ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2024

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

 

இவ்வுலகத்திலே கலந்துள்ள பல விஞ்ஞானிகளும் பல ஜோதிடர்களும் எண்ணத்தாலும் எழுத்தாலும் எண்ணிப் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து வான மண்டலத்தின் தன்மையை வழிக்குக் கொண்டு வரச் செய்யும் வேலையையே நாமும் செய்யலாம் இன்றைய பாடத்தில்.

இவ்வுலகத் தன்மைக்கு ஒலி ஒளி நீர் இந்நிலைகளை எப்படி அவசியமோ அந்நிலையில் இருந்து எப்படி உலகம் சுழல்கிறதோ அச்சுழலும் தன்மைக்கு இம்மூன்றின் தன்மையுடன் “மற்றொரு தன்மையும் உள்ளதப்பா…”

இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட சூரிய மண்டலத்தில் இருந்து வந்திடும் ஒளிக்கதிர்களினால் இப்பூமியின் தன்மை ஈர்க்கும் நிலையில் உலகம் சுற்றுகிறது என்று சொன்னேன் அல்லவா.

இச்சூரிய மண்டலத்தினைச் சுற்றியுள்ள கிரக நிலைகள் 9 என்று விஞ்ஞானிகள் கணக்கெடுத்து உள்ளார்கள். ஒன்பது மண்டலங்களுமே இந்நிலையில் தான் சுற்றுகிறது என்கின்றனர்.

அப்படி என்றால் இப்பூமியின் நிலையில் உள்ளது போலவே தான் எல்லா மண்டலங்களிலும் ஜீவராசிகள் உள்ளனவா…? ஜீவராசிகளில் மனிதரின் நிலை உள்ளதுவா…?

பூமியின் நிலை போல் அந்நிலைகளும் சுற்றிக்கொண்டு இருந்தால் அந்நிலையில் ஏனப்பா மனித இனம் இல்லை…?
1.நம் பூமியை தவிர வேறு எந்த மண்டலத்திலும் இந்த மனித இனம் இல்லையப்பா.
2.அந்நிலையில் எந்த ஜீவராசிகளும் இருந்திட முடியாதப்பா.

பூமியின் தன்மையில் பெரும் பொக்கிஷம் என்ன என்றால் பூமிக்கு இரண்டு பக்கங்களில்
1.பூமிக்கு மேல் தந்தையை போன்று சூரியனும்
2.மறு பக்கத்தில் தாயைப் போல் சந்திரனும் உள்ளதால்
3.இப்பூமியின் தன்மை குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது.

சூரியன் -- பூமி -- சந்திரன்

சூரியனைச் சுற்றி இந்த உலகம் உருளும் பொழுது இவ்வுலகத்திற்கு எதிர் நிலையில் உள்ள சந்திரனின் ஒளியும் ஈர்ப்பு நிலையும் இப்பூமிக்குப் பாய்கின்றது.

பூமி எப்படித் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளதோ அந்நிலையில் தான் சந்திரனும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் நிலை ஒரு நிலையில் தான் உள்ளது.

பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது பகலும் இரவும் வருகிறது அல்லவா சூரிய ஒளி படும்போது பகலாகவும் சூரிய ஒளி படாத பொழுது இரவாகவும் உள்ளதல்லவா.

இந்நிலையில் மாறுதல் இல்லாமல் ஒன்று போலவே உள்ளது. ஆனால் சந்திரனை நாம் மாதத்திற்கு ஒரு தடவை தான் முழு நிலவாகக் காண்கின்றோம் மற்ற நாட்களில் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் அமாவாசையாகவும் இருக்கின்றது.

இந்நிலை எப்படியப்பா வந்தது…?

உலகைப் போலவே இச்சந்திரனும் சுற்றுவதால் உலகச் சுற்றை விட சந்திரனின் சுற்றல் துரிதமாக உள்ளது. அந்நிலையில் தான் உலகின் மறு பக்கத்தில் அது சுற்றும் பொழுது அதன் நிலையை மாறி மாறிக் காண்கின்றோம்.

