ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2024

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே


இவ்வுலக நிலையினிலே நாம் பெறும் சக்தி நிலை கொண்டே ஒவ்வொரு உயிரணுவின் நிலையும் மனிதர்களின் நிலையும் உள்ளதுவே.
 
1.நாம் எந்த நிலையில் வசிக்கின்றோமோ அந்த நிலை கொண்ட பழக்க வழக்கங்களும் இந்நிலை கொண்ட சுவாச நிலையும்
2.ஒவ்வொரு தன்மையில் கூடி வசிக்கின்ற மனிதர்களின்
3/எண்ண நிலைகளும் உருவ அமைப்புகளும் எப்படி ஏறக்குறைய ஒன்று போல் உள்ளனவோ
4.அவற்றை ஒத்துத் தான் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலையும் சுவாச நிலையும் உள்ளன.
 
இன்று உலகில் ஒவ்வொரு பாகத்திலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம் வாழ்க்கை முறை இதைப் பொறுத்து அங்காங்கு வாழும் மக்களின் வாழும் வாழ்ந்திட்ட காலத்தில்
1.அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ அந்த நிலைகொண்டே
2.அவர்கள் ஆவி பிரிந்து அந்தந்த நிலையில் அவ்வாவிகள் சுற்றிக் கொண்டே உள்ளன.
 
இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்தத் தேசத்தில் தெய்வப்பற்றும் ஒற்றுமைப் பற்றும் கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும் அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்ற நிலைதனிலே இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுபோல் சுற்றிக் கொண்டுள்ளதினால் அத்தெய்வத்தையே கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.
 
தன் சுவாச நிலைக்கு ஏற்ப அந்த நிலை கொண்டு தான் இங்குள்ள மக்களின் மனோநிலையும் தெய்வ பக்தியும் தன் எண்ணத்திற்கு உகந்த நிலை கொண்டு இங்கு சுற்றியுள்ள ஆவிகள் கோவிலுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில் நிலையில் என்னும் பொழுது
1.அவ்வாவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்லுவதும்
2.சாமி வந்து வாக்குச் சொல்கிறது என்பதும் அருள் வந்து ஆடுவதும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்நாட்டில் தான்.
 
நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாஷையில் வந்ததுவே இந்நிலை இந்நாட்டினிலே. இந்த நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.
 
அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் எத்தன்மையில் அங்குள்ளனவோ தன் நிலை கொண்ட வாழ்க்கை வாழ்ந்த நாட்டில் பக்தி தெய்வப்பற்று என்ற நிலைகளை எல்லாம் எந்தெந்த நிலை கொண்டு அங்குள்ள மக்கள் வழி நடத்திச் சென்றார்களோ அந்தந்த நிலை கொண்டு தான் அங்கு வாழ்ந்தவர்களின் ஆத்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.
 
அந்த நிலைகொண்டே அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு உள்ள நிலை.
 
பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…? இங்கு மட்டும்தான் ஆண்டவன் உள்ளானா…? இங்கு தான் அருள் வருமா…? ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்…? என்றெல்லாம் இங்கு மற்ற பாகங்களின் உள்ளவர்களின் எண்ணத்திலே.
 
இங்கு ஆண்டவனின் நிலை நம் சித்தர்கள் நமக்கு உணர்த்திய நிலையை நாம் ஏற்றுக் கொண்ட நிலை கொண்டு வந்ததுவே இந்நிலை.
 
இன்னும் பல பாகங்களில் பல நிலை கொண்டு ஆண்டவனை எண்ணி பல வழிகளில் வணங்குகிறார்கள்.
1.அவர்களெல்லாம் எந்த நிலையில் நம் ஆண்டவனின் அருள் வருகிறது…? என்ற
2.புரியாத நிலை கொண்டு வணங்குகிறார்கள்.
 
இன்று இவ்வுலகினில் எல்லாப் பாகங்களிலுமே தன்னைத்தான் நம்பாமல் ஜோசியம் என்ற நிலையில் நம்பி வாழுகின்றார்கள். அந்த நிலையில் எல்லாம் யார் வந்து சொல்கிறார்கள் என்று உணராமல் பல ஆவிகளின் தொடர்புடன் தன்னைத்தான் நம்பாமல் பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே.
 
ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது.
1.அந்நிலைக்கே அடிபணிகின்றான் ஆண்டவனின் ரூபமாக
2.அவ்வாவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழுகின்றான்.
 
எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன…? அவ்வாவியே வந்து நமக்கு நல் உபதேசம் அளிக்கும் பொழுது பல நன்மைகளை நமக்கு அது செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது…? என்று எண்ணிடலாம் எல்லோரும்.
 
ஆவிகளின் நிலை எல்லாம் எம் மனிதன் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ அதே நிலையில் அம் மனிதன் உள்ள நாள் வரை தான் அது மனிதனுக்கு உதவி செய்திடும்.
 
அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவி வந்ததோ அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அவ்வாவிகளின் நிலை எல்லாம்.
 
இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு
1.தன் எண்ணத்தையும் தன் செயலையும் தன்னைத்தான் நம்பும் நிலையையும்
2.தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் தந்திடாமல்
3.தன் உணர்வின் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையில்
4.அவன் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் கொண்டே நல் நிலை பெற்று வாழ்ந்திட வேண்டும்.
 
பூமியில் மனிதராகப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலையெல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இவ் உடலில் வாழ்ந்திடவில்லை. பல அணுக்களின் நிலை எல்லாம் மனிதர்களின் நிலைக்கு வந்து தாக்கித்தான் இம்மனிதன் வாழ்கின்றான்.
 
ஆகவே… நல் உணர்வை எடுங்கள்…!
 
இவ்வுலகுடனே மட்டும் நாம் வாழவில்லை. இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தொடர்புடைய 48 மண்டலங்களுடன் அம்மண்டலங்களுக்குத் தொடர்புடைய பல நிலை கொண்ட மண்டலங்களின் தொடர்புடனும் வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்து
1.நாம் இந்நிலை கொண்டு வாழ்வதற்கு
2.எந்தெந்த நிலையில் இருந்தெல்லாம் நமக்குச் சக்தி கிடைக்கிறது…? என்பதனை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.