ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2024

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

 

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

 

உதாரணமாக ஒரு கடலைச் செடியில் விழுந்த உயிரணு அதனின் உணர்வின் சத்தை நுகர்ந்தால் அந்தச் சாந்த குணத்தின் அணுக்களாக உருவாகும்… மற்றொன்றைக் கொல்லும் தன்மை இழந்து விடுகின்றது.
1.அணு செல்களாக இருப்பதை ஜீவணுக்களாக இந்த உயிரணு மாற்றப்படும் பொழுது
2.அதனின் அணுவின் மலமாக புழுவின் உடலாக வளர்கின்றது
3.உணர்வின் எண்ணங்களாகத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

இப்பொழுது மைக் இல்லாமல் நான் (ஞானகுரு) பேசினால் உங்களால் கேட்க முடியுமா…? சப்தம் வராது. மைக் ஆக “எது” அமைகின்றது…?

சூரியணிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அதற்குள் (செடிக்குள்) வளர்கின்றது அதே வெப்பத்தையும் காந்தத்தையும் ஈர்த்து எந்த மணத்தின் தன்மை வருகின்றதோ செடிக்குள் வருகின்றது.

இந்தச் செடியின் மணம் (சத்து) வெளிவரப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்துக் கொண்டால் தான்
2.இதில் உள்ள விஷத்தின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டவும்
3.வெப்பம் அதனின் உணர்வின் மணத்தைக் கூட்டவும் அது செயல்படும்.

அப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு மைக்கிலே காந்தப் புலனறிவு இல்லை என்றால் ஓசை கேட்குமா…?
1.அந்த காந்த அலைகளின் தன்மைகள்
2.அந்த மேக்னட் இரும்பால் இருந்தாலும்
3.அதிர்வின் ஒலி அலைகளை எளிதாக மெதுவாக (ஒலிகளை வெளிக்கொண்டு வருவதற்காக) ஊட்டுவதற்காக
4.அந்த ஸ்பீக்கரில் காகிதத்தை வைப்பார்கள் அல்லது மெலிதான தகடை வைப்பார்கள்.
5.அந்த காந்தப் புலனை இழுத்து ஒலியின் ஓசையைத் தெளிவாக்குவதற்கு

இது விஞ்ஞான அறிவால் செயல்படும் நிலை.

இதைப் போன்றுதான் இயற்கையின் நியதிகளில் அது எடுத்து வைத்த பின்
1.இந்த உணர்வின் தன்மை (கடலையின் மணத்தை) உயிரணு நுகர்ந்தால் “ஓசையின்” உணர்வாக இயக்கத் தொடங்குகின்றது.
2.செடியாக இருந்தால் இந்த உணர்வின் தன்மைக்கொப்ப அந்த ரூபத்தை அமைக்கும் தன்மை வருகின்றது.
3.ஆனால் மணத்தின் தன்மை கொண்டு அது வெளிப்படும் தன்மை வருகின்றது.

இப்படிப் பல பல உணர்வின் சத்தை எது நுகர்ந்ததோ அதற்குத் தக்கவாறு அதனுடைய சுவைகளும் மாறும். ஆகவே அதனின் மணங்கள் வரும் போது
1.உயிரனங்கள் நுகரும் பொழுது எண்ணங்கள் சீதாராமா
2.அந்த எண்ணங்கள் தோன்றி அதனதன் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்கிப் பதிவாக்கிக் கொடுக்கின்றேன் குருநாதர் எனக்குள் எவ்வாறு பதிவாக்கினாரோ அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறியும் ஆற்றல் பெற்றேன்.

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில்… தீமை என்று உணர்ந்து அறிந்தாலும்
1.அதிலிருந்து விடுபடும் வல்லமையை அதை அடக்கும் வல்லமை கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகளை நுகர்கின்றேன்.
2.அது வளர தீமைகள் அதற்குள் அடங்குகின்றது

விஷம் என்பது வலுக் கொண்டது அந்த விஷத்தை அடக்கியவன் அருள் ஞானி. விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டவன் துருவ மகரிஷி

அவன் வழியைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக உருப் பெற்று ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிகழ்ந்த சந்தர்ப்பத்திற்கொப்ப உணர்வின் தன்மை வரப்படும் போது
1.பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று மனிதனாக எப்படியெல்லாம் வந்தோம்…? என்ற நிலைகளை தெளிவாக்கி உள்ளார்கள் ஞானிகள்.
2.அதைத்தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.