ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2024

காந்த சக்திகளைக் (MAGNET POWER) உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்

காந்த சக்திகளைக் (MAGNET POWER) உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்

 

மகரிஷிகளுடைய அருளாற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும் என்றால் “அதற்குத் தகுந்த காந்த சக்தி” நமக்கு முக்கியமாகத் தேவை.

27 நட்சத்திரங்களையும் மற்ற கோள்களையும் ஏன் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அவைகள் விஷத்தினுடைய ஆற்றல் கொண்டது

27 நட்சத்திரங்களும் நவக்கோளின் சக்திகளும் மற்ற அதனுடன் சேர்த்துக் கொண்ட பல சக்திகளும் நம் உடலிலே அந்த சத்தெல்லாம் இருக்கின்றது.

நம்முடைய மனித வாழ்க்கையில் பல எண்ண உணர்வுகளுடன் நாம் இருக்கின்றோம்
1.அந்த உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்கு
2.27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் இந்த விஷமான அந்தச் சத்துக்களை எண்ணும்பொழுது
3.நேரடியாக அந்தச் சக்திகளைப் பெற்று
4.சாதாரண வாழ்க்கையிலே இயக்கச் சக்தியாக இருக்கும் உணர்வலைகளை அது அடக்கும்
5.அதனால்தான் 27 நட்சத்திரங்களையும் நவக் கோளின் சக்திகளையும் எண்ணி எடுக்கும்படி சொல்வது.
6.அதாவது அந்த உணர்வலைகள் நம் உடலுக்கு முன் பரவி இருப்பதை (ஆன்மாவில் இருப்பதை) அது அடக்கும்.

27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் சூரியன் எடுத்து ஒளிகாந்த சக்தியாக மாற்றி உணர்வலைகளாக வெளிப்படுகின்றது. அதைப்போல
1.நாம் இந்த உணர்வின் எண்ணங்களைத் தூண்டச் செய்து நம் குருநாதரின் உணர்வுடன் கலந்து
2.கலந்த பின் உயிரை எண்ணி உயிருக்குண்டான காந்த சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்க்கின்றோம்.
3.அப்படி ஈர்க்கப்படும் பொழுது நமக்குள் காந்த சக்திகள் கூடுகின்றது

சூரியன் எவ்வாறு 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோள்களின் சக்தியையும் அது ஒளி காந்தமாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல நம் உணர்வுக்குள் அதை எடுத்து நாமும் ஒளியாக்க முடியும்.

ஆனால்… சாதாரணமாக நம் உடலில் இருந்து வெளிப்படும் சுவாசம் உயிரிலே படும் பொழுது
1.நாம் எந்தெந்த எண்ணங்கள் கொண்டு எண்ணினோமோ அந்த உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டு
2.மகரிஷிகளையோ துருவ நட்சத்திரத்தையோ எண்ண விடாது.
3.கண்களை மூடி தியானத்திலிருந்தால் மகரிஷிகள் என்று நினைத்துக் கொண்டிருப்போம் அதை நினைத்து நம்மால் இழுக்க முடியாது.

திடீரென்று வருத்தமாக இருக்கும் பொழுது பாருங்கள். நாம் யாரிடம் சண்டையிட்டோமோ அவருடைய உருவம் எல்லாம் தெரியும்

உதாரணமாக நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் “இந்த மாதிரி ஆகிவிட்டது என்று அங்கிருந்து யாராவது சொன்னால்” அடுத்து தியானத்தில் அமர்ந்தால் உடனே அதுதான் முன்னாடி நிற்கும் அந்த இடங்கள் எல்லாம் தெரியவரும் அங்கு என்ன குழப்பங்கள் இருக்கின்றதோ அது எல்லாம் தெரிய வரும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த நேரத்தில் பெற வேண்டும் என்றால் அது எண்ண விடாது
1.அதனுடைய ஆற்றலை மங்கச் செய்வதற்கு தான் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்திகளையும் பெற வேண்டும் என்று
2.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அலைகளை உங்களுக்குள் பரப்புகின்றோம்.
3.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகளை அது அடக்கவல்லது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு உடனடியாக இப்படி அடங்கச் செய்ய முடியும்.

27 நட்சத்திரங்களும் கதிரியக்கச் சக்திகள் கொண்டது. அந்தச் சக்திகளை உங்களுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்துகின்றோம்.

உங்கள் உடலுக்குள் 27 நட்சத்திரங்களின் சக்தியும் உண்டு நவக்கோளின் சக்தியும் உண்டு.
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி எடுத்து அதனுடைய அலைகளைத் தணித்து…
2.இன்னொன்றுடன் இது கலப்பதற்கு முன்னாடி உங்களைப் பெறும்படி செய்கிறோம் (ஞானகுரு).

தியானத்தின் மூலமாக சிறுகச் சிறுக நீங்கள் எடுக்கப்படும் பொழுது இந்த சக்திகள் நமக்குள் மனித எண்ணங்களை இயக்கச் செய்யும் மற்ற நிலைகளை அடக்குகின்றது.

சூரியன் எவ்வாறு நஞ்சை அடக்கி ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல நம் உயிரின் சுவாசத்திற்குள் செல்லும் போது
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி மெய் ஒளியுடன் நாம் பிரகாசிக்கச் செய்ய முடியும்.
2.நம் உயிரை ஒட்டி இருக்கக்கூடிய காந்த சக்திகளுக்குள்… அதாவது எலும்புக்குள் காந்தங்களாக அடர்த்தி ஆகிவிடும்.
3.ஓ….ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துடிப்பால் எண்ணி எடுக்கப்படும் பொழுது “அதிகக் காந்தத்தை ஈர்க்கும்…”

ஒரு மோட்டாரில் மேக்னட் அதிகமாக இருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி ஒரே மாதிரி சுற்றினாலும் அந்தக் காந்தச் சக்திக்கு தக்கவாறு மின்சாரத்தை அது உற்பத்தி செய்யும்.

அதைப்போல நம் உயிரின் துடிப்பு ஒரே சீரான நிலையில் இருந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட காந்த சக்திகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய எழும்புகளின் சில பாகங்களில்
1.உயிரை அணுகி உள்ள இடங்கள்
2.செவி ஓரங்களிலும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள்ளும் இந்தக் காந்த சக்திகள் உண்டு.

யாம் இப்பொழுது உபதேசிக்கும் பொழுது புலனறிவுகளில் முக்கியமாக… கண் செவி உயிர் இருக்கும் பாகங்களுக்குக் காந்த சக்திகள் பெருகுகின்றது. எந்த நினைவின் தன்மை பெறுகின்றோமோ கண் விழிகளினுடைய நிலைகளும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி கண்ணுக்கு உண்டு.

அதே போல உயிரை அணுகி உள்ள இடத்திலும் காந்த சக்தி அதிகமாகக் கூடும் பொழுது… உயிரின் துடிப்பு லேசாக இருந்தாலும்
1.காந்தத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் பொழுது
2.நாம் எந்த மகரிஷியினுடைய சக்திகளை எண்ணி இருக்கின்றோமோ அதைப் பெற முடியும்.
3.காரணம்… அவர்கள் மிகவும் ஆற்றல் பெற்றவர்கள்… இவ்வாறு காந்தத்தை அதிகமாகக் கூட்டித்தான் அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.

அந்த மகரிஷிகள் அனைவரும் “அதீத காந்த சக்திகளைப் பெற்றுத் தான்… விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து… உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்…”

அத்தகைய ஆற்றலை நாமும் பெறுதல் வேண்டும்.