ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 1, 2024

அபிராமிபட்டர்

அபிராமிபட்டர்


இவ்வுலக நியதியே இக்கலியின் இக்காலத்தில் மாற்றம் கொள்ளப் போகும் உண்மை நிலையை நம் தியான முறைப்படி உணர்த்துகின்றோம்.
1.ஒளியாய் ஒவ்வோர் ஆத்மாவும் எந்நிலையில் ஒளிர்ந்திடலாம்…? என்பதனை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை நாம் அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.
 
இப்பூமியிலே உயிரணுவாய்த் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணவரும் போகரும் இவ்வழி தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?
 
இப்பூமியில் அபிராமிப்பட்டராய் அபிராமி அந்தாதி இயற்றிய அவ் அபிராமிபட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று உணர்த்தி பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்நிலையில்…?
 
சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?
 
அபிராமிப்பட்டராய் வாழ்ந்த அவ்வாத்மா
1.தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வோர் அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் சக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து
2.அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து,
3.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல் ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வழி வந்த நிலையில்
4.அமாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று அவ்வரசரின் எண்ண நிலையில்
5.தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்று ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
6.அவ்அபிராமியின் மேல் அவர் துதித்துப் பாடிய அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே
7.அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகிக் கூடி பௌர்ணமி நிலவாய் அனைவரும் காணும் சந்திர பிம்பமாய்க் காட்சி தந்தது…
 
அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்திதான் அவ்வாத்மாவே நிலவாய் ஒளிர்ந்தது. அவரின் கூடுதான் அங்கு பிம்ப நிலையில் இருந்தது.
 
சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்தி செயல்படுத்திக் காட்டினார்.
 
1.போகரின் நிலை ஒளியுடன் முருகா என்ற உள்ளமுருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாய் நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே.
2.கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே…!
3.தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கு எல்லாம் உண்டு.
 
ரிஷிகளும் முனிவர்களும் மந்திரம் செய்யவும் தந்திரம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.
 
ஆனால்… அச்சப்தரிஷிகளின் நிலையினால்தான் இப்பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.
1.இன்றளவும் மனித ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.
2.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்.
3.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.
4.நம் நிலையில் வழி வந்த நிலைதான் இன்று வாழ்ந்திடும் நிலை… அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி வந்திடுவோம்.