ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2024

“மிக உயர்ந்த சக்திகளை” உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

“மிக உயர்ந்த சக்திகளை” உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

 

அகஸ்தியன் உருவத்தைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள் பின்னாடி வந்த ஞானியர்கள். காரணம்… “இளமையிலேயே முதுமையானவர்கள் செயல்படுத்தும் செயலைச் செய்தவன்…” என்று காட்டுகின்றார்கள். தனது ஐந்தாவது வயதிலேயே வான இயலின் தத்துவத்தை அறிந்தவன் தான் அகஸ்தியன்

இன்றும் விஞ்ஞான உலகில் நாம் பார்க்கலாம் ஐந்து வயதுக் குழந்தை கம்ப்யூட்டர் கால்குலேட்டர் இல்லாமல் எல்லா வேலையும் செய்கிறது… உடனே கணக்குகளைச் சொல்கிறது…! என்று சொல்கின்றோம்.

1.சிறு வயதில் இதையெல்லாம் நன்றாகச் செயல்படுத்தும்
2.ஆனால் வளர்ச்சியில் ஆசையின் நிலை வரப்படும் பொழுது பின்னாட்களில் அந்தத் திறமை முடியாது போகிறது…
3.கடைசிலே ஒன்றும் முடிவதில்லை.

பெரிய தொழிற்சாலையில் கூட முதலில் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் இளம் வயதில் செய்த்து போன்று செய்திகள் பின் நாட்களில் வருவதில்லை. காரணம் உலக ஆசையின் நிலைகளைச் சேர்க்கப்படும் பொழுது அதனுடன் மறைந்து விடுகின்றது

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.எடுத்துக் கொண்ட சிந்தனைகளுக்கொப்ப சில அணுக்களின் தன்மை நுகர நேர்ந்தால்
2.ஞானத்தின் தன்மையாக அறியும் நிலை வருகின்றது.

நாளடைவில் ஆசை அதிகமாகும் போது மறைந்து விடுகின்றது. உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதையெல்லாம் பத்திரிக்கையில் பார்த்து இருப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் விளைந்தது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் புகுந்த நிலையில் அதனுடைய இயக்கமாக இப்படி இயக்கும்.

பின் வயது வளர்ச்சியாக…
1.இவனுக்குள் மாற்று உணர்வுகளோ தீமைகளோ அதிகரிக்கப்படும் பொழுது கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டு
2.மற்றவர்களுக்கு இவன் நல்ல விடைகளைச் சொன்னாலும் அந்த ஆன்மாவும் கடைசியிலே நாசமாகிவிடும்.
3.இவனுடைய நல்லதும் கேட்டு… உடலில் நோயாகி மடிந்து விடுவான்.

எல்லோருக்கும் அவன் ஜோசியம் சொன்னான்… நல்லதெல்லாம் சொன்னான் என்று முதலில் பெரிதாகச் சொன்னாலும் அவரும் கடைசியில் இந்த மண்ணுக்குள் தான் போகின்றார் (மடிந்து போகின்றார்).

இப்பொழுது என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் உங்கள் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொல்கின்றேன். ஆனால் ஆயிரக்கணக்கானோர் வந்து “எனக்கு இப்படிக் கஷ்டம்… அப்படிக் கஷ்டம்… நோயாக இருக்கின்றது…!” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குள் என்ன ஆகும்…?

என்னால் முடிந்த அளவு துடைக்கின்றேன். ஆட்கள் எண்ணிக்கை கூடக் கூட கஷ்டம் என்று கூறுவதைத் துடைக்கத் தவறினால் நானும் அந்த நிலைக்குத் தான் போக வேண்டி வரும். வேறு வழி இல்லை…!

இரவும் பகலும் நான் விழித்திருந்து மகரிஷிகளின் அருள் உணர்வினை எடுத்து… கேட்டறிந்த தீமையின் உணர்களைத் துடைத்துக் கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய வழியில்
1.மிக உயர்ந்த சக்திகளை உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
2.ஆனால் அந்த உயர்ந்த சக்தி எங்களுக்கு வேண்டும் என்று யார் கேட்கின்றார்கள்…?

