ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2024

இன்பமும் துன்பமும் கலந்தே வரும்…! வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ இருந்து என்ன பயன்…?

இன்பமும் துன்பமும் கலந்தே வரும்…! வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ இருந்து என்ன பயன்…?

 

ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா சக்திகளையும் அளித்துள்ளான் சக்தி தேவன்
1.அந்நிலையை எப்படி ஈர்த்து வாழ்வது…? என்ற நிலையை
2.நாம் தான் வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

நம் ஞானக் கண்ணினால் நாம் இருந்த நிலை கொண்டே உலக அனைத்திலும் உள்ள நிலைகளை அறிந்து செயல்பட முடியும். நம் ஞானக்கண்ணினால் “நாம் நம்மை மறந்து தியான நிலையில் அமர்ந்து காண்பது அல்ல அந்த ஞானக்கண்ணின் நிலை…”

நாம் சகல நிலை கொண்டும் வாழ்க்கை முறையில் வாழும் பொழுது கோப நிலையில் சாந்த நிலையில் துவேஷ நிலையில் பிறரைப் போற்றும் நிலையில் சோர்வு நிலையில் மகிழ்வு நிலையில் இப்படிப் பல நிலை கொண்ட வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு நிலைகொண்டும் நாம் இருக்கும் பொழுது நம் சுவாச நிலை நம் உயிரணுவிற்கு எந்த நிலையை ஏற்றுத் தருகின்றதோ அந்நிலையில் இருந்து தான் நம் அகம் புறம் ஞானம் செயல்படுகிறது.

1.நடைமுறையில் சஞ்சலங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையுடனே கலந்து தான் வரும்.
2.வந்ததை எண்ணியோ வருவதை எண்ணிக்கொண்டோ இருந்து என்ன பயன்…?

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அச்சக்தியில் இருந்து கிடைத்த அந்த ஞானக் கண்ணின் நிலையைப் பெற்று ஆத்மாவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் ஆத்மாவை நம் உடலும் நம் எண்ணமும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
1.நாம் எடுக்கும் சுவாச நிலையினால் தான் சகலமும் நடக்கிறது.
2.சுவாசம் என்பதனை ஒரு பெரும் பொக்கிஷமாக யாரும் எண்ணுவதில்லை.

நம் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுமே அச்சுவாச நிலையை ஈர்த்து வெளியிடும் தன்மை உள்ளது. இந்நிலையின் உண்மை எல்லாம் அன்றைய சித்தர்கள் தன் ஞான நிலையால் அறிந்து வெளியிட்டார்கள்.

தாவரங்கள் எல்லாவற்றுக்குமே “உயிர் நிலையும்… சுவாச நிலையும் உண்டு…” எல்லாமே அதனதன் தன்மையுடன் தான் இயங்கி ஜீவிக்கின்றன.

பல வகை தாவரங்கள் இவ் ஆறறிவு என்னும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. அத்தாவரங்களின் மகத்துவத்தை எல்லாம் பல சித்தர்கள் கண்டுணர்ந்து அவற்றை வைத்திய முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் பயன்படும் நிலையில் எடுத்துரைத்துச் சென்றுள்ளார்கள்.

தாவரங்களிலே உள்ள நிலை கொண்டு தான் “உயிர் காக்கும் மருந்துகளாகப் பயன்படும் எல்லாமே நமக்குக் கிடைத்தன…”

பல கொடிய விஷம் வாய்ந்த தாவரங்களும் உள்ளன. சில வகைப் பச்சிலைகள் கொண்டு நம் சுவாச நிலைக்கு ஈர்க்கும் பொழுது நம்மையே மறக்கச் செய்யும் மயக்க நிலைக்குச் செல்லலாம். இன்னும் சில தாவரங்கள் நாம் காணும் பொழுதே நம்மை ஈர்த்து அந்த நிலைக்கு நம்மைச் சுற்றிக் கொண்டு மனிதன் உடலையே எலும்புக் கூடாக்கி வெளியிடும் தன்மையில் உள்ளன.

இன்னும் சில தாவரங்களின் நிலையைக் கொண்டு அதை அரைத்து நம் உடலில் பூசிக் கொண்டால் இவ் உடல் எந்த நிலையிலும் வயது வித்தியாசம் தெரியாமல்… எந்த வயதில் நாம் பூசிக் கொள்கின்றோமோ அந்த வயதில் இருந்த நிலை போல் என்றும் இருக்க வல்லமை தன்மையுடையது.

இந்நிலை கொண்ட பல வித மூலிகைகளும் நம் உலகிலேயே கலந்து செழித்து வளர்கின்றன. அம் மூலிகையின் உன்னதத் தத்துவத்தை முற்றும் அறிந்தவர் இதுவரை யாரும் இல்லை. அறிந்த நிலையையும் முற்றும் வெளியிட்டவரும் யாரும் இல்லை.

நாமே இந்த பாடத்தில் பல மூலிகைகளின் தன்மையைத் தான் எடுத்துரைத்தோம். அந்த மூலிகையின் பெயரைச் சொல்லவில்லை.
1.முற்றும் சொல்லிவிட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டி வரும்.
2.நாம் தனித்த நிலையில் எதையும் வெளியிடவும் முடியாது.

இந்த நிலை போலத் தான் இவ்வுலக நிலை முதற்கண்டு இவ்வுலகில் நடக்கும் எல்லா நிலைகளும் சந்திரனிலிருந்து சூரியன் முதற்கொண்டு மற்ற எல்லாக் கிரகங்களும் சூரியனுக்கு மேல் பல சூரியன்களும் எல்லா நிலைகளுமே…! தனித்த நிலையில் “நான்” என்ற நிலையில் ஒன்றுமே இயங்கவில்லை.