ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2024

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்


பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் அமில சக்தி மட்டுமல்ல ஜீவசக்தியினால் உராயும் நிலை கொண்டு தான் ஒவ்வொரு கோங்களுமே செல்கின்றது.
 
ஒவ்வொரு கோளமும்
1.தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை இப்பால்வெளி மண்டலத்துடன் மோதுண்டவுடன் தான் ஒலி பிறக்கின்றது
2.இவ் ஒலியினால் தான் ஒவ்வொரு மண்டலமும் சுழல்கின்றது.
 
பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலத்தையே நாம் பந்த வெளியாகக் காணுகின்றோம். இப்பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள இவ்வமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்கும் உயிர் நாடி...”
 
இப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இவ்வாண மண்டலத்தில்
1.படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.
2.மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை… நாமும் தான் ஓடுகின்றோம்
3.அனைத்து மண்டலங்களும்தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளன.
 
இப்பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. பூமியிலேயே பல பாகங்களில் பல சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.
 
இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாற்றுகின்றோம். இப்பூமியிலேயே பூமியின் பூமத்திய ரேகையான மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?
 
இப் பூமியில் பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகிதப்படி ஒரு நாளையும் இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலை எல்லாம் இப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்கு உள்ள நிலையையும் அறிகின்றோம்.
 
ஆனால் இப்பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் நேர் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை என்பதனை அறிந்துள்ளோமா…?
 
இப்பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.
 
1.ஆனால் அம்மையத்தினால் தான் இப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர் நிலைகள் எல்லாம் உள்ளது.
2.இப்பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் இவ்வொளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை
3.இம்மையப் பகுதி ஈர்த்துப் டிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.
 
இச்சூழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அப்டிவங்களுடன் அவ்வமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.
 
ந்நிலையில் உப்பு அமில சக்திப் படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்நிலை போன்ற விகிதத்திலேயே இப்பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருகும் நிலையில்
1.ஆவியான உப்புக் கலந்த நீராக வடிகொண்டு தான்
2.இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.
 
இப்பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித் தான் அந்நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர்நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.
 
இவ்வுப்புக் கலந்த அமிலத்தின் படிவத்தில் இருந்து உற்பத்தியாகி வருவதுவே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை.
 
ஆனால் கடற்கரை ஓரங்களில் மற்ற கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் இப் பூமியின் நிலைக்கொப்ப சுவை தருகின்றது.
 
இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இக்கடல் நீரின் மட்டத்திற்கு கீழ் அப்பூமியின் நிலையில் இருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இக்கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத்தான் இருந்திடும்.
 
நம் பூமியின் இயற்கைச் சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியிலிருந்து பல சக்தியை நாம் நேராகவும் மற்ற மண்டலத்தில் மோதி ம் மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே இப்பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்…”
 
இவ்இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால்
1.அவ்வாண்டவனின் சக்தி நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால்
2.அவ்வாண்டவன் என்ற சக்தியே தனித்து இல்லாமல் செயல்படுவதாக உணர்கின்றோம்.
3.அனைத்து சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்து சக்தியாகத்தான் அவ்வாண்டவனின் சக்தி உள்ளது
 
ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி அச்சக்தியின் கலந்த சக்தி தான் நம் அனைத்து சக்தியுமே…”