ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2024

சுவாச நிலையில் நறுமணங்களைப் பெறுபவன் ஆண்டவனின் ஆசி பெற்றவனாகின்றான்

சுவாச நிலையில் நறுமணங்களைப் பெறுபவன் ஆண்டவனின் ஆசி பெற்றவனாகின்றான்

 

முதல் பாடத்திலேயே ஆண்டவனுக்கு அறுசுவை உணவு படைப்பது பற்றிச் சில நிலைகளைச் சொல்லி உள்ளேன்… அதன் விளக்கத்தை இன்று தருகின்றேன்.

என்பவர் யார்…? என்று முதலிலேயே சொல்லி உள்ளேன். ஆண்டவனுக்கு அறுசுவை உணவைப் படைக்கும் பொழுது ஆண்டவன் சக்தி பெற்ற முருகனாக உள்ளவரும் வெங்கடாஜலபதியாக உள்ளவரும் இப்படிப் பல ஆண்டவனின் நாமத்தைப் பெற்றுள்ள ரிஷிகள் எல்லாம் அங்கே வருகிறார்கள். எந்த வகையில்…?

நீ ஆண்டவனை வணங்கி அமுது படைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் வந்து அம்மணத்தின் ஈர்ப்பு தன்மைக்காக (பதார்த்தங்கள் பல வகை பழங்கள் புஷ்பங்கள் ஊதுபத்தியின் வாசனை கற்பூர சாம்பிராணி வாசனைகள்) அம்மணத்தின்…
1.நாம் படைத்த படையலின் மணத்திற்கு நாம் எண்ணி வணங்கும் பொழுது
2.யாரை நினைத்து எண்ணி வணங்குகின்றோமோ அவர்கள் அந்த நிலைக்கு வந்து
3.நம் சுவாச நிலைக்கு நம் உயிரணுவிற்கு வேண்டிய சில நிலைகளை அவர்கள் அதை எடுத்து நமக்கு அளிக்கிறார்கள்… புரிகிறதா…?

அவர்கள் எடுத்து என்று சொல்லும் பொழுது நாம் படைக்கும் பல வகைப் பதார்த்தங்களை அந்த நல்ல நறுமணங்களை நமக்கு அவர்கள் அளிக்கின்றார்கள்
1.நம் சுவாச நிலைக்கு அதை அளிக்கின்றார்கள்.
2.நம் சுவாச நிலையும் ஒருநிலைப்படுகிறது
3.நம் உயிரணுவும் ஊட்டம் பெறுகிறது.

ஆண்டவனின் நாமத்தைச் சொல்லிப் படைக்கும் உணவெல்லாம் அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ளவர்களா எடுத்து அள்ளி அள்ளி உண்ணுகிறார்கள்…?

இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி நல்ல மணங்களைத் தன் சுவாச நிலைக்குத் தன் உயிரணுவிக்கு ஊட்டமாக எடுத்துக் கொள்ள அச்சித்தர்களினாலும் ரிஷிகளினாலும் ஞானிகளினாலும் தான் முடியுமப்பா.

இம் மனித உடலில் உள்ள நமக்கு நாம் பூஜை நிலையில் படைக்கும் உணவின் மணத்தை எல்லாம் நறுமணங்களை எல்லாம் நமக்கே தான் அளிக்கிறார்கள் “அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதிகள் எல்லாம்…”

1.நான் எல்லோருக்குமே பொதுவானவன்… சமய வேறுபாடு எனக்கில்லை
2.சகலத்தையும் ஒன்றாக எடுப்பவன் தானப்பா நான்.

இந்துமத முறைப்படி இப்படிப் பல முறைகளில் வணங்குகிறோம். ஆண்டவனை இந்நிலையில் வணங்கும் பொழுது அச்சித்தர்கள் ரிஷிகள் நாம் வணங்கும் முறைக்கு நம் நிலைக்கு நல் உணர்வு தருகின்றார்கள்.