இந்த உலகிற்குச் சூரியனின் ஒளி மட்டும் இருந்து விட்டால் ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட முடியுமா…? இவ்வுலக நிலையில் உள்ள பல பல வண்ணங்களும் பல கோடி வாசனைகளும் எப்படியப்பா வந்திடும்…?

1.இவ்வுலகில் உள்ள ஜீவராசிகளின் நிலைக்கு
2.”சூரியனின் தன்மையும்… சந்திரனின் தன்மையும்…” கலந்து தான் இருக்கின்றது

சுவாச நிலையில் இருந்து தான் இவ்வுலகமே… இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாமே உள்ளது என்று செப்பிட்டேன் பல முறை.

இவ்வுலக நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்ணுக்குச் சூரியனும் சந்திரனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களையும் தான் பார்த்திட முடிகின்றது.

விஞ்ஞானிகள் சொன்ன வியாழன் புதன் சனி செவ்வாய் ராகு கேது சுக்கிரன் என்ற மற்ற கிரகங்களை நம்மால் பார்த்திட முடிகின்றதா…?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.
1.நம் பூமிக்கு நேர் பார்வை சந்திரன்
2.அந்நிலையைப் போலத்தான் சந்திரனுக்கு நேர் பார்வை செவ்வாய்.
3.எல்லா மண்டலத்துக்கும் சூரியனின் பார்வை ஒன்றே தான். சூரியப் பார்வை என்பது சூரிய சக்தி ஒன்றே தான்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் இச்சக்கி நிலை மாறுபடுகின்றது. சூரிய சக்தி ஒன்றே போல் எல்லா மண்டலத்திற்கும் படிந்தாலும்
1.அம்மண்டலத்தின் எதிர் நிலையில் உள்ள மண்டலத்தின் தன்மை மாறுபடுவதால்
2.அந்நிலையில் நடக்கும் நிலைகள் வேறாக உள்ளன.

சந்திரனுக்கு எதிர் நிலை பூமி தான். சூரிய சக்தியையும் பூமியின் சக்தியையும் சந்திரன் பெறுவதனால் சந்திர மண்டலத்தில் சில உயிரினங்கள் உள்ளன. ஆனாலும் அவைகள் “உருளும்” நிலையில்தான் உள்ளன.

சந்திரனில் பூரண சந்திரனில் “தியானத்தில்… பல ரிஷிகளின் உருவங்கள் தெரிவதெல்லாம்”
1.இப் பூமிக்கு நேர் எதிரில் இருக்கும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பூமியில் படுவதால்
2.பல ரிஷிகளும் பல ஞானிகளும் அவர்களுடைய தவப்பயனை வைத்துப் பூரண சந்திரனிலிருந்து அவர்கள் பிறந்து வளர்ந்த பூமிக்கு
3.அந்நிலையில் இருந்து அந்தப் பூரண சந்திரனின் ஒளியில் “பல கோடி நறுமணங்களையும்… நல்ல எண்ணங்களையும் பாய்ச்சுகின்றார்கள்...”

அந்நிலையில் இருந்து வந்து தாக்கும் அணுக் கதிர்கள்
1.இம்மானிட உலகில் உள்ள மனிதர்களுக்குப் பெரும் பொக்கிஷம் போன்ற
2.உயிர் காக்கும் அணுக்களப்பா.

சூரியனின் ஒளி மட்டும் இருந்தால் பூமிக்கு உயிர் தன்மைக்கு வாழ்ந்திட முடியாதப்பா… மற்ற மண்டலங்களைப் போலத்தான் இப் பூமியின் நிலையும் இருந்திருக்கும்.

பூமியின் தன்மையை சூரிய ஒளி மட்டும் இருந்திருந்தால் பல பல பாளங்களாக வெடித்து பூமியின் நிலையே சிதறி இருக்கும்.

இப்பூமியின் நிலையைக் காக்கத்தான் எதிர் நிலையில் சந்திர மண்டலம் உள்ளது. சந்திர மண்டலத்தின் நிலை மட்டும் இருந்திருந்தாலும் சூரியனின் நிலை இல்லாமல் இயங்கிட முடியாதப்பா.

இந்நிலையை வைத்துத்தான் தாய் தந்தையரைப் போல என்று பகர்ந்திட்டேன் “சந்திரனையும் சூரியனையும்…”