ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2024

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

 

இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து அதனின் செயலை அறிந்து கொண்ட பின் மக்களுக்கு நீ ஓது என்றார் குருநாதர்
1.நாம் அல்ல…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் இயக்குகின்றது…? பார்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்
2.அதைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

கண்ட அனுபவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே வருகின்றேன். எப்படியோ அருள் உண₹சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி உங்களுக்குள் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றேன்.

கூர்மையாக உங்களைப் பார்க்க வைக்கின்றேன்.
1.நாளை ஏதாவது சந்தர்ப்பத்தால் ஏற்பட்டால் “உடனே ரிமோட் செய்து”
2.எப்படி இருக்கின்றது…? என்ன செய்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் திருந்தி வாழ்வதற்கு இது உதவி செய்ய வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

உங்களை இயக்காதபடி “அந்தத் தீமையை அடக்கி ஆளும் சக்தி நீங்கள் பெற வேண்டும்” என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது

குரு அருளைப் பெற முயற்சிப்போம். இந்தச் சக்தி பெற்ற பின் அதன் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்… உடல் பெற்ற நஞ்சுகளைக் கரைப்போம்.

அவர்கள் ஒளியாக மாறினால்… அவர்களை மீண்டும் நாம் எண்ணும் பொழுது நம்முடைய பாதை சீராகச் செல்லும் அதனுடைய உணர்வைப் பெற்று நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.

அவர்கள் முன்னாடி விண் சென்றால் நாம் அவர்கள் வழியில் பின்னாடி செல்வது எளிதாகும். அவர்கள் ஒளியான உணர்வை நாம் எடுத்து நாமும் ஒளிச் சரீரமாக முடியும். ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம்.

1.இதை எல்லாம் உருவாக்கிப் பேச வைத்தது… உணர்த்துவது யார்…? உயிரான ஈசன் தான்.
2.இந்நேரம் வரை கேட்டறிந்த உணர்வுகளைக் உடலாக உருவாக்குவது யார்…? உங்கள் உயிர் தான்.
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி “உங்களை அந்த ஞானிகள் உணர்வு வழி நடத்த வேண்டும்” என்ற உணர்வை வைத்துத் தான் பேசினேன் (ஞானகுரு).

நுகர்ந்த உணர்வுகள் எந்த அளவுக்குப் பதிவாகின்றதோ வசிஷ்டர்…! யாம் உபதேசிப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஏதோ சொல்கின்றார் சாமியிடம் விபூதி வாங்கிச் சென்றால் போதும் என்றால் கவனம் அதிலே தான் இருக்கும். அந்த அறிவின் ஞானம் நமக்குள் வளராது.

ஆகவே உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து பிறவியில்லா நிலை அடைவோம். இன்னொரு பிறப்பு இல்லாத நிலை அடைய வேண்டும்.
1.எப்படியும் இந்த உடலை விட்டுச் செல்ல வேண்டி வரும்
2.அதற்கு முன் இருளை நீக்கும் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற முற்பட வேண்டும்.

மனிதனின் கடைசி நிலை… அது தான் இராமேஸ்வரத்தில் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தனுசுக்கோடி. தீமைகளை நீக்கி நம் மனதை ஒன்றாக்க வேண்டும் என்ற நிலையில் “இராமன் மனதைக் குவித்து தியானித்தான்” என்று அங்கே காட்டியிருப்பார்கள்.