ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2024

சூரியனின் இயக்கம்

சூரியனின் இயக்கம்


இன்று இப்பூமியில் நாம் உயிர் வாழ்ந்திட நாம் மட்டுமல்ல இப்புவியில் உள்ள எல்லா உயிரணுக்களும் உயிர் வாழ்ந்திட காற்றும் நீரும் அவ்வொளியும்…” ஒளி என்பது சூரியனின் சக்தியிலிருந்து ஒளிக்கதிர்கள் இவ் பூமியில் வந்து தாக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றேன்.
1.இந்நிலை எல்லாம் இல்லாவிட்டால்
2.இப்புவிதனிலே உயிர் அணுக்கள் இல்லை.
 
அச்சூரியனுக்கு இந்நிலைகளைப் பூமிக்கு அளிக்க அச்சூரியனின் சக்தி எந்நிலையில் உள்ளது…?
 
இப்பூமி ஒரு முறை சுற்றிவர தன்னைத்தானே 24 மணி நேரம் ஆகின்றது என்று இந்தக் குறிப்பிட்ட கால நிலைகளை வைத்து ஒரு நாளைக் குறிப்பிடுகின்றோம்.
 
இங்கு எப்படி நாம் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்று சொல்கின்றோமோ அதைப்போல் இல்லாமல் அச்சூரியனின் சுற்று அதி விரைவாக உள்ளது. அதாவது 12 மணி நேரம் என்னும் நிலையில் நாம் இங்கு ஒரு நாள் என்று குறிப்பிடும் நிலை அச்சூரியனின் சுற்றில் இரண்டு நாளாக உள்ளது.
 
அச்சூரியனிலிருந்து எப்படி நமக்கு ஒளி கிடைக்கின்றது…? அச்சூரியனின் தன்மை என்ன…?
 
சூரியனில் சரி பாதி நிலமும் சரி பாதி நீரும் உள்ள நிலையில் பல உயிரினங்களும் உள்ளன.
1.சூரியனைப் போல் உள்ள பல சூரியன்களின் ஒளியின் கதிர்கள் நம் சூரியனில் அவ்வொளிக்கதிர்கள் படும் நிலை கொண்டு
2.மற்ற மண்டலங்களில் உள்ள ஈர்ப்பு தன்மையைத் தன்னில் ஈர்த்து அச்சூரிய மண்டலம் வெகு விரைவில் சுற்றுகிறது.
 
சூரியன் சுருங்கி விட்டது என்று இன்றைய நிலையில் சொல்கின்றார்கள். அச்சூரியனின் சக்தியும் எடையும் சுருங்கவில்லை. முதலில் என்பது நாளும் வருடமும் குறிப்பிடாத நிலையில் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
 
பூமி எப்படி மற்ற மண்டலங்களின் நிலையை ஈர்த்துச் சுழல்கின்றதோ அதைப் போல் அச்சூரியன் மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை ஈர்த்துச் சுழன்று கொண்டே உள்ள நிலையில் அதன் எடை எப்படிக் குறையும்…? ஈர்ப்பு நிலை பெறப் பெற அதன் சக்தி நிலை தான் அதிகம் பெற்றுச் சுழல்கின்றது.
 
1.சூரிய மண்டலத்திற்குச் செல்ல முடியாது. பெரும் நெருப்புக் கோள் போல் உள்ளது என்று நினைக்கின்றோம்.
2.அச்சூரியமண்டலமும் நாம் வாழ்ந்திடும் நாம் வாழும் பூமியின் நிலை போல் தான் நீருடனும் நிலத்துடனும் காற்றுடன் சுற்றிக் கொண்டுள்ளது.
 
சூரியனிலிருந்து நாம் பார்க்கும் ஒளி அது தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் அக்காற்றும் அக்காற்றுடன் கூடிய அணுக்கதிர்களும் அதிவேகத்தில் சுற்றும் பொழுது இவ்வொளியின் தன்மை நாம் பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுப் இப்பூமியில் வந்து தாக்கி இப் பூமியையே சுழல வைக்கின்றது.
 
ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒன்றிலிருந்து ஒன்று அவ்வொளியின் சக்தியைப் பெற்றுச் சுழன்று கொண்டே தான் உள்ளது. நம் பூமிக்குச் சூரியனின் ஒளி மட்டுமல்ல சந்திரனின் ஒளி மட்டுமல்ல மற்ற எல்லா மண்டலங்களில் உள்ள அணுக்களின் தன்மையும் பெறுகின்றோம்.
 
சூரிய மண்டலத்திற்கு மேல் உள்ள மண்டலங்களின் நிலை கொண்டே அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது. அதைப்போல இப்பூமியின் சுழற்சியின் நிலை கொண்டு சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கே கூட பூமியின் அணுக்கதிர்கள் செல்கின்றன.
 
இப்பூமி தனியாக இயங்கவில்லை 48 மண்டலங்கள் என்று உரைத்தேன். ஒவ்வொரு மண்டலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுற்றிக்கொண்டே உள்ளன.
 
நெருப்புக் கோளங்கள் என்ற நிலை எங்குமே இல்லை. ஒவ்வொரு மண்டலமும் சுழலும் வேகம் கொண்டு தான் ஒளியும் ஒலியும் நாம் பெறுகின்றோம்.
 
1.எல்லா மண்டலங்களிலுமே நீரும் நிலமும் உண்டு உயிரணுக்கள் உண்டு
2.ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு நிலை கொண்ட உயிரணுக்கள் உயிர் வாழ்கின்றன.
 
எல்லா மண்டலங்களும் ஒன்று போல் உருண்டை வடிவத்தில் இல்லை என் நம் பூமியே இல்லை…! உருளும் தன்மையை வைத்துப் பந்து போல் உருண்டையாக உள்ளது என்கின்றார்கள்.
 
இமயமலையும் பனிமலையிலும் உள்ள நிலைகளில் எப்படியப்பா உள்ளது பந்து போன்ற நிலை…? ஒவ்வொரு இடத்திலும் இந்நிலையே ஒவ்வொரு நிலை கொண்ட ஏற்றத்தாழ்வுடன் உள்ள பொழுது உலகம் பந்து போல் உருண்டையாக இருக்கிறது என்கின்றார்கள்.
 
ந்து போல் இருந்திட்டால் அச்சூரியனிலிருந்து விழும் ஒளிக் கதிர்கள் காலை மாலை என்ற நிலை இவ்வுலகனைத்திலும் ஒன்று போல் அல்லவா இருக்க வேண்டும்.
 
சில நிலைகளில் அச்சூரியனின் ஒளியே படாத நிலையான இடம் இருக்கின்றதல்லவா. உலகத்தை உருண்டையாகவும் தட்டையாகவும் கால நிலைக்கு ஏற்ப மனிதர்கள் யூகம் கொண்டு பல விஞ்ஞான நிலையில் பார்க்கும் பொழுது உருண்டை வடிவம் என்றும் தட்டையான நிலை என்றும் இன்றளவும் ஆராய்ந்து கொண்டே உள்ளனர்.
 
எந்த ஒரு பொருளும் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது உருண்டை வடிவமாகவோ நீண்ட வடிவமாகவோ தான் தெரியும். இந்நிலை வைத்து நம் யூகத்தில் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொண்டே வாழ்கின்றோம்.
 
சந்திர மண்டலத்தின் நிலை முக்கோண வடிவினிலே குமிழ் வடிவினிலே மேலும் பள்ளம் கொண்ட நிலையாகத் தான் உள்ளது.
 
1.ஒவ்வொரு மண்டலமும் ஒன்றைப் போல் ஒன்று இல்லை.
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றிக் கொண்டு நிலையான நிலையில் தான் உள்ளது.
3.இப்பூமி தனி பூமியும் அல்ல. இவ் பூமியில் உள்ள உயிரணுக்கள் எதுவுமே தனி அல்ல
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்திடும் நாம் இணையில்லா வாழ்வு பெற்று என்றும் நிலைத்து வாழ்ந்திடவே இப்பாட நிலை.