படியே நிற்கும் நிலையில் பல மண்டலங்கள் உள்ளன.
1.அம்மண்டலங்கள் மற்ற மண்டலங்களுடன் மோதும் தன்மையும் இல்லை
2.சூரியன் தன்னுள் அதை ஈர்க்கும் தன்மையும் அதற்கு இல்லை ஜீவனே இல்லாமல் உள்ளன அம்மண்டலங்கள்.
3.வளர்ச்சியும் இல்லை குறைவும் இல்லை
4.எந்த நிலையில் அது பிற மண்டலத்தில் இருந்து ஜீவன் இல்லாத நிலையில் உதிர்ந்ததுவோ
5.அதே நிலையில் அந்த நிலை கொண்டே அது உள்ளது அம் மண்டலங்களுக்கு ஒலியும் இல்லை.
 
இப்பொழுது பூமி சுற்றும் வேகத்தில் ஓம் ஓம் என்ற ஒரு நிலை கொண்ட நாதத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அந்நாதத்திற்குத் தகுந்த மணங்களைத் தான் நாம் பெறுகின்றோம்.
 
நம் பூமிக்கு மேல் பெரிய பூமியான வியாழனின் நாதம் வேறுபடுகின்றது. நம்மைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரன் செவ்வாய் இப்படிப் பல மண்டலங்களின் நாதமும் வேறுபட்டுத் தான் உள்ளது.
 
அதனதன் ஈர்ப்புத் தன்மையைக் கொண்டும் அவை சுற்றும் நிலையைக் கொண்டும் அவற்றின் நாதம் வேறுபடுகின்றது.
1.சூரியனின் வேகம் வெகு துரிதமாக உள்ளதால் அதனுடைய வேகத்தைக் கொண்டு
2.அதனுடைய ஓங்கார இசை பெரும் ஓசையான -…” என்றே தான் அதுவும் சுற்றுகின்றது.
 
இம்மண்டலங்களின் ஒவ்வொன்றின் நிலையையும் ஊன்றிப் பார்த்தால் பல உண்மை நிலைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம்.
 
இப்பொழுது இப்பாடநிலையில் வரும் மண்டலங்களின் தன்மையை வைத்து இதைப் படித்திடும் ஒவ்வொருவரின் நிலைக்கும்
1.அவரவர்களின் நிலைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றி இந்நிலையின் தத்துவம் உண்மையா…? என்ற வினாவும் எழுந்திடலாம்.
2.இந்நிலை கொண்ட வினா எழும்பத்தான் இப்பாட நிலையே வந்துள்ளது.
கண்டார் விண்டதில்லை விண்டார் கண்டதில்லை என்று உரைப்பர் நம் முன்னோர். நாம் நம் ஜெப அருளினால் கண்டுள்ளோம் இவ்வுண்மையை. நாம் அறியா உண்மை பலவும் உள்ளன.
 
இவ்வுலகினில் உதித்துள்ள மனித உயிரணுக்கள் எல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையால்
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல. தனித்து நிற்பவை எவையும் இல்லை.
2.எல்லாவற்றிலுமே எல்லாமாகக் கலந்துள்ள நாம் நம் உயிராத்மாவை பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
3.இவ்வுலகத்தின் உண்மை மட்டுமல்ல பல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.
 
ஆனால் இன்று நம்மில் இருந்து நம்முடன் கலந்து பிறந்த பல ஜீவாத்மாக்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தன்னைத்தானே அழிக்கும் நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லும் நிலைக்காகப் பல நிலைகளை விஞ்ஞானத்தில் சென்று காண பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.
 
நல்வழிக்குச் செய்திடலாம். ஆனால் ஒருவர் செய்வதை ஒருவன் அழிப்பதற்காக இவ்வுலகின் காற்று மண்டலத்தில் காற்று மண்டலத்திற்கு மேலும் பல நிலை கொண்ட விஷ ஊசிகளை (இராக்கெட்டுகளை) ஏவி விட்டிருக்கின்றார்கள்.
 
அவன் செய்து அனுப்பிய விஷ ஊசிகள் அவனைத் தாக்காத நிலை கொண்டு அவன் அனுப்பும் கூடுகளை அவ்விஷ ஊசிகள் வந்து தாக்கினாலும் பாதிக்காத தன்மையில் பல நிலைகளில் பறக்க விட்டுள்ளான்.
 
பிற மண்டலங்களின் நிலையை அறிந்திட தன்னைத்தானே அழித்து ஒருவனுக்கு மேல் பொறாமை கொண்டு விஞ்ஞானம் என்ற நிலையில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏனப்பா அந்த நிலை பெற வேண்டும்…?
 
அன்றிலிருந்து இன்று வரை பல சித்தர்கள் பல உண்மை நிலைகளைத் தன் எண்ணத்திலும் தன் ஜெபத்திலும் ஈர்த்து எடுத்துத் தன் உடலுடனே பறந்து பல மண்டலங்களுக்குச் சென்று பல ஆற்றல்களை அறிந்து அவர்கள் எழுதிய பல நூல்கள் தானப்பா இன்றைய விஞ்ஞானிகள் ஆராயும் தன்மை கொண்டு நடத்தி வரும் நாடகங்கள் எல்லாம்.
 
அந்நாடகத்தின் நிலையினால் தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?
 
உண்மை நிலைதனை ஜெப நிலை கொண்டு அறிந்திடத் தான் நாம் அறிந்த உண்மைகளை இந்த நூல் வழியில் ஒவ்வொருவரும் அறிந்து நல் ஜெபம் பெற்று நடத்திடத் தான் இப்பாட நிலை.
 
இப்பாட நிலையில் உள்ள கருத்துக்களின் உண்மையை அறிந்திட ஒவ்வொருவருமே ஜெபத்தில் இருந்து கண்டிடலாம்.
1.எல்லோருமே அச்சக்தியின் சக்திகள் தான்
2.ஜெபம் பெறும் நிலையில் இது உண்மைகளை எல்லோரும் அறிந்திடலாம்.