ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2024

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

 

பரிணாம வளர்ச்சியில் தாவர இனங்கள் எப்படி உருமாறி குணங்கள் மாறியதோ இதைப்போல தான் ஒரு உயிரணு தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு மற்ற உடலிலே விளைந்த அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலைகள் வந்தது.

அப்படி வந்தாலும்…
1.இந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து உயிர் அதனின் உணர்வாக விளையச் செய்து
2.முதலிலே பெற்ற உணர்வுக்கும் இரண்டாவது மற்றொன்று இதற்குள் சேர்த்தவுடனே நோயாக வந்து
3.சுழிக் காற்று அடிப்பது போல இதனுடைய மணங்கள் பெருகச் செய்து
4.கவர்ந்த உணர்வுகள் ஒன்றாகி… உயிருடன் ஒன்றும் பொழுது
5.முதலிலே உருப் பெற்ற உடலைப் பிரித்துவிட்டு
6.இணைந்து கொண்ட உணர்வுகள் தனியாக விளைந்து அதனின் நிலைகளில் வந்த உணர்வு கொண்டு தான்
7.இந்த உயிர் மற்ற மற்ற உடல்களை உருவாக்கியது என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அகஸ்தியன் இதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அதாவது இந்தப் பிள்ளை யார்…? என்று அவன் கேள்விக்குறி போட்டு நம்மைத் தெளிவாகச் சிந்திக்கும்படி செய்துள்ளான்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நாம் எவ்வாறு மனித உடல் பெற்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வலிமை பெற்றது தான் மிருகங்கள். மிருகங்களாக இருக்கும் போது தன்னைக் காத்திடும் உணர்வுகள் பெற்றுப் பெற்று… அந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு நமது உயிர் மனிதனாக உருவாக்கியுள்ளது.

தன்னைக் காத்திடும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
1.தன்னைக் காத்திடும் அங்கங்களும் தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ணங்களும் அது விளையச் செய்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிர் ஒளியாக எப்படி ஆனதோ
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது தான் இந்த மனித உடல்.

நமது உயிரே அதை உருவாக்குகின்றது.

1.ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட எண்ணங்களை இந்த உயிரே அது இணைக்கின்றது
2.எடுத்துக் கொண்ட எண்ணத்தை நமது கண்களே வழிகாட்டி
3.அதனின்றி தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் அதைக் கவர்ந்து அதனின் வலுவை இதற்கு உணர்த்தி
4.அதனின் நிலைகளிலேயே உணர்வுகள் மாறி உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
5.உடலின் தன்மை மாற்றமானது என்ற நிலையை தெளிவாக எடுத்துரைத்தான் அந்த அகஸ்தியன்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை மகரிஷிகள் சாதாரண நிலைகளில் விநாயகர் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

நாம் எதை எதை எல்லாம் சேர்த்துக் கொண்டோமோ அந்த வினைக்கு நாயகனாக… ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வு “எது அதிகமோ” அதற்கு நாயகனாக அந்த உணர்வுகள் நம்மை இயக்கி… அந்த உடலை உருவாக்கி… அந்த எண்ணத்தால் தன்னை எவ்வாறு காத்துக் கொள்கின்றது…? என்பதைத்தான் அன்று அகஸ்தியன் “விநாயகர் தத்துவத்தில்” எடுத்துக் காட்டினார்.