ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 21, 2024

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

 

ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வினையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலயம் வருபவர் எல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும். என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
1.நாட்டை ஆட்சி புரிபவர்கள் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் இந்த உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நாட்டை உருவாக்க இது பயன்படும்… மதங்கள் அல்லாதபடி உருவாக்க இது பயன்படும்.

இந்த அரசாங்கத்தில் நிர்வாகம் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள். அப்போது இங்கே பகைமைகள் வராது. இதைப் போன்று செய்தால்
1.எனக்குச் செய்யவில்லை
2.உனக்குச் செய்யவில்லை என்ற அந்த உணர்வுகள் வராது.
3.அனைவருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் செவ்வனச் செய்யும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஆலயங்களிலே வணங்குங்கள்..

அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.அரசாங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.இந்த நாட்டைக் காத்திடும் சக்தியாக அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்கள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அரசாட்சி செய்வதை நமது அரசு என்று எண்ணி அங்கே நிர்வாகம் செய்பவர்கள் அனைவரும் தெய்வ குணம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் சக்தியாக அந்த மன பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். பேதங்கள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆலயங்களில் எண்ணுங்கள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்க இது உதவும்.

சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தனத்தின் நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டைக் காத்திடும் அனைவருக்கும் (அரசியல்வாதி… அதிகாரிகள்… படை வீர்ர்கள்) இந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும்
2.அங்கே அது வளர வேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள்.
3.ஏனென்றால் நாம் அங்கே சென்றாலும் இந்த நிலைதான்… யார் சென்றாலும் இந்த நிலை தான்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் பொழுது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வருகின்றது. இதையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுது குடும்ப ஒற்றுமை வர வேண்டும் என்று நாம் எண்ணுவது போல
1.நமது நாட்டைக் காத்திடும் நிர்வாகிகள் அனைவருக்கும் அந்த ஒருங்கிணைக்கும் சக்தி பெற வேண்டும் என்று
2.நாம் அனைவரும் எண்ணும் பொழுது அந்த ஆலய நிர்வாகிகளும் அந்த ஆலயத்திற்கு வருகின்றார்கள்
3.அவர்களும் இதே போன்று எண்ணும் பொழுது மனிதன் என்ற தன்னிலை அடையும் சக்தி வருகின்றது

அதற்குத்தான் தத்துவ ஞானிகள் ஆலயத்தை வைத்தார்கள்…!

பாலைப் போன்ற தூய்மையான மனம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் பாலைப் போன்ற தூய்மையான மனம் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவார் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
1.அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்.
2.அவர்கள் மன பலம் பெற வேண்டும் மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நம்முடைய எண்ணம் அவர்களுக்கு வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வாழவும் இது உதவும்.

ஆகவே மகரிஷியில் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்று இந்த உடலுக்குள் நல்லவைகளும் கெட்டவைகளும் குணங்கள் கலந்து தான் இருக்கின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

இதே உணர்வின் நிலைகள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது
1.நமது அரசே உலகிற்கு எடுத்துக்காட்டும் அரசாக வளர்ந்து வரும்
2.அதன் கீழ் வாழ்ந்து வரும் மக்களாகிய நாமும் உயர்ந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மன பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் உலகில் மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி… எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் இந்த முறைப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்… ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசும் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி ஒருங்கிணைந்தால் கட்சி பேதமும் வராது இன பேதங்கள் வராது மத பேதங்கள் வராது.
1.நாம் அனைவரும் இந்த ஆட்சி சீராக வளர வேண்டும் என்று எண்ணி அப்படி நடந்தால் நமக்குத் தொல்லை இல்லை.
2.அதற்குப் பதிலாக என்னுடைய வழியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்கடுத்துத் தொல்லைகள் தான் வருகின்றது.

ஆகவே இத்தகைய எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஆலயங்களில் அரசை ஒத்தே நாம் பிரார்த்திக்க வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருங்கிணைந்து சேர்ந்து ஓட்டு போட்டு தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் நல்ல நிலையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால்
1.அவர்களுக்குள் நம்மை காக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.பின் நாம் எண்ணும் எண்ணங்கள் பகைமை இல்லாத உணர்வாக வளர்கின்றது.

இதை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து அடுத்தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மன பேதமின்றி இன பேதம் இன்றி ஒருங்கிணைந்து வாழ வேண்டும். ஆட்சி புரியும் நிர்வாகிகள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக எண்ணுதல் வேண்டும்.

நம் உடலுக்குள் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் எப்படிக் கலந்திருக்கின்றதோ இதைப் போன்று
1.நமது நாட்டுக்குள் இருக்கும் எல்லாம் ஒருங்கிணைந்தால் தான்
2.நாடு நலம் பெறும்… மக்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும்.

