ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2024

சுருங்கச் சொல்லி யாம் பதிவாக்குவதை வளர்த்துக் கொண்டால் “அதன் விரிவாக்கங்களை நீங்கள் உணரலாம்”

சுருங்கச் சொல்லி யாம் பதிவாக்குவதை வளர்த்துக் கொண்டால் “அதன் விரிவாக்கங்களை நீங்கள் உணரலாம்”

 

ஆதியிலே அகஸ்தியன் தன் வாழ் நாளில் இளமைப் பருவத்திலேயே வானஇயில் புவியியல் தாவரவியல் உயிரியல் ஆற்றலை உணர்ந்தான்.

அணுவின் ஆற்றலை அறிந்ததால் தான் அவனுக்குக் காரணப்பெயர் அகஸ்தியன் உண்மையின் இயக்கத்தை கண்டறிகின்றான் உண்மைகளை உணர்கின்றான்.

தாவர இனங்களுக்கு எங்கிருந்து சத்து வருகிறது…? என்று பார்க்கின்றான் நமது பூமி துருவத்தின் வழியாகக் கவருகிறது (சுவாசம்) என்று காணுகின்றான்.
1.ஃபேன் அது சுழலும் பொழுது பரந்து கிடக்கக்கூடிய காற்றை இழுத்து மொத்தமாகக் குவித்து நமக்கு முன் கொடுக்கின்றது.
2.அதைப் போன்று தான் நமது பூமி சுற்றும் பொழுது அதற்கு நேர் துருவப் பகுதியில் இருப்பதை இழுத்துக் கொண்டு வருகின்றது…
3.பூமிக்குள் படரச் செய்கின்றது என்பதை உணர்ந்தான்.

வானவியல் புவிஇயலாக மாறும்போது தாவர இயலாக மாறுகின்றது. இங்கே பூமிக்குள் உற்பத்தியாகவில்லை… “வானிலிருந்து வந்து உற்பத்தி ஆகின்றது…”

அதிலிருந்து கவர்ந்த உணர்வுகள் தான் மற்ற நிலைகள் ஆனாலும் இதை உணவாக உட்கொண்டு உயிரியல் வளர்கின்றது. வானியல் புவியியல் தாவரவியல் பின் கடைசியில் உயிரியல்.
1.உங்களுக்கு சுருக்கமாகச் சொல்லி அகஸ்தியன் கண்ட உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது. இந்த நினைவு உங்களைக் காக்கும்… உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது.

நான் காப்பேன் என்றால் நான் யார்…? இந்த உணர்வை பதிவு செய்து நீங்கள் மீண்டும் எண்ணினால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். அருள் உனர்வை வளர்க்க இது உதவும்.

என்னைத் திட்டினார் என்று மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வு உங்களுக்குக் கெடுதல் செய்கின்றது.
1.சாமி சொன்னார்… அவர் சொன்ன வழியில் இப்படிச் செய்தால் நமக்கு நன்மை என்று எண்ணினால் அது உங்களைக் காக்கின்றது…
2.அதாவது அந்த எண்ணம் தான் உங்களைக் காக்கிறது.
3.அத்தகைய எண்ணங்களை உருவாக்குவதற்கு தான் பதிவாக்குவது பதிவை நினைவாக்கினால்
4.உங்களுக்குள் அது நன்மை செய்யக்கூடிய சக்தியாக வரும்.

ஆகையினால் எமது உபதேசங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து
1.வேறு எந்த ஞாபகம் இல்லாதபடி நேரம் ஆகிவிட்டது என்றெல்லாம் எண்ணாதபடி
2.அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்கி நல்ல நிலையில் வளர வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது.