ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2024

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு


இன்றளவும் இப்பூமியின் நியதியையும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும் ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும் இப்பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித்தொடரையும் சிறுகச் சிறுக உணர்த்தி வந்துள்ளேன்.
 
இனி நாம் எந்நிலை கொண்ட ஜெபத்தினால் இக்கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிடல் வேண்டும்.
 
இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திட நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெயத்தினால் தான் இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே.
 
இப்பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான்
1.இப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாய்
2.மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.
 
இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களின் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல் இந்த ஞான வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களில் வாழ்ந்த ஆத்மாக்களே இப்பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.
 
நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள்தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுட்காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.
 
1.நாம் அறிந்திடாமல் நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் பலர் உள்ளனர்.
2.ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல், ஒரே உடம்பில் வாழ்ந்திடும், எண்ண வளர்ச்சி நிலையில்லாத
3.ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம உடல் பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
4.இந்நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.
 
இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இம்மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது.
 
ஆனால் நாம் அறிந்திடாமல் இப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக அறிவு வளர்ச்சியற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறுகொண்டதாக உள்ளது… மிருகங்களின் நிலைக்கொப்ப
2.ஆனால் அவ்வுடல்களில் எவ்விஷத்தன்மையும் பாய்ந்திடாது.
 
காடுகளில் பாம்பு, நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ அப்படியே தன் இன வர்க்கத்தை இவ்வெளியுலக பிடிக்குச் சிக்கா வண்ணம் அவ்வுடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.
 
ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித்தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும் இவ்வியற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டும் மாளப்போகின்றன.
 
இவ்வெளி உலகப் பார்வையில் சிக்காமல் இப்பூமியில் மனித ஆத்மாவாய் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மனித இன வர்க்கம் எல்லாம் இக்கலியிலும் ஜீவன் பிரியாமல் வரப்போகும் கல்கியிலும் வழித்தொடர் பிடித்தேதான் வாழப் போகின்றனர்.
1.அவர்களின் எண்ணத்தில் இம்மாற்றமும் இவ்வியற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது.
2.இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அவ் உடல்களை பாதிக்காது.
 
எண்ண நிலையேயில்லாமல் குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழிவந்த ஆத்மாக்களுக்கு நம்மைக் காட்டிலும் வீரிய சக்தி பெற்றுள்ளபோது ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம் நம் ஆத்மாவை விஷக்காற்றிலிருந்தும் விஷமாய் இவ்வுலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ்வெண்ண நிலையின் தாக்குதலில் இருந்தும்
1.எவ் அணு வெடிகள் நம் மேல் பாய்ந்தாலும் நம் உடலில் உள்ள அத்தீய சக்தியை ஏற்கா வண்ணமும்
2.நம்மை நாம் இவ்வொளி ஒளியாய் ஒளிர்ந்திடும் சக்தியில் நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.
 
இப்பூமியிலே நம்மைப் போன்ற ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தி உணர்ந்து சூட்சும நிலை கொண்ட பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட அவர்களின் வழித்தொடர் நமக்கும் கிட்டும்…
 
1.இவ்வுலகில் தோன்றிய ஆசை நிலையினால் இவ்வுலகைக் காத்திடும் ஆசையிள்
2.பல ஆத்மாக்களை இப்பக்தியின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.
 
நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இவ் ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து ஒளிபெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித்தொடர் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.