ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2024

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

 

உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்துங்கள்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அக்காலத்தில் சென்ற
2.அனைவரது அருள் உணர்வுகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது.
3.உங்களுக்குள் இருக்கும் முப்பத்து முக்கோடி அணுக்கள்… அதன் முழுமைகளை… அதனதன் இயக்கமாக இருக்கும் நிலையை
4.அவர்கள் அருள் ஒளிச் சுடராக மாற்றிய அருள் ஒளியின் தன்மையை
5.முப்பத்து முக்கோடி அணுக்களின் திறன்களையும் “ஒளியின் உணர்வாக மாற்றிட்ட அந்த அருள் ஒளியை”
6.உங்களுக்குள் அருள் ஒளி பெறும் அணுக்களாக மாற்றும் நிலையாக சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வினை ஒன்றிடச் செய்யுங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்ந்திட ஓர் இருப்பிடமாக இதனை நாம் செயல்படுத்துவோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
1.எங்கள் உடலில் உள்ள சர்வ அணுக்களும் அருள் ஒளியைச் சிருஷ்டிக்கும் அருள் ஞானம் பெற்று
2.ஒளியின் உணர்வாக உருவாக்கும் அணுக்களாக மாற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் அருள் ஒளிச் சுடராக… எங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளியின் உணர்வாக உருப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் உடலில் இருக்கும் பொழுது நான்
2.அதுவே ஒளியின் உணர்வாக நமக்குள் நானாக மாற்றுதல் வேண்டும்.
3.உயிர் நானாகின்றது… இப்போது உணர்வை நானாக… “இரண்டையும் கலந்து நானாவதே நான்…”

நான் என்ற நிலைகள் வரும் போது “உயிருடன் ஒன்றினால்” உணர்வை ஒளியாக மாற்றிடும் பிரம்மத்தை அடைகின்றோம் எதனையுமே மாற்றி அமைக்கும் நிலையை நமது உயிரின் தன்மை பிரம்மத்தின் நிலையை அடைவதே அது.

எதை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ… இந்த உணர்வை நம் உயிர் உருவாக்கி ஒளியின் அணுவாக மாற்றிவிடும். ஆகவே
1.உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.பிறவியில்லா நிலை என்னும் ஒளிச் சரீரமாக உயிர் உருவாக்கிவிடும்.

இந்தச் சூரியன் அழிந்தாலும் நமது உயிர் அழிவதில்லை… ஒளியின் உணர்வாக வானுலகில் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றது.

பல சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும் உயிர் மனிதனான பின் ஒளியின் உணர்வாக மாற்றி விட்டால் எதனின்றும் அழிவதில்லை. எதற்கும் அடிமையாவதில்லை.

அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அத்தகைய உயிரின் நிலை அடைகின்றது (நாம் ஆகின்றோம்).