ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2018

என்னைக் கூடிய சீக்கிரமே பார்ப்பாய்...! என்றார் ஈஸ்வரபட்டர்

நீங்கள் அனைவருமே சாமிக்கு (ஞானகுரு) இந்தச் சக்தி எப்படி வந்தது...? நாமும் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும். அது எப்படி...? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கின்றது.

உங்களை மாதிரித்தான் எனக்கும் ஆசை வந்தது. அப்பொழுது குருநாதரிடம் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) உங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே...! என்று குருநாதரிடம் கேட்டேன்.

எல்லாவற்றையும் காண்பித்தீர்கள், நீங்கள் எப்படி இந்தச் சக்தியைப் பெற்றீர்கள் என்று நீங்கள் கேட்கிற மாதிரியே நானும் குருநாதரிடம் கேட்டேன்,

“நீ இதைச் சீக்கிரம் பார்ப்பாய்... பார்த்துக் கொள்வாய்...!” என்று இப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

அவருடைய பார்வை 25 வருடத்திற்குப் பின்னால் தான் அவருடைய பிறப்பு, அவருடைய உணர்வுகள் எப்படி இயங்கியது என்கிற வகையிலே அது சிறுகச் சிறுகச் சிறுகத்தான் தெரிய முடிந்தது.

ஏனென்றால் எல்லாவற்றையும் காண்பித்துக் கொடுத்தாலும் அவரை யார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்பொழுது அவருடைய உடலில் வந்த உணர்வுகளை எடுத்து நாம் கவர்ந்து அது எப்படி என்ற நிலைகளிலே அதன் வழிகளில் பக்குவப்படுத்தி அவர் நிலைக்கு இன்றைக்கு ஒரு கால் பாகம் தான் வந்திருக்கின்றேன்.

அதிலேயும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கின்றது. யாம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு 25 வருடம் ஆகிவிட்டது.

அடிக்கடி குருநாதர் எமக்குச் சொன்ன செய்திகளையெல்லாம் சேலம் கந்தசாமி அவர்கள் வீட்டில் இருக்கும் பொழுது விடிய விடிய இந்தத் தத்துவங்களை எல்லாம் சொல்லியிருக்கின்றேன்.

உலகம் இப்படி இருக்கின்றது, அதனுடைய நிலைகள் இப்படி ஆகும் என்று குருநாதர் கொடுத்ததை எல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.
1.அப்பொழுது நான் சொன்னதெல்லாம் 
2.இப்பொழுது நடந்து கொண்டுள்ளது.