ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2024

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் “அவர்கள் பெற வேண்டும்” என்று நாம் எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது. நமக்குள் அகந்தை என்ற உணர்வு செயல்படாது ஒடுங்குகின்றது.

அன்று துருவன் (அகஸ்தியன்) காட்டிற்குள் செல்லப்படும் பொழுது துஷ்ட மிருகங்கள் மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை கொண்டு வந்தாலும்…
1.அவன் உடலில் இருந்து வெளிப்படும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அதை ஒடுங்கச் செய்வது போன்று
2.விஷமான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்து… மற்றொன்றைக் கொன்று புசிக்கும் கடும் நோயாக உருவாக்கும் அந்த உணர்வுகளை
3.நாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து அந்த உணர்வுகளை ஒடுங்கச் செய்ய வேண்டும்.
4.ஆக அதை நுகர்கின்றோம்…! இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.
5.அந்த அணுக்களின் பெருக்கங்களைக் கொண்டு வரும்போது கணங்களுக்கு அதிபதி ஆகிப் பிறவியில்லாப் பெரு நிலை அடைய செய்யும்

“பிரம்மாவைச் சிறை பிடித்தான்…” என்ற நிலையில் அந்த அருள் ஒளியைத் தான் நாம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவனை அடிமையாக்க வேண்டும் என்று அகம் கொண்டு… துர்மார்க்க வழியில் அடித்து அவனைக் கைவல்யப்படுத்தி இன்னொருவர் மீது பாய்ச்சி அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் தான் இன்றைய உலகில் வந்து கொண்டிருக்கின்றது.

கடந்த கால நிலைகளில் மந்திர ஒலிகள் கொண்டிருந்தாலும்… உலோக உணர்வுகளை அறியச் செய்தாலும் அதனின் வளர்ச்சியில் அணுக் கதிரியக்கங்களையும் கண்டு கொண்ட பின் “இன்று மீண்டும்” ஆவியின் நிலைகளே தொடர்பு கொள்கின்றது.

அரச உணர்வு பெற்று விஞ்ஞான அறிவு கொண்டாலும் பேயாசை கொண்டு ராட்சச உணர்வு கொண்டு… மனிதன் தான் பெற வேண்டும் என்ற கௌரவ உணர்வு கொண்டு “நான்” என்ற நிலை உருவாக்கப்பட்டு அழித்திடும் உணர்வாகப் பெருகி… மனிதனே அசுரனாக மாறிடும் நிலையாக ஒருவரை ஒருவர் கொன்று புசித்து… அதை ரசித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் பெருகிக் கொண்டுள்ளது.

இது போன்ற உணர்வுகள் நமக்குள் சேர்ந்தாலும் “நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை அடக்கிடல் வேண்டும்…”

நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வைப் பெருக்கி… நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் அதில் அமிழ்ந்திருக்கும் அத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்யும் அருள் சக்தியைப் பெற நாம் தியானிப்போம்.

அனைவருடைய நிலைகளிலும் இருள் நீங்கி… மெய்ப் பொருள் என்ற தேவாதி தேவர்கள் என்ற மனித உரு பெற்ற நிலையினை… அருள் ஒளியின் உணர்வாக மாற்றிடும் நிலைபெறச் செய்வோம்… அருள் ஒளிச் சுடராகப் பெருக்குவோம்.

1.யாம் (ஞானகுரு) உபதேசித்த ஒலி நாடாக்களை ஆங்காங்கே வெளிப்படுத்தி
2.அதன் வழி நீங்கள் தியானியுங்கள்… உங்களுக்குள் இதை மனப்பாடமும் செய்து கொள்ளுங்கள்.
3..உபதேச ஒலி நாடாக்களைப் போட்டு அடிக்கடி அதைக் கேட்டுப் பதிவாக்குங்கள்… அனைவரையும் கேட்கச் செய்யுங்கள்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகளை உந்தச் செய்து நினைவை விண்ணிலே செலுத்தி
5.அருள் ஒளியின் உணர்வை உருவாக்கும் உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யுங்கள்.

அறியாது ஆட்டிப் படைக்கும் அசுர உணர்வுகளிலிருந்து உலக மக்களை மீளச் செய்யுங்கள்… அருள் ஞான சக்தியை ஊட்டச் செய்யுங்கள்.

தேவாதி தேவர் என்ற சர்வ வல்லமை பெற்ற அவர்கள் உடலில் நன்மையை ஊட்டும் அருள் ஒளியின் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கச் செய்யுங்கள்.

ஆகவே குறுகிய காலமே இந்த உடலில் வாழும் நாம் அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.மற்றவரிடத்திலிருந்து வரும் தீமைகளை நுகர்ந்தாலும் அதை நாம் அருள் ஒளியாக மாற்றிடும் உணர்வாகப் பெற முடியும்
2.அருள் வழி வாழ்வோம் அனைவரும் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.