ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2018

மன நோயையும் உடல் நோயையும் நீக்கும் தியானப் பயிற்சி


எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா.. என்று புருவ மத்தியில் என்று எண்ணுங்கள்.
1.நம் உடலில் ஐந்து அல்லது ஆறு லிட்டர் தான் இரத்தம் உள்ளது
2.அந்த இரத்தைத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலே போதுமானது
3.இரத்தத்தில் தீமைகள் உருவாகாது தடுத்துக் கொள்ள முடியும்

தலையிலிருந்து கால் வரை மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு சர்க்குலேசன் (CIRCULATION) போன்று 100 முறை 200 முறை எண்ணுங்கள்.  அலை அலையாகப் அருள் வட்டமாகப் படரச் செய்யுங்கள்.

1.என் உடல் நோய் நீங்க வேண்டும்.
2.எனக்கு நோய் இல்லை என்று எண்ணுங்கள்.
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்கின்றது.
4.என் உடலிலுள்ள வலி வேதனை நோய்கள் அனைத்தும் விலகுகின்றது என்று
5.இதை மட்டும் எண்ணித் தியானித்துப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்தறிய நேர்ந்தாலும் அந்தக் கொடிய உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்க அதைத் தியானித்து உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் உடலில் உள்ள அணுக்களை வலுவாக ஆக்க முடியும்,

மனிதன் ஒருவனால்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தனக்குள் ஒளியான அணுக்களாக ஆக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும். இரண்டு மூன்று தடவை பழகி விட்டால் அந்த அருள் சக்தி நமக்குள் கூடிக் கொண்டே வரும்.

அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழ முடியும்.
1.நேற்று நன்றாக இருந்தேன்…
2.இன்று நேற்றைக் காட்டிலும் நன்றாக இருக்கின்றேன்…!
3.நாளை இன்னும் நன்றாக இருப்பேன்…! என்ற இந்த உணர்வை
4.அழுத்தமாக உங்களுக்குள் எடுத்துப் பாருங்கள்.

மன நலமும் உடல் நலமும் உங்களைத் தேடி வரும்…! எண்ணும் எண்ணமே இறைவன். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்..!

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் நிச்சயம் முடியும்…!