ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2024

ஆண்டவனின் அருளைப் பெற்று “நீ ஆண்டவனாக இருந்துவிடப்பா…!”

ஆண்டவனின் அருளைப் பெற்று “நீ ஆண்டவனாக இருந்துவிடப்பா…!”

 

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று பாடுகின்றாய் “பரிபக்குவ நிலையை வேண்டுகின்றாய்…”

1.பல நாட்கள் பாடம் கேட்டு உங்கள் மூவரின் நிலை என்னப்பா…?
2.பாரினில் பல கோடி மக்கள் உள்ள நிலையிலும் பூர்வ ஜென்மத்தின் தொடர்பினால்
3.சிலரை (உங்களை) மட்டும் பாட நிலைக்கு ஏனப்பா நான் அழைக்கின்றேன்…!

இராமர் கதையை கேட்டிருப்பாய் இராமர் கதையில் உள்ள தத்துவத்தை எல்லாம் “மறந்துவிட்டு” விடிந்தபின் கேட்ட நிலைதானப்பா உங்கள் மூவரின் நிலையும்.

ஆனாலும் உங்கள் நினைவிலும் எண்ணத்திலும் என் நினைவு கலந்து உள்ளதால் உங்களின் நிலை சிதறிடாமல் காத்திட்டேன். சாமியும் பாடுகின்றார் நீங்களும் பாடுகின்றீர் நீங்களும் ஜெபிக்கின்றீர். உன் எண்ணமும் என்னுள்ளே கலந்தது.
1.எல்லோர் நிலையும் ஒரே சமயத்தில் எப்படி என் நிலைக்கு அந்த எண்ணம் மோதுகிறது…?
2.எல்லோர் நிலைக்கும் எப்படி ஆசீர்வாதம் அளிக்கிறேன்…? என்பது புரிந்ததா…!

சில தியானக் கூடங்களில் ஆயிரம் பேர் அமர்ந்திருந்தாலும் எல்லோரும் ஆண்டவனையே நினைக்கின்றார்கள். அவரவர்களின் நிலைக்கு அந்தக் கடவுளை நினைத்தாலும்… எல்லோர் நிலைக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப தியானக் கூடத்தில் உள்ளவர்களின் எண்ணம் ஆண்டவனை ஜெபிப்பதில் உள்ளது.

ஆனால் அவரவர்களுக்கு வேண்டியதை நினைத்துத் தான் ஜெபிக்கிறார்கள். உடல் நிலைக்கு… தொழில் நிலைக்கு… இப்படிப் பல நிலைகளில் அவரவர்களின் எண்ணத்திற்கு உகந்தபடி தியானக் கூடத்தில்… “அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை ஜெபிக்கிறார்கள்...”

எல்லோருடைய எண்ணத்திற்கு ஒப்ப அவர்கள் எண்ணும் ஆண்டவனால் எப்படி ஆசீர்வதிக்க முடிகின்றது…? இந்த நிலை புரிந்ததா…?

ஆண்டவர் ரூபத்தில் உள்ள எல்லோருமே எப்படியப்பா ஒரே நேரத்தில் அவரவர்கள் எண்ணத்திற்கு ரூபத்திற்கு அருள் புரிகின்றார்கள்.

பழனி மலைக்குப் பல கோடி பக்தர்கள் வருகிறார்கள் முருகா… முருகா… என்று காவடி ஆடிக்கொண்டு பல பல வழிகளில் அவ்ஆண்டவனை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்நிலையில் “போகரினால்” எப்படியப்பா எல்லோருக்கும் அருள் புரிய முடிகிறது…?

சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… தாம் பெற்ற சூரியனின் சக்தியிலிருந்து ஜோதி ரூபத்தில்… அவர்களுடைய நினைவில்… எல்லோருடைய எண்ணத்தையும் ஈர்த்துக் கொள்கிறார்கள்.

ஈர்த்த நிலையில்
1.அவர்கள் பாய்ச்சும் ஒளிக் கதிர்கள் அவர்கள் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒலிகள் அவர்களின் உயிர் நிலைக்கே பாய்கிறது.
2.ஒளியைப் பெற்றவர்களுக்கெல்லாம் அவர்கள் எண்ணி வந்த நிலைக்கு அவ்ஒளியின் தன்மையினால் அவ்வாண்டவனின் அருள் கிடைக்கிறது.
3.ஆண்டவன் என்று இப்பொழுது நான் சொல்லியது “என் நிலையில் உள்ள” பல கோடிச் சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகளையும் தான்…!

ஆண்டவன் என்று எண்ணும்பொழுது மக்களுக்கு ஆண்டவன் என்பது யார்…? என்று புரிவதில்லை…!

தன்னையே புரிந்து கொள்ளாத இந்த மக்களுக்கு ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் இருந்தால்தான் தர்மம் நியாயம் என்ற… இப்பொழுது இருக்கும் சில தன்மைகளாவது… ஆண்டவன் என்ற “ஒரு பயமாவது” இருக்குமப்பா.

அதுவும் சிலரின் மனதில் தான் இருக்கிறது.

இந்நிலை காலம் காலமாக வந்திடும் என்ற நிலையைப் புரிந்து தான் இப்பொழுது சூட்சும உலகத்தில் உள்ள எல்லா ரிஷிகளும் ஞானிகளும் தவம் செய்து
1.அவ்வாண்டவனின் சக்தியைத் தன்னுள் ஈர்த்து அவர்களின் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.சூட்சம உலகத்தில் இருந்து கொண்டே எல்லா நிலைகளையும் செய்கிறார்கள் இம் மக்களின் தன்மைக்கு.

புத்தனும் இயேசுவும் நபியும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளை எல்லாம் இம்மானிட உலகில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.

இந்நிலையை ஏன் பெற வேண்டும் என்று எண்ணத்தை இனி எண்ணி விடாதீர்கள்…! இப்பொழுது சொல்லும் பாடம் மிகவும் முக்கியம்
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது… இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

இந்த ஒரு வாரத்தில் உங்களுடைய எண்ணச் சிதறல்களை வைத்துத் தான் என்றும் வெளியிடாத இரகசியத்தை இன்று வெளியிட்டேன்.
1.”புரிந்ததா… புரிந்ததா… புரிந்ததா…” என்று பல பாடங்களைப் புரிய வைத்தும் எண்ணத்தைஸ் சிதற விட்டீர்கள்
2.இனி சுவாச நிலையை ஒருநிலைப்படுத்துங்கள் உம் வழிக்கு…!