ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2018

விண்ணிலிருக்கும் மகரிஷிகளுடன் நேரடியாக உரையாடுங்கள்…!

ஒரு திரையிலே சினிமா காட்டுகின்றார்கள் என்றால் அங்கே இருக்கும் பொழுது வெறும் ஒளியாகத் தான் படுகின்றது.
1.நாம் குறுக்கே பார்த்தால் தெரிவதில்லை (ஒளி அலைகள் தான் தெரியும்)
2.அதைத் தடுத்து நிறுத்தும் பொழுதுதான் திரையில் உருவம் தெரிகின்றது. 

அதே மாதிரித் தான் தியானத்தின் மூலம் நாம் நுகரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் முதலில் நமக்குத் தெரியாது. வெறும் அணுக்களாகத் தான் தெரியும்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி வைக்கப்படும் பொழுதுதான்
2.அந்த உருவத்தின் தன்மை யார்..? யார்…? என்ற உணர்வுகளே நமக்குத் தெரியும்.

இதுவெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) நேரடியாகக் காட்டிய நிலைகள். அதை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். அந்த மகரிஷிகள் யார் யார் என்று நிச்சயம் உங்களால் அறிய முடியும்.
1.மகரிஷிகளுடன் உங்களால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.
2.உணர்வுபூர்வமாகப் பேசவும் (உரையாடல்) முடியும்.

அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் பல கொடுமையான நிலைகளிலிருந்தும் மீண்டிடும் ஆற்றல் பெற முடியும். உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.