ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2024

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட நிலையில் இன்று நம் சூரியனே பாழடையும் தன்மையில் இருக்கின்றது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழுகின்றோம். இதிலே வளர்ந்த மனிதன் அணுகுண்டுகளை நான்கு திசையிலும் செலுத்தினான் என்றால் இந்த சூரியனே அழிந்துவிடலாம்.

மற்ற பிரபஞ்சம் சிதைந்து அதிலிருந்து விலகி வரும் கோள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்தால்… பூமிக்குள் வந்து தாக்கி விடாதபடி இராக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்து… அணுகுண்டுகளையும் வைத்து… அதன் வீரிய உணர்வு சுக்கு நூறாகத் தெறிக்கச் செய்வதற்காக விஞ்ஞானிகள் வைத்திருந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த அந்தச் சிதைந்த கோள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்ததால் அங்கே விழுந்து… அதனின் சுழற்சியில் கவரப்பட்டு… வெப்பத்தால் கரைந்து ஆவிகளாக மாறி… அந்த ஆவியின் தன்மை உறைபனியாக மாற்றி வைத்துக் கொண்டது.

பூமியை விடப் பெரிதான கோள் தான் வந்தது நம் பூமியிலே அது விழுந்தால் எந்தப் பகுதியில் விழுகின்றதோ மக்கள் தங்கள் அழிக்கப்படுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விட்டால் பெரிய கோளாக மாறும். இரண்டு மடங்கு ஆகிவிட்டால் சுழற்சியின் வேகம் கூடி ஈர்ப்பின் தன்மை அதிகரித்துவிடும்.

அதிகரித்தால் வியாழன் கோள் போலவே நம் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் மடியும் தன்மை உருவாகிவிடும்.
1.இப்படி பிரபஞ்சங்கள் பலவாறு பல வகைகளிலும் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதையெல்லாம் அடித்து நொறுக்கும் சக்தி பெற்றிருந்தாலும் மக்களைக் காக்கும் நிலை இல்லை.

அன்று ஒரு காலம் அகஸ்தியன் தன்னுடைய பார்வையால் தனது உணர்வின் சக்தி கொண்டு…
1.பூமி நீளமாக வளர்ந்து கொண்டே செல்வதைக் குறைப்பதற்காகத் திசை திருப்பி
2.வட துருவத்தில் உருப் பெற்ற பனிப்பாறைகள் தென் துருவத்தின் வெப்பத்தால் கரைந்து கடல் நீராகப் பெருகச் செய்து சமப்படுத்தினான்
3.இன்று வரை சீராக ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானத்தின் நிலையில் பூமியிலே ஒரு பக்கம் அணுகுண்டுகளை வெடித்தார்கள் என்றால் சூரியனுடைய பிடிப்பு… அந்தக் காந்த அலைகளைத் தடுத்து நிறுத்தப்படும் பொழுது ஒரு பக்கம் ஈர்க்கும் தன்மை அதிகரித்துப் பூமி குடை சாயும் நிலை வரும்.

ஆக காலம் கடந்த நிலைகள் கொண்டு
1.இப்போதாவது இந்த உண்மைகளை அறிந்து கொண்டோம்… தவறவிட்டால் தப்பும் மார்க்கம் ஏது…?
2.இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அறிவதற்காக வேண்டிக் காடு மலைகளை எல்லாம் குருநாதர் எம்மை (ஞானகுரு) அலைய வைத்தார். பல உணர்வுகளைப் பதிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அந்தப் பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்ட பின் நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். குருநாதர் சொன்னது
1.மறைந்த நிலையினை மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டு.
2.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும்
3.மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை நீ எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகிறது.
4.நீயும் ஒளியாக ஆகின்றாய் கேட்பவர் உணர்வுகளிலும் ஒளியாகின்றது
5.பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய் அருள் ஒளி என்ற நிலையில் வாழ்கின்றாய்.
6.உன்னுடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமைகின்றது.
7.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு… எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
8.அதுவே உனக்குப் பேரானந்த நிலையில் ஏகாந்த நிலை பெற உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி… உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அருள் ஒளியை நீங்கள் பெற்று இருளை அகற்றிடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து அனைவரையும் மீட்டிட வேண்டும்.