என்னைப் பார்த்ததுமே… கோவிலிலே அழுவது போன்று தான் கஷ்டத்தைச் சொல்லி அழுக ஆரம்பிக்கின்றார்கள். நான் நல்லது செய்ய வந்தாலும் கூட இப்படி ஆகிவிடுகின்றது.

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.என் பிள்ளைகள் ஞானமாக இருக்க வேண்டும்
3.தொழில் சீராக இருக்க வேண்டும்
4.என் வாடிக்கையாளர் அனைவரும் செல்வாக்குடன் வாழ வேண்டும் கடன் பாக்கி எல்லாம் கொடுக்க வேண்டும்
5.அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி யாராவது கேட்கின்றீர்களா…? இல்லையே…!

வரக்கூடிய தீமைகளிலிருந்து மாற்றி அமைப்பதற்குத் தானே இத்தனையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.. நான் சொல்வதை நீங்கள் கேட்டு… விரும்பிச் செய்ய வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் கேட்டாலும் கூட… மறுபடியும் அதற்குத் தானே வந்தேன் என்று “மீண்டும் கஷ்டத்தைச் சொல்வார்கள்…” எத்தனையோ வழிகளில் யாம் அதை மாற்றி அமைப்பதற்குப் பிரயத்தனம் செய்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.

காட்டிற்குள் செல்லும் போது பல அவஸ்தைகளைக் கொடுத்தார் குருநாதர். அகஸ்தியன் எவ்வாறு சக்தி பெற்றான் என்பதை அறியச் செய்தார். ஆனால்
1.நாட்டிற்குள் வந்து “அகத்திற்குள் இயங்கும் இயக்கங்கள் எவ்வாறு…?” என்பதை உங்களிடம் சொல்லி
2.சக்தி வாய்ந்த வாக்குகளை கொடுக்கின்றோம் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா…!

ஒருவன் திட்டுகிறான் என்றால் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். என்னைத் திட்டினான்… அவன் மோசமானவன்… அவன் உருப்படுவானா…? என்று சொன்னால் அங்கே வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்குப் புரையோடுகின்றது… உணர்வுகள் இப்படி இடைமறிக்கின்றது.

உணர்வின் இயக்கங்கள் இவ்வாறு தான் இருக்கின்றது.

1.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தி வேண்டும்
2.துன்பங்களை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி வேண்டும்
3.இருளைப் போக்கும் சக்தி வேண்டும் என்று என்னிடம் கேட்டால் “எமக்குத் தெளிவாக இருக்கும்…”

ஆனால் அதை விட்டுவிட்டு… சாமி…! நீங்கள் சொன்னீர்கள் எனக்குச் சரியாகவில்லையே…! என்று தான் சொல்லத் தொடங்குகின்றார்கள். அது எண்னை எப்படித் தாக்கும்…?

ஏனென்றால் ஒவ்வொருவரும் தொடர்பு கொண்ட நிலையில் தான் இயங்குகின்றோம்.

காரணம் உண்மையின் உணர்வுகளை அறிய முடியாத நிலையில் இருப்பதனால் யாம் நன்மைகள் செய்ய வந்தாலும் கூட இன்னொரு ஆன்மா (ஊங்கள்) உடலுக்குள் சென்ற பின் இந்த நிலை ஆகிவிடுகிறது.

இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும் அதற்குத்தான் தொடர்ந்து தொடர்ந்து உங்களுக்கு இந்த உபதேச வாயிலாக ஞாபகப்படுத்தி ஞானிகள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.
1.யாம் கொடுக்கக்கூடிய வாக்குகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தினால்
2.அதனுடைய பலன்களை நிச்சயம் நீங்கள் உணர முடியும்.