ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2024

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

 

இவ்வுலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி நிற்பது எதுவப்பா…? இவ்வுலகம் என்ற மாயையையே எண்ணி “மயங்கி வாழும் வாழ்க்கை தான் வாழ்கின்றோம்…”

1.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…? சொத்தும் சுகமும் ஆளுவது யாரப்பா…?
2.இவ்வுலகில் பிறந்தால் நிலைத்திருப்பது பொருளல்ல. நாம் விட்டுச் செல்லும் நம்முடைய மக்கள் தான் (குழந்தைகள்) என்ற எண்ணம் பலருக்குண்டு.
3.நம் பெயர் சொல்ல மக்களின் நிலை எத்தனை காலங்களுக்கு…?
4.அக்குழந்தைக்குக் குழந்தை என்று இப்படி சுற்றிக் கொண்டு வரும் நிலையினிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…?

“பிறவிப் பயன்… பிறவிப் பயன்…” என்பதைப் புரிந்து வாழ எண்ணிடாமல் இப்புவியில் பிறந்த நாம் எல்லாம் புரிந்து நாம் வாழும் நாட்கள் எங்குள்ளது…? என்று புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் தோன்றிய “பல புண்ணியவான்கள்”
1.இன்றும் அவர்களுடைய பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை
2.நாமும் புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

இச் சுவாச நிலையில் இருந்து நாம் பெறும் பாக்கியங்களை நாம் பெறும் செல்வங்களை அழியாப் பொக்கிஷமான அச்செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திடப் “பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றார்கள் பல சித்தர்கள்…”

ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல சித்து நிலைகளைப் பெற்று இன்றும் நிலைத்திருக்கவில்லையா…? அவர்கள் பிறந்த பூமியில் பிறந்த நாம் நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றார்கள்.
1.அன்று சித்து பெற்றவர்கள் இவ்வுடலை ஒரு கூடாக வைத்துத் தான்
2.தன் ஆன்மாவை உலகமெங்கும் இம்மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்நிலையில் வந்தவர் தான் பைரவர் என்னும் ராஜாவும். அவ் அரசர் தான் ஆளும் காலத்தில் தன் உடலை ஒரு கூடாக இருக்கும் நிலையை… தன் சித்து நிலையில் பெற்று அந்நிலையிலேயே பல உடல்களுக்குத் தன் ஆத்மாவைச் செலுத்தி அந்நிலை கொண்டு பல நன்மைகளைத் தன் நாட்டு மக்களுக்காகச் செய்து வந்தார்.

அந்த நிலை கொண்டு அவர் செய்த சித்து நிலை தான் அவர் உடலில் இருந்த ஆத்மா ஒரு நாயின் நிலைக்குச் சென்று அந்நாட்டைக் காவல் காக்கும் நிலையில் செயல்பட்டார்.

இருந்தாலும் அவர் இருந்த நிலையை அறிந்து அவர் உடல் என்னும் கூட்டை அன்று நயவஞ்சகம் படைத்தவர்கள் அழித்த நிலை கொண்டே நாயின் உருவிற்கு ஆத்மா வந்த அப்பைரவ மகாராஜா… இன்றும் அந்நிலை கொண்டே தன் ஆத்மாவை அழியா நிலை பெற்றுப் பிற ஜென்மம் எடுத்திடாமல் “சூட்சும உலகம் சென்று இன்றும் நிலைத்துள்ளாரப்பா…”

அவ் உடல் என்னும் மாயக் கூடு மறைந்தாலும் அவ்உயிர் ஆத்மாவைப் பிற ஜென்மம் எடுத்திடாத நிலை கொண்டு இன்றும் உலகினிலே பல உருவில் வந்து பல நிலையில் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகின்றார்.

நாம் இவ்வுலகினில் கலந்துள்ள பல சித்தர்களின் நிலையை அறிந்து… நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்துதவி… நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் நல்லணுவாக “நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் பல பெரியோர்கள் உள்ள பொழுது” நம் எண்ணமும் செயலும் பல ஆசை நிலை கொண்ட சுகபோகங்களுக்குத்தான் அடிமைப்பட்டு வாழும் நிலையில் உள்ளது இன்று இவ்வுலகமே.

1.அன்பென்னும் ஆசை வேண்டும்
2.அழியாச் செல்வமான இவ்வாத்மாவை அழித்தே நாம் வாழ்ந்திடாமல்
3.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே நம் வாழ்க்கை.

ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்… அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்.