ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2024

நல் மூச்சே விட்டிடுங்கள்

நல் மூச்சே விட்டிடுங்கள்

 

ஓம் என்னும் பதத்திற்கு ஓ…ம் என்ற ஓங்கார இசையில் கலந்திருப்பாய் என்று பாடுகின்றாய். அப்பாடலின் ஆணிவேர் என்னப்பா…?

ஒரு நிமிடம் உன் நிலையில் பகர்கின்றேன்… ஒரு சொல்லில் பகர்ந்திடப்பா…! உதய வழியை அளிக்கத்தான் இந்த நாள் முதல் உன் மனதிற்கு அளிக்கின்றேன்.

உன் வழியில் வந்த எண்ணம் ஒரே எண்ணம் உணர்ந்து விட்டாய் உன் உதயத்திலேயே.

1.தாவரங்களின் உயிர் அவ்வாணி வேரில் உள்ளது… அதன் ஈர்ப்புத் தன்மை சூரிய ஒளி பட்டுக் கீழ் நோக்கி இழுக்கின்றது.
2.மனிதனின் ஆணிவேர் உயிர் சிரசின் முன் பகுதியில் உள்ளது… மனிதனின் சுவாச நிலை சூரிய ஒளி பட்டவுடன் தன்னைத்தானே சுற்றுகின்றது.
3.இவ்வுலகத்தின் ஆணிவேர் அவ்ஓம் என்ற ஓங்கார இசையினிலே சுழல்கின்றது.

உன் உதயத்தில்… உன் ஜெப நிலையில்… அவ்வுலகச் சுழற்சியில் “ஓ…ம்” என்ற ஓங்கார நாதத்தை உணர்ந்திடலாம்.

ஒரு நிமிடம் ஜெப நிலையில் இருந்திட்டால் உன்னைச் சுற்றி உள்ள ஒலிகள் எல்லாம் அடங்கும். ஓ…ம் என்ற ஓங்கார இசையை ஜெப நிலையின் பொருள் நம்மைச் சுற்றியுள்ள ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை அருளச் செய்யத்தான் இந்த நிலையை உண்டாக்கினேன். வழியமைத்துப் பாடம் புகட்டுகின்றேன்.

ஏட்டுப்படிப்பு மட்டும் தான் ஏற்கின்றாய். செயலில் வரவேண்டுமப்பா. ஓ…ம் என்ற ஒலியின் ஓங்கார இசையில் கலந்திடத்தான் இந்த உண்மைகளை உணர்த்திட்டேன்.
1.ஓ..ம் சக்தி என்ற பாடலை அமைத்திட்டேன்.
2.உருளுகின்ற சக்தியே… உயிரணுவின் சக்தியே… உயர்ந்து நிற்கும் சக்தியே…! பாடலின் பொருளும் பாடத்தின் பொருளும் ஒன்றுதான்.

ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி
சிங்கார இசையினிலும் இருந்திடுவாள் ஓம் சக்தி
சினமெல்லாம் தவிர்த்திடுவாள் ஓம் சக்தி
உலகெல்லாம் ஓங்கி நிற்கும் ஓம் சக்தி
உலகாளும் சக்தியே
உருளுகின்ற சக்தியே
உயர்ந்து நிற்கும் சக்தியே
உயிரணுவின் சக்தியே
உலகாளும் ஈசனின் சக்தியாய்
பூ மழையாகப் பொழிந்திடுவாய் சக்தியே…
பரிபூரணமாக என் மனதில் கலந்திடுவாய் சக்தியே
மனமெல்லாம் மணக்கச் செய்வாய் சக்தியே
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி.

தியான நிலையில் நினைவெல்லாம் இன்னும் பரிபக்குவ நிலை வர வேண்டும். சுவாச நிலையில் “வாழ்க்கை முறையிலேயே” கலந்து வர வேண்டும் அத்தியான நிலை.

அந்நிலையில் தான் நீ அமரும் தியான நிலையில் இரண்டும் கலந்தால் தான் தியான நிலை கைகூடும்.
1.சுவாச நிலையின் எண்ணம் தான் முதல் படியில் வந்துள்ளது.
2.அடுத்த முதல் படியில் வந்துவிடும் ஓங்கார இசையின் நாதம் உன் செவிக்கு.
3.அத்தியான நிலைக்கு முதல் படி சுவாச நிலை அதைப் புரிந்திட்டாய்.

வரும் முதல் நிலை “ஓங்கார ஒலியைக் கேட்பது தான்…!” அந்நிலையில் நீ விடும் சுவாச நிலையே மறந்துவிடும். ஓங்கார ஒலி தான் உன் செவிக்குள்ளே ஒலித்து வரும்.

உலகத்தன்மையே ஓ…ம் என்ற ஒலியினால் தான் இயங்குகின்றது இவ்வொலிதான் உலகத்துக்கு ஆணிவேர். அவ்வொலியின் மேல் அவ்ஒளி பட்டவுடன் தான் இந்த ஜீவராசிகளின் ஜீவனெவல்லாம் தோன்றுகிறது.

இவ்ஒலியிலிருந்து நல் மனத்தைப் பெற்றிடுங்கள்… நல் மூச்சே விட்டிடுங்கள் என்பதெல்லாம் எந்த நிலையில்…?

நல் மூச்சே விட்டிடுங்கள் என்னும் பொழுது அந்நிலையில் உள்ள புஷ்பங்களையும் நறுமணம் கொண்ட பொருள்களையும் தேடுகின்றாய். அந்நிலையில் வருவதல்ல நல் மூச்சு.

நல் மூச்சு என்பதன் பொருள்…
1.உன் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்து வருவது தான்.
2.உன் மனநிலையில் மகிழ்ச்சியாக உள்ள நாளில் அவ்விடத்தில் உள்ள அசுத்தக் காற்றுகளும் உன்னை வந்து அடையாது.
3.அந்நிலையில் உன் சுவாச நிலையம் அந்தத் தீய மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால்… உன் மனமும் சுவாச நிலையும் உன் மன நிலையில் சோர்வு வந்துவிட்டால் உன் சுவாச நிலைக்கு எந்த நறுமணங்களும் வந்து அடையாது… புரிந்ததா…!