ஆனால் பல கோவில்களில் பலியிட்டு அந்நிலையில் ஆடு கோழி இவைகளை உணவாகப் படைத்து ஆண்டவனை வணங்குகின்றார்கள். அவர்கள் வணங்கும் நிலைக்கும் வருகிறார்கள்… அவர்கள் வணங்கும் தெய்வமான ஆவிகளான நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் இன்னும் பல நாமங்களுடைய அந்நிலையில் அருள் பெற்ற ஆவிகள்.

ஆண்டவன் சக்தியிலிருந்து அவரவர்கள் நிலைக்குப் பெற்றார்கள் சில சக்திகளை ரிஷிகளும் தவசு முனிவர்களும் என்றேனல்லவா. அவர்கள் பெற்ற சுவாச நிலைக்குத் தகுந்தபடி தான் அவர்கள் நல் சக்தியின் அருளைப் பெறுகின்றார்கள்.

அச்சக்தியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் அவர்கள் சுவாச நிலைக்கு எங்கு ஆகாரம் கிடைக்கிறதோ அங்கு வந்து அருள் தருகிறார்கள் ஆண்டவனாக.

அவர்கள் பெற்ற அருள்… நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் என்னும் நாமங்களுடைய தேவதைகள் எல்லாம் வந்து அவர்களுக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அவர்கள் சுவாச நிலைக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் அருள் புரிகின்றார்கள் அம்மக்களுக்கு.

இன்னும் பல இடத்தில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பலவித வாசனைத் திரவியங்களை தன் மேலே பூசிக்கொண்டு அவர்கள் வணங்கும் ஆண்டவனின் ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.

அந்நிலையில் அவர்கள் வணங்கும் அல்லாவும் இயேசுவும் வருகிறார்கள் அவரவர்கள் நிலைக்கு தகுந்தபடி ஆசீர்வாதம் அளிக்கிறார்கள்.

1.சுவாச நிலையில் எவன் ஒருவன் நல்ல மணங்களைப் பெறுகின்றானோ
2.அவன் ஆண்டவன் அருளைப் பெற்ற ஆண்டவனின் ஆசியைப் பெற்றவனாகின்றான்.
3.ஆண்டவனின் அருளெல்லாம் இச்சுவாச நிலையிலிருந்து தான் உயிரணுவிற்குக் கிடைத்து மனிதனின் நிலையையே நடத்திச் செல்கிறது.

சுவாச நிலையிலிருந்து வருவது தான் எல்லாமே…!

மனநிலை சோர்வுற்றவனும் மனநிலையில் குழப்பத்துடன் உள்ளவனும் இவ்வாண்டவனை எண்ணி அவ்வாண்டவனுக்குகந்த நிலையில் நறுமணம் உள்ள புஷ்பத்தைச் சூட்டி வணங்கும் பொழுதே மனநிலையில் சில மாற்றங்களைக் காணலாம்.

1.சுவாச நிலையில் இருந்து தானப்பா இவ்வுலக நிலையே உள்ளது
2.இவ்வுலக நிலைக்கு ஊன்றுகோலே சுவாச நிலைதானப்பா.

நீராவியில் எப்படி ரயில் செல்கின்றது என்று சொல்கின்றாயோ அந்நிலையே தானப்பா இவ்வுலகச் சுற்றலும். அச்சக்தியின் சொரூப நிலை மனிதனை மட்டும் தாங்கிக் கொண்டில்லையப்பா.

அவன் படைத்த படைப்பில் எல்லாவற்றிலுமே கலந்துள்ளவனப்பா அவன். அச்சக்தியின் சொரூப நிலையைக் கண்டிடவும் முடியாது சொல்லிடவும் முடியாது.

போற்றிப் போற்றி வணங்கிடத் தானப்பா வேண்டும் இந்த மானிட உடலைப் பெறும் பாக்கியம் பெற்ற நாம் எல்லோருமே.