ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2024

ஒவ்வொருவருக்குள்ளும் “குருசேத்திரப் போர்” நடந்து கொண்டே இருக்கின்றது

ஒவ்வொருவருக்குள்ளும் “குருசேத்திரப் போர்” நடந்து கொண்டே இருக்கின்றது

 

நாம் தொழில் செய்து கொண்டிருக்கின்றோம்… அந்த இடத்தில் ஒருவன் தவறு செய்கிறான். பார்த்த பின் என்ன ஆகிறது…? “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருசேத்திரப் போர்…!”

1.தப்பு செய்தவனைப் பார்த்த உடனே இந்த உணர்வை நுகருகின்றோம்.
2.கண்கள் பார்க்கின்றது… கருவிழி பதிவாக்குகின்றது.
3.அவன் செய்த தவறான உணர்வுகள் சத்தியபாமா உயிரிலே மோதச் செய்கின்றது.

அவன் மிகவும் மோசமானவன் என்று பார்த்தவுடனே குருச்சேத்திரப் போர் நடக்கின்றது உடலுக்குள் ஆனபின் அவனைக் கெட்டவனாகச் சொல்லித் திட்டும்படி செய்கின்றது… வெளியிலே போகச் சொல்கின்றது. குருசேத்திரப் போர் நடக்கின்றது.

1.வெளியில் போடா…! என்று சொல்லி வேதனைப்படுத்தும் போது அதை ரசிக்கின்றோம்.
2.அந்த ரசிக்கும் தன்மை வந்து விட்டால் நமக்குள் வேதனை வருகின்றது.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…! ஆனால் சந்தர்ப்பத்தில் இப்படி வந்ததைத் துடைக்க என்ன வைத்திருக்கின்றோம்…?

அடுத்தாற்போல் அவனை திரும்பப் பார்த்த உடனே அவன் செய்த தவறு நமக்குள் பதிவானது மீண்டும் அந்தத் தவறை உணர்த்தி குருசேத்திரப் போர் ஆரம்பிக்கின்றது.
1.நாளை ஏதாவது செய்து விடுவானா…? என்ற இந்த உணர்வுகள் வருகிறது.
2.ஆகாதவனைக் கண்டாலே இப்படித் தான் இந்த உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது

வீட்டில் சிறிது கலக்கமாக இருந்தால் சந்தேக உணர்வு வந்து கொண்டே இருக்கும். ஆகவே குருசேத்திரப் போர் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பையன் மீது நம்பிக்கையுடன் இருந்து சொத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள். அவன் கொஞ்சம் தவறாக நடக்கின்றான் என்றால் அவனை எண்ணும் போதெல்லாம் குருச்சேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

அப்பொழுது அரக்கன் என்ற அந்த உணர்வு “சீதா” என்ற நல்லதைச் செய்ய விடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கின்றது வேதனை என்று வந்தபின் மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அடக்கப்படுகின்றது.

கலி…! தீமைகளைத் தான் வளர்க்க முடிகின்றது நல்லதை வளர்க்க முடியவில்லை. ஆகவே கலியுகமாக இருக்கின்றது.

ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தெரிந்து கொண்ட பின் கார்த்திகேயா. தீமை புகாது தடுத்துக் கொள்வது சேனாதிபதி. நமது ஞானிகள் இந்தத் தத்துவங்களைக் கொடுத்துள்ளார்கள் சிறிதளவாவது அதை நாம் பின்பற்றுகின்றோமா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

1.உங்களிடம் உபதேசங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவாக்கிப் பதிவாக்கி…
2.அதை நீங்கள் புரிந்து அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகி
3.உங்களை அறியாது ஏதாவது தவறுகள் வந்தாலும் உடனே ரிமோட் செய்து
4.உடனே நல்லதாக மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி வர வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பப் பதிவாக்குவது.

தவறு செய்வதைப் பார்த்தால் கோபமான உணர்ச்சிகள் தோன்றுகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்காதபடி ரிமோட் செய்து விட்டால் நமக்குள் புகாதபடி தடுக்கப்படும். “அவனுக்கு நல்ல அறிவு வரட்டும்” என்று அந்தத் தீமை நமக்குள் புகாது தடுத்திடும் சேனாதிபதி.

ஆகவே குரு வழி என்ன…? நாம் கவர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுப்பெறுகின்றது அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு.

மற்றவர்கள் செய்யும் உபதேசங்களை இவ்வளவு நேரம் உங்களால் கேட்க முடியுமா…? அவர்கள் என்ன பேசுகின்றார்கள்…! இவர்கள் என்ன பேசுகின்றார்கள்…? திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்குள் எப்படியும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று குரு காட்டிய வழியிலே “ரெக்கார்ட்” செய்கின்றேன்.
1.அதன் பின் சிறிது நேரம் சிந்தித்தீர்கள் என்றால்
2.ஞானிகள் பெற்ற உணர்வு உங்களுக்குள் அந்த ஞானத்தைப் பேசும்.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டு சென்றால்… அங்கிருந்து திருடனே வந்தாலும் கூட உடனே அதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்தச் சுதாரிப்பைக் கொடுக்கும்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு வர வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அதனின் வலிமையைக் காட்டி விடுகின்றது.
1.ஆக மொத்தம் அதைக் காட்டிலும் வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
2.இதன் வலிமையைக் காட்டும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நீங்கள் தெளிந்து வாழ முடியும்.

வேதனை என்ற உணர்வு வந்து விட்டால் கலி. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் கல்கி.

உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி வர வேண்டும் அதைப் பெறச் செய்வதற்கு தான் யாம் உபதேசிப்பது (ஞானகுரு).