ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2024

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

 

உதாரணமாக மிளகாயை அரைத்து சப் என்று இருக்கும் மாவிற்குள் இணைத்து விட்டோம் என்றால் மாவின் சுவை காரமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு புலி மானின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்த சாந்த உணர்வுகள் இதற்குள் அடங்கி விடுகின்றது.
2.ஆனால் சாந்த குணம் கொண்ட மானோ புலியின் உணர்வை நுகரப்படும் பொழுது
3.மானின் சாந்த உணர்வுகள் அந்தப் புலியின் கடுமையான கார குணத்திற்குள் ஒடுங்கி விடுகின்றது அதன் வழியே அது அடக்கம் ஆகின்றது.

அது தான் மூஷிக வாகனா…!

மானோ புல்லைப் பார்த்து அதன் மணத்தை நுகர்ந்து… அதனின் உணர்வு கொண்டு அதே மணம் இதற்கு வாகனமாக அமைந்து புல் இருக்கும் இடத்திற்கு இந்த உடலை நகர்த்திச் செல்கின்றது.

புலியோ கடினமான உணர்வு கொண்ட நிலையில் மானை நுகர்ந்த பின் மானின் சாந்த உணர்வு இதற்குள் ஒடுங்கினாலும்… மான் புலியை நுகரப்படும் பொழுது இதனுடைய கடுமை மானின் சாந்த உணர்வுக்குள் சேர்த்துக் கொண்ட பின் கணங்களுக்கு அதிபதியாகி அதை அடக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.

ஏனென்றால்
1.சாந்த உணர்வின் தன்மை அணுவாக “ஓ…” என்று இயக்கினாலும்
2.ஓமுக்குள் ஓம் - புலியின் உணர்வுகள் அது கடுமையாக்கப்படும் பொழுது சாந்த உணர்வுக்குள் நின்று
3.அதன் அணுவின் தன்மையை இது இயக்கி இதை அடக்கும் போர் முறை கொண்டு
4.இந்த அணுத் தன்மை அதற்குள் துடிப்பின் வேகத்தை அதிகமாகக் கூட்டுகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தவர்களை டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தால் “துடிப்பு நிலையும்… கொதிப்பின் நிலையும்” அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

காரணம்… சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரைக் கோபிக்கும் உணர்வு கொண்டு அவர்கள் செயல்படும் நிலையோ அல்லது நாம் செயல்படும் எண்ணத்தை சீராக அமைக்கவில்லை என்றால் எதிர்மறையாக தாக்கப்பட்டு விடுகிறது (ஒரு பொருளுடன் ஒரு பொருள் தாக்கப்படுவது போல்)

1.சாந்த உணர்வு கொண்டு மிருதுவான பொருள் மற்றொன்றுடன் மோதினால் அதனில் வேகத்தடிப்பு வருவதில்லை.
2.ஆனால் கடினமான பொருள் மற்றதுடன் தாக்கப்படும் பொழுது துடிப்பாகி வெப்பம் உருவாகின்றது

அதைப் போல் மனிதருக்குள் கடினமான உணர்வு மோதினால் அதனால் உணர்ச்சியின் வேகமும் (துடிப்பு வெப்பம்)… வலியும் வேதனையும் அதிகரிக்கிறது.
1.வேக உணர்வு கொண்டு தாக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.அணுவின் தன்மை அடைந்து இதை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
3.அதாவது அந்த அணுவிற்குள் ஓமுக்குள் ஓமாக மாறி இதனை அது அடக்கிடும்… அதற்குள் இது அடங்கி இதனின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

“சாந்த குணமும் சாந்த எண்ணங்களும் அதை வளர்க்கும் தன்மை இழந்து” இந்தக் கோபமான (காரத்தின்) உணர்வை வளர்க்கப்படும் பொழுது… அதற்குள் நாம் பார்க்கும் மற்ற நல்ல குணத்தை எல்லாம் அடக்கிவிடும்.

1.ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்…! என்ற நிலைகளில்
2.இந்தக் கார உணர்வுகள் அதற்குள் ஒடுக்கி விடுகின்றது
3.நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

நல்ல மனத்தை உருவாக்காத நிலையினைக் கொண்டு வரப்படும் பொழுது மனிதனுக்கு “இரத்தக் கொதிப்பாக” வருகிறது.