ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2024

செயலாற்றலிலும் எண்ணத்திலும் சொல்லிலும் உயர்ந்தவனாக வரவேண்டுமப்பா…!

செயலாற்றலிலும் எண்ணத்திலும் சொல்லிலும் உயர்ந்தவனாக வரவேண்டுமப்பா…!

 

நல்லோரின் சக்தி நிலைக்கு… நல்ல எண்ணத்திற்கு… நல்ல மனம் உடையோருக்கு…
1.“அவர்கள் சுவாச நிலையிலேயே ஆண்டவனின் அருளைப் பெறுகிறார்கள்…”
2.அவர்கள் பார்க்கும் பார்வையில் அவர்கள் சொல்லிடும் சொல்லில் அவர்கள் எண்ணத்தில் எல்லாமே அஜ்ஜெப அருள் கலந்துள்ளதினால்
3.அவர்கள் நிலைக்கு எத்தீய சொல்லும் வந்து அண்டுவதில்லை.

அச்சக்தியின் அருள் பெற்றதினால்… பிறரின் நிலைக்கு எண்ண… ஒரு நற்காரியத்திற்கு இவர்கள் ஆசிர்வாதத்தின் மூலமாகத்தான் நடந்திடும் அப்பா.

ஆண்டவன் என்பது யார்…? என்றே இம் மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லை.
1.தான் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் இடமாகத்தான் ஆண்டவனை எண்ணுகிறார்கள்.
2.கஷ்ட நிலைக்கு ஆண்டவனை எண்ணுகிறார்கள்.

நம்முடைய குணங்களில் லட்சுமியைப் பார்த்தவுடன் செல்வத்துக்கு உடையவள் சரஸ்வதியைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்விக்கு உரியவள் பராசக்தியை எண்ணும் பொழுது வீரத்திற்கு உரியவள் என்ற நற்குணங்களை வைத்து இப்படிப் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டன.

ஆலயங்களுக்கு மக்கள் செல்வதெல்லாம் தன் மனச் சாந்திக்காக. தன் கஷ்டங்களை நீக்கிடவும்… தான் உயர்ந்து வாழ வேண்டும்… உயர்ந்த என்னும் பொழுது “செல்வத்தில் உயர்ந்தவனாக வாழ வேண்டும்” என்ற எண்ணம் தான் இன்றைய மக்களிடம் உள்ளது.

1.செயலாற்றலில் உயர்ந்தவனாக
2.எண்ணத்தால் உயர்ந்தவனாக
3.சொல்லில் உயர்ந்தவனாக
4.தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவனாக ஆலயத்திற்குச் செல்பவன் அரிதிலும் அரிதப்பா.

தன் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அக்குறைகளை ஆண்டவன் தீர்த்தால் ஆண்டவனுக்குப் பல காணிக்கைகளை அளிக்கின்றார்கள். வேண்டுதல் என்ற பெயரில் “பல தேங்காய்களை உடைத்து” அங்குள்ள அர்ச்சகருக்கு இவர்களின் செல்வ நிலையைக் காட்டிட… ஆண்டவனை வணங்குகிறார்கள்

இன்றைய மக்களுக்கு நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட புரியாத நிலையில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்து வந்த பல சித்தர்கள் சொன்ன பல உண்மை நிலைகளை எல்லாம் அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டு விட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகின் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிடப்பட்டதை… அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படி வெளியிட்டதை… காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் “தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்...”

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து ஒன்றே தான். நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்பதைத் தான்.

அதை வைத்தே தான் பல பல வழிகளில் பல கதைகளைக்கட்டி உண்மை ரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்துக் கதையையே கடவுளாகக் காட்டி மக்களுக்குக் கடவுள் என்றாலே கதையில் வடித்த உருவம் தான் என்ற எண்ணம் வரும்படி செய்து விட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில்தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத் தான் அன்றைய சித்தர்கள் அரும்பாடு பட்டுத் தவம் இருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வால்மீகி முனிவரினால் எழுதப்பட்ட இராமாயணம் என்ற காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் அதில் உள்ள குணா அம்சங்களை
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
2.அக்கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
3.இது தான் உண்மை இது எல்லாம் தவறு என்று சுட்டிக் காட்டும் நிலையத்தான் அன்றே சிலர் திருத்தி விட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது

இராமாயணத்தின் மகத்துவத்தை மட்டும் இன்றைய உலகில் உள்ள மக்கள் எல்லோரும் அதிலுள்ள உண்மை நிலையைப் புரிந்து கொண்டால்…
1.இன்று நாட்டில் நடந்திடும் குழப்ப நிலைகளும்
2.மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா.

எல்லோரும் எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்துக்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள் பல நல்ல நிலைகளை எல்லாம்.

ஆனால் எல்லோரும் சொல்வது இப்பொழுது உலகெங்குமே ஒரே நிலையில் கூடி வருகின்றது. இந்நிலையே கூடி வந்து
1.ஒருவனே தேவன் ஒன்றே குலம் அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான் நாம் எல்லோருமே…
2.எந்த மதத்திற்கு யாரும் அடிமை இல்லை…! என்ற சொல்லெல்லாம் இப்பொழுது எந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.
3.ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் இந்நிலை எல்லாம் உகந்ததாக உள்ளது இப்பொழுது…!