ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2024

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

 

இன்று பெரும்பகுதியானவர்கள் குடும்பத்திலே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் இனம் புரியாத வேதனைகள் பட்டு அடிக்கடி வேதனைகளையே படுவார்கள் என்றால் “என்ன நடக்கிறது…?”

கர்ப்பமான பெண் அந்த வீட்டிலே இருந்தால் அதனின் கருவிலே விளையும் அந்த சிசுவிற்குள் மேலே சொன்ன வேதனை என்ற நஞ்சுகள் விளைந்து விடுகிறது.

பாவிகள்…! ஏனக்கு இப்படி எல்லாம் தொல்லைகள் செய்தார்களே என்று மற்றவர்களை அந்தத் தாய் எண்ணினால் தாய்க்குக் கை கால் குடைச்சல் எரிச்சல் வாத நோய் இரத்த கொதிப்பு எல்லாம் வருகிறது.

1.ஆனால் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு வேதனை விளைந்து
2.அது பிறந்த பின் எடுத்துக் கொண்டால் அதனுடைய பருவம் வரப்படும் போது
3.ஒரு விஷ வித்து எவ்வாறு வளர்ந்து முழுமை அடைகின்றதோ இதைப்போல
4.அந்தச் சிறு குழந்தைக்குக் கூட “இரத்தக் கேன்சர்” என்று வருகின்றது.

தன் வாழ்க்கைச் சூழ்நிலையில் அந்த வேதனையான நிலைகளை எடுத்து வேதனையையே பார்த்து அது தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானாலும் தாயின் கருவிலே விளையும் குழந்தைக்கோ இரத்தக் கேன்சராக மாறுகின்றது சில காலங்களில் அணுக்களின் செல்களில் இந்த உணர்வின் தன்மை அதிகமானால் கேன்சர் ஆகிவிடுகிறது.

இன்று பெரும்பகுதியான நிலைகள் எடுத்துக் கொண்டால் கேன்சர் நோய் அதிகமாக வருகின்றது
1.எங்கே திரும்பினாலும் எத்திசையில் திரும்பினாலும் நாம் காணும் பக்கம் எல்லாம் வேதனை வேதனை என்றே நேருகின்றது.
2.ஆனால் மனிதன் கரு இல்லாத பொழுது அது உடலில் நோயாக மாறுகின்றது.

வேதனைகளை அதிகமாக எடுக்கப்படும் பொழுது… அந்த விஷத்தின் தன்மை…
1.இயல்பாக இருக்கும் நரம்புகளில் இயக்கப்படுமே என்றால் விஷத்தன்மைகள் பாய்ந்து
2.நரம்புகளில் இருக்கும் ஆசிட் என்ற பவரை உறிஞ்சி விடும் நிலை வருகின்றது.

இன்று நாம் மனிதனாக இருக்கப்படும் பொழுது உடலிலே திடீரென்று “இரத்தத்தைக் காணோம்” என்று சொல்வார்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கும் ;பொழுது…!

காரணம்…
1.சில எதிர்மறையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொண்டால்
2.பாலிலே உப்பு பட்டால் எவ்வாறு பிருத்து விடுகின்றதோ இதைப் போன்று
3.இரத்தத்திற்குள் சில உணர்வின் தன்மை மாறுபட்டால் கெட்டியாக இருக்கும் இரத்தம் நீராக மாறிவிடும்… சிறுநீராகப் பிரிந்துவிடும்.

மனித வாழ்க்கையில் தன்னை அறியாது எத்தனையோ நிலைகள் மாறி “சாகாக்கலையாக” இப்படி எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது

ஆனால் வேகாநிலை பெற்றவன் அகஸ்தியன். தாயின் கருவிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பூர்வ புண்ணியமாகப் பெற்று அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையால்
1.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை வென்றிடும் அந்த நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்று
2.எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வருகின்றான்... அவனுருடைய சந்தர்ப்பம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் மேலே சொன்ன கொடுமையான நோய்களிலிருந்து தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

பிறருடைய வேதனையான எண்ணங்களைப் பதிவு செய்து கொண்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் கவரப்பட்டு எப்படி உடலில் நோயாக மாறுகின்றதோ இதைப் போல
1.தீமைகள் அகற்றி விண்ணுலகம் சென்ற அகஸ்தியனின் உணர்வை
2.நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே… அகஸ்தியனுடைய பேராற்றலை நமக்குள் வளர்த்துக் கொள்வோம். நோய் நெகெகும் சக்தி பெற்று உடல் நலத்துடன் வாழ்வோம் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.