ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2024

அகஸ்தியரின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்து “எவ்வளவு தூரத்துக்கு அனுப்ப முடியுமோ” அதைப் பரவச் செய்யுங்கள்

அகஸ்தியரின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்து “எவ்வளவு தூரத்துக்கு அனுப்ப முடியுமோ” அதைப் பரவச் செய்யுங்கள்


இந்தக் காற்றிலே மகரிஷிகளின்ருள் சக்தி நிறைய இருக்கின்றது
1.நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்குமளவிற்குத் தான் தயார் செய்து கொடுத்துள்ளேன்
3.அதை எடுத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு தான்.
 
காலையில் கண் விழித்த உடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். கஷ்டம் என்ற வார்த்தைகளை விட்டுத் தள்ளுங்கள்… அது புகாதபடி தடுத்துக் கொள்ளுங்கள்.
 
அதற்காக வேண்டி
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.உங்கள் தாய் தந்தையரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று குருதேவரை நினைத்து
4.ங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
5.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உள்ளே செலுத்துங்கள்.
 
உங்களுக்கு அந்த அமைதி கிடைக்கும். அமைதிப்படுத்திய பின் இன்னது தான் நல்லது தான் நடக்க வேண்டும் என்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அதற்குண்டான வழி கிடைக்கும்.
 
உதாரணமாக உடம்பிலே வலி இருக்கிறது என்றால் அங்கே நினைவைச் செலுத்தி இரண்டு தடவை மூன்று தடவை கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அங்கே பாய்ச்சுங்கள்.
 
உடலிலே எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பாய்ச்சுங்கள். அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சிறிது நேரம் நினைவைச் செலுத்துங்கள்.
1.முதலில் சிறிது வலி அதிகமாகும்
2.சிறிது நேரம் ஆனால் வலி குறையும் அமைதி கிடைக்கும்
3.உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் எல்லாம் நீங்கி உடல் நன்றாக வேண்டும் என்று தியானித்துக் கொள்ளுங்கள்.
4.இதைச் சுவாசித்தால் அந்த எண்ணங்கள் அங்கே செல்லும்… வேதனை துரிதமாகக் குறையும்.
 
உங்கள் அனுபவத்தில் அதைக் கொண்டு வரலாம்.
 
சில பேருக்கு உடலில் ரொம்ப முடியாமல் இருக்கும். அதற்கு மருந்து போட்டு தணித்துக் கொண்டு தியானத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்ட பின் காற்றிலே உயர்ந்த சக்தி இருக்கின்றது” என்று எண்ணி அதை எடுத்து நம் உடலுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்
 
குடும்பத்திற்குள் நல்ல ஒற்றுமை ஏற்படும் எல்லாம் சீராக இருக்கும் எதையுமே சிந்தித்து செயல்படக்கூடிய சக்தி அந்த இடத்தில் வருகின்றது.
 
டாக்டர்கள் எப்படி நோய்களுக்கு உண்டான மருந்துகளை பக்குவப்படுத்திக் கொடுக்கின்றார்களோ அது போல் உங்கள் ஆறாவது அறிவை டாக்டராகப் பயன்படுத்தி அவ்வப்பொழுது இப்படிச் சீராக்கிக் கொள்ள முடியும்.
 
அதே சமயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது…
1.இந்த உடல் நமக்கு சொந்தமில்லை சொந்தமில்லாததை நாம் சொந்தமாக்க் கொண்டாட வேண்டாம்
2.நாம் சொந்தம் கொண்டாட வேண்டியது எல்லாம் உயிரான நல்ல உணர்வு…
3.ஆறாவது அறிவு கார்த்திகேயா அதை நீங்கள் சொந்தம் கொண்டாடுங்கள் வாழ்க்கையில் இதுதான் நிலையானது.
 
காரணம்… இந்த உடல் மண்ணுக்குத் தான் செல்கின்றது. மண்ணுக்குச் செல்லும் இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றோம். ஆனால் என்றுமே நிலையாக இருக்கும் உயிருக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
 
ஆகவே உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும் என்ற அந்த ஆசை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆசை எல்லாவற்றையும் தெரிந்திடும் அருள் ஒளியாக நாம் கொண்டு வந்தால் என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடியும்.
 
நாம் ஒவ்வொருவரும்
1.அகஸ்தியன் எடுத்த அருளை நமக்குள் பதிவு செய்து
2.அந்த அலைகளை உங்களால் எவ்வளவு தூரம் எடுத்து அனுப்ப முடியுமா அனுப்புங்கள்.
3.அது உங்களுக்கும் நல்லது உடலுக்கும் நல்லது இந்த நாட்டுக்கும் நல்லது இந்த உலகிற்கே நல்லது.
 
இன்றைய உலகம் கடும் விஷத்தன்மையாக இருப்பதால் உங்கள் உடல் உறுப்புகள் அனைத்துக்குமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சச் சொல்கின்றோம்.
 
காலையில் எழுந்து ஒரு ஆறு மணிக்குள் முடிந்த அளவு அந்த உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள் ஒரு அரை மணி நேரமாக உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைப் பாய்ச்சுங்கள்.
 
ஒரு நல்ல பலனைத் தரும்.