ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2024

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

 

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை உணர்வுகள் உடலுக்குள் மிகவும் அதிகமானால் இடுப்பு வலிக்கின்றது மேல் வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்று வந்து விடுகிறது. வேதனையைத் தவிர வேறு நல்லதைச் சுவாசிக்கின்றோமா…?

நம் உடலில் உள்ள மற்ற அணுக்களிலும் வேதனையைச் சேர்த்து விடுகின்றோம். நல்ல உறுப்புகளாக உருவாகி… நஞ்சினை மலமாக மாற்றும் திறன் பெற்று இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு உடல் உறுப்புகளைப் பாழாக்குகின்றோம்.

1.தீமையை மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.வேதனை என்ற உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் இணைந்து சிறுகச் சிறுக அவைகளை மாற்றத் தொடங்குகிறது.

இரத்தம் கல்லீரலுக்கு வந்தால் அதை வடிகட்டும் திறனும் நுரையீரல் மற்றதை வடிகட்டும் திறனும் எல்லாமே சுத்திகரித்து வரப்படும் பொழுது அது சரியாக இயங்கவில்லை என்றால் விஷம் என்ற உணர்வு சென்று அதற்குள் இணைந்து விடுகின்றது.
1.விஷம் ஆகிவிட்டால் நுரையீரல் சரியாக வேலை செய்யாது
2.கல்லீரலுக்குச் சென்றால் வீக்கமாகி விடுகின்றது வடிகட்டும் தன்மை இல்லை.
3.மண்ணீரலுக்குச் சென்றால் இதே மாதிரி ஆகிவிடுகின்றது
4.இதை எல்லாம் கடந்து வரப்படும் பொழுது நுரையீரல் இரத்தத்தை இழுக்கும் திறன் இழந்து “வெறும் காற்று” தான் வருகிறது.

கல்லீரல் தான் இரத்தத்தை வடிகட்டிக் கொடுப்பது அதனுடைய திறன் இழந்துவிட்டால் நுரையீரல் இழுக்கும் பொழுது வெறும் கேஸ் (GAS) தான் செல்லும். அப்போது…
1.நெஞ்சு எப்படியோ எரிகின்றது மூச்சுத் திணறல் ஆகின்றது
2.கல்லீரல் வீங்கி விட்டால் அடுத்து நடந்தால் போதும் மூச்சுத் திணறல் ஆகும்
3.காரணம் அதற்குண்டான இரத்தம் இல்லை.
4.பெட்ரோல் இல்லை என்றால் ஒரு இன்ஜின் லோடை (LOAD) இழுத்து ஓடுமா…?

நுரையீரல் இழுத்து இரத்தத்தை உடல் முழுவதும் சப்ளை செய்து வடிகட்டி சுத்திகரித்து இருதயத்திற்குச் சென்று எல்லாவற்றுக்கும் ஆசிடாக மாற்றி எது எது உணர்வோ அவைகளுக்கு இயக்கச் சக்திக்குக் கொடுக்கும். அது தான் நம் உறுப்புகளின் இயக்கம்.

மருத்துவர்களும் இன்று எத்தனையோ கண்டுபிடிக்கின்றார்கள் சொல்கின்றார்கள்… ஆனால் அவர்களும் ஓரளவுக்கு மேல் தெரிவதில்லை
1.கடவுளைத்தான் நான் வணங்குகிறேன்… அவன் பேரைச் சொல்லி தான் நான் மருத்துவம் செய்கிறேன்
2.விதி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்
3.பழக்கப்பட்ட முறையைத்தான் சொல்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய உணர்வை நாம் பின்பற்றவில்லை.

மருத்துவர்களும் முயற்சி எடுக்கின்றார்கள். இருந்தாலும் விஞ்ஞான அறிவு கொண்டு என்னதான் உடலுக்குள் எலும்பை மாற்றினாலும் உறுப்புகளை மாற்றினாலும் எத்தனை காலம் நாம் நன்றாக வாழ முடிகின்றது…?

முதலிலே நன்றாக இருந்தது இப்பொழுது வலுவான பொருள்களைத் தூக்குவதற்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அப்போது அங்கே வேதனை வருகின்றது.

இருதயத்தை மாற்றி வைத்திருப்பார்கள் மருத்துவர் சூதானமாக இருக்க வேண்டும் என்பார் ஏதாவது பார்த்தால் சாப்பிட முடிவதில்லை அதற்கு ஒரு மருந்து.

மற்ற மனிதர்களுடைய கிட்னியை எடுத்து மாற்றம் செய்தவர்கள் அது சீராக இயங்குவதற்கு ஒரு மருந்தை கொடுத்துச் சமப்படுத்துவார்கள். மாற்றுவார்கள் ஒரு நாளைக்கு மருந்து கொடுக்கவில்லை என்றால் மரணம் ஆகிவிடும்.

சம்பாதித்த காசை வைத்துச் சிறிது நாட்கள் கூட வாழலாம். பின் சாப்பிட்ட மருந்தின் விஷங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து…
நான் எப்படி எல்லாம் இருந்தேன் கடைசியில் என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று
2.விஷத்தின் உணர்வு கொண்டு உயிர் வெளியே சென்றால் விஷத்தைச் சேமித்த உணர்வு கொண்டு பாம்பினத்திற்குள் அடுத்து செல்கின்றது.

கோபம் குரோதம் என்ற நிலையில் அடுத்தவரை வேதனைப்படுத்தி அதை ரசித்து வாழ்ந்தால் அடுத்துப் புலியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். மற்றொன்றைக் கொன்று சாப்பிடும் நிலை தான் வரும்.

இவையெல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

இது போன்ற கொடுமைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான்
1.உங்களுக்குத் தொடர்ந்து ஞானிகள் உணர்வை உபதேச வாயிலாகக் கொடுத்து
2.விஷத்தன்மையான உணர்வுகள் உடலுக்குள் சேராத வண்ணம் மாற்றி அமைக்கும் பயிற்சியாக
3.தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் உனர்வுகளைப் பெறும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.