இதைப் போன்ற தீமைகள் விளைவித்து மக்களை தவறான வழியில் செயல்படச் செய்யும் உணர்வுகளை மாற்ற ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம்… இந்த நாட்டில் பிறந்த மக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் அறியாது செய்யும் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும்… மக்கள் பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்… அந்த மகரிஷிகள் அருள் வட்டத்திலே மனிதனாகப் பிறந்த முழுமையின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதமின்றி மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்” இந்த உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதங்களால் போர் எப்படி நடக்கின்றதோ அதைப் போல் கட்சி பேதத்தால் உண்மை நிலைகள் அறியாது பேத உணர்வுகளே வளர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் தன்மைகள் இந்த உலகெங்கிலும் இப்போது மறைந்து கொண்டே வருகின்றது.
1.அதை போன்ற நிலைகள் நம் நாட்டிலே விளையாது கட்சி என்ற பெயரை அகற்றிவிட்டு
2.நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சி நிலைகள் சீராக வரவேண்டும் என்று ஒருக்கிணைந்து எண்ணினால்
3.எல்லோரும் நல்லவரே…! எல்லோரும் நல்லாட்சியைப் பெற முடியும்.

ஆனால் அரசாங்கத்தைக் குறையாக எண்ணி அதை வளர்த்து விட்டால் அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறை கூறிக் கொண்டே தான் இருப்போம். குறைய நிவர்த்திக்கும் எண்ணம் நமக்குள் வராது. குறையைச் சொல்லிவிட்டு நாமும் குறையைத் தான் செய்து கொண்டிருப்போம்.

ஆகையினால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன நிலைகளில்… நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து… நமது நாடு சீராக வளர்ந்திடும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து நினைப்போம்.

பக்தி கொண்ட நிலையில் இருந்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று சில பேர் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கடவுளின் பெயரால் மக்களின் மதியை மாற்றிக் கொண்டிருக்கும் அறியாத நிலையில் தீமையை விளைவிக்கும் சாதுக்கள் என்ற பெயர்களால்ம் பல தவறுகள் செய்து கொண்டிருக்கும்
1.அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவ்வாறு செயல்படும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
3.நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் எண்ண வேண்டும்.

மாயாஜாலத்தாலும் மாந்திரீகத்தாலும் மக்களை மதி மயங்கச் செய்யும் எவராக இருப்பினும் “அவருடைய தீய எண்ணங்கள் மறைந்து…” மக்களைக் காத்திடும் உணர்வுகளும்… ஞானிகள் காட்டிய வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நல்ல எண்ணங்களும் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு…
1.நான் கடவுளைக் கண்டேன்… கடவுளின் அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டு
2.அவர் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இதைத் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர்ந்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடல் பாடிக் கொண்டிருக்கும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் உலகம் அனைத்திற்கும் மெய் ஞானத்தை உணர்த்திச் சென்றான்… ஞானத்தைப் போதித்தான்.

தென்னாட்டிலே வாழும் நாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலை மதபேதமற்ற நிலையிலும் இனபேதமற்ற நிலையிலும் மொழி பேதமற்ற நிலைகளிலும் இந்த உலக மக்கள் வாழ வேண்டும் என்று
1.தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒருங்கிணைந்த நிலை கொண்டு
2.கட்சி பேதமின்றி நாம் செயல்பட வேண்டும்.

ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பார்… ஒருவர் கடவுள் இல்லை என்பார்…! ஒருவருக்கொருவர் போர் செய்து பிழைகள் செய்து கொண்டு குறைகளை உருவாக்க முடிகின்றதே தவிர அதை நீக்கும் நிலை இல்லை.

அது போன்ற நிலைகளை மறந்து விட்டு ஆட்சி பீடங்கள் சீராக இயங்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த உணர்வின் வலுவை நாம் கூட்டினோம் என்றால் “நமது ஆட்சி நலமாக இருக்கும்… உலகுக்கு எடுத்துக்காட்டாகவும் வரும்.

1.அவர்கள் உயர்ந்த ஆட்சி புரிய வேண்டும் என்று நாமும் ஒத்துழைக்க வேண்டும்
2.குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் குறைகள் தான் வளர்ந்து கொண்டிருக்கும்… அதைத்தான் வளர்க்க முடியுமே தவிர நீக்க முடியாது.

நீங்களே அந்த ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து பார்த்தால் ஒரு நண்பன் எனக்கு இதைச் செய்து கொடு...! என்று கேட்பான் இன்னொருவன் அவனுக்குச் செய்கின்றான்… எனக்கு செய்ய மாட்டேன் என்கிறான் என்பான்.

ஒருவருக்குச் செய்யும் பொழுது மற்றவர் குறை சொல்லத்தான் வருவார்கள்.

இது போன்ற நிலைகள் இல்லாதபடி அரசியல் பேதம் இல்லாதபடி எத்தகைய பேதம் இல்லாதபடி நாம் அனைவரும் ஒன்று சேர்த்துச் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னது போன்று இந்த உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக வளரச் செய்யும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாம் அனைவரும் பெற்று இந்த ஒருங்கிணைந்த ஆட்சியாக பேதமற்ற நிலைகளில் சிருஷ்டித்து உலக அரங்கிலே அருள் ஞானத்தைப் பரவச் செய்வோம்.
1.உலகைக் காத்திடும் சக்தியாகக் கொண்டு வருவோம் என்று
2.இதைப் பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்வோம்.

யார் எந்தக் குறையைக் கூறினாலும் குறைகள் இல்லாத நிலையாக உருவாக வேண்டும்… குற்றமற்ற நிலையாக தமிழ்நாடு உருவாக வேண்டும்.

தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தகைய பேதமும் இல்லாத பேதமற்ற வாழ்க்கையாக நாம் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் இங்கே வளர வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகில் வாழும் மக்கள் அனைவரும் முழு முதல் கடவுள் என்று ஞானிகள் உணர்த்திய அருள் வழிப்படி உலகைச் சிருஷ்டிக்கும் மனித உடல் பெற்ற நாம் “பல நன்மைகளை நாம் அனைவருக்கும் உருவாக்குவோம்…”

உடலை விட்டுப் பிரிந்தால் என்றும் பிறவியில்லா நிலை அடைவோம் பகைமையை வளர்த்து புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிடும் நிலையாக இல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்துவோம்.

இதை நாம் அனைவரும் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாக வருவோம்

எவர் எத்தொழில் செய்தாலும் அந்தக் குறைகளைப் பதிவு செய்யாது அவர் அறியாது குறை உணர்வுகள் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்துதான் இந்தப் பேருண்மைகளை எல்லாம் அறிந்து உணர்த்திச் சென்றார். சந்தர்ப்ப பேதங்களால் மக்கள் அனைவரும் மன வேதனைப்பட்டு கொடிய நோய்களுக்கும் கொடிய செயல்களுக்கும் ஆளான நிலையில் இருந்து விடுபட வேண்டும். ஆகையினால்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதித்து
2.ஈசன் கட்டிய உடலான ஆலயத்திற்குள் அருள் ஞான சக்திகளை நீ புகுத்தி விடு என்றார்.
3.அங்கே அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வு கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் யாம் (ஞானகுரு) செய்கின்றோம்.

இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் இதை வளர்த்து நமது நாடு என்ற நிலைகளிலும் “உலகம் காக்கப்பட வேண்டும்” என்ற நிலைகளில்
1.அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் பேதமற்ற நிலைகளாக வாழ்வோம்
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம்.
3.மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்
4.நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்போம்
5.தீமையற்ற நாடாக நம் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
6.இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலையாக எல்லா நாட்டிற்கும் நாம் அருள் சேவை செய்யும் அந்தப் பண்பினை ஊட்டுவோம்
7.நாம் அனைவரும் சகோதரர் என்ற நிலையைக் கூட்டுவோம்.

ஆகவே இந்த உலகம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற்றால் நாமும் நலம் பெறுவோம் உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்தத் தத்துவம் எந்தத் தென்னாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவியதோ மீண்டும் இங்கிருந்து
1,மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை ஒன்று சேர்த்திடும் நிலையாக
2.மக்களைக் காத்திடும் நிலையாக குரு அருள் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்து
3.உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து
4.இந்த உலகைக் காப்பீர் உங்களைக் காப்பீர் உங்கள் ஊரைக் காப்பீர் உலக மக்களைக் காப்பீர்கள்.

நிறைந்த மனதுடன் நாம் வாழ்வோம் எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம் அவர்கள் நிறைவடைவதைக் கண்டு நாம மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கண்டு நாமும் பேரானந்த பேரு நிலை இந்த வாழ்க்கையிலே அடைவோம் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகள் இந்த உடலிலேயே வளர்ப்போம் என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நாட்டு அரசுக்கு நல்ல உணர்வை நாம் எடுத்துக் காட்டினோம் என்றால் அதுவே நம் அரசாகின்றது நாமே அரசாகின்றோம் அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலையில் கொண்டு “நாம் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நினைவைச் செலுத்தினால்
1.அந்த அரசும் நலமாக இருக்கும் அந்த அரசால் நாமும் நலமாகின்றோம்.
2.நாம் தான் அரசு அரசுதான் நாம் என்ற நிலையில் கட்சி பேதமின்றி இந்த நாட்டிற்குள் உயர்ந்த ஞானத்தை வளர்ப்போம்.

பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக்காட்டாக வரவேண்டும் உலக பேதமற்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்று தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வுகளை ஒருங்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் நலம் பெற வேண்டும் என்று நமது உணர்வுகளை பரப்புவோம். சகோதர உணர்வுடன் நாம் வாழ்வோம்… பகைமையற்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டி இதை நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).