ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2017

குரங்கை உயிருடன் தின்பதும் பாம்பின் விஷத்தைத் தனக்குப் போதையேற்றுவதற்கும் மனித பிரேதங்களை உட்கொள்வதும் மனித உறுப்புகளை வியாபாரம் செய்யும் நிலைக்கும் மனிதர்கள் வந்துவிட்டார்கள்

குரங்கு மனிதனுடைய தசைகளை உட்கொள்கிறார்கள் போதைக்கு ப் பாம்பின் விஷம்

இன்று சிங்கப்பூர் இதைப் போல சில பகுதிகளில் குரங்கின் சத்தை நாம் சாப்பிட்டால் உடலுக்குச் சத்து என்று சாப்பிடுகின்றார்கள்.

ஒரு இடுக்கி மாதிரிக் குரங்கின் கழுத்தில் கொண்டு வந்து மாட்டி வைத்து விடுவது, அதை மாட்டி வைத்து என்ன செய்கிறார்கள்?

மேல் ஓட்டை அப்படியே தட்டி விடுவது. அதில் இரண்டு மிளகாய்த் தூள் இதெல்லாம் போட்டு உறிஞ்சிச் சாப்பிட்டால் அது மனிதனுக்குச் சத்து என்ற நிலைகள் இப்படியும் உண்டு.

சில பகுதிகளில் போதை மருந்து சாப்பிட்டாலும் அதனால் தனக்குள் போதை ஏறவில்லை என்றால் அதற்காக வேண்டி நாகனை (பாம்பை) வைத்துள்ளார்கள்.

அதைச் சில கடைகளில் வைத்து இந்த போதை பத்தாததற்கும் தனக்கு அந்தப் போதையின் சத்தைச் சேர்ப்பதற்காகவும் மனிதன் அந்த மண்ணின் சத்துக்கும் இந்த உணர்வின் சத்து இது பழக்கப்பட்டதனால் இதனின் உணர்வின் துணை கொண்டு அந்தப் பாம்பைச் சீறச் செய்து நாக்கில் கொத்த வைக்கிறது.

அது கொத்தியவுடனே இவர்களுக்குப் போதை ஏற்படும். அதற்கு இருநூறு ரூபாய் முன்னூறு ரூபாய் என்று ரேட்.

நாகன்களிலேயே பல விதமான நாகன் உண்டு. அதற்குத் தகுந்த காசு உண்டு. இவைகளெல்லாம் மனிதன் விஞ்ஞான அறிவால் தன் உடலின் சுகத்திற்கு இத்தனை நிலைகளையும் செய்கின்றான்.


சில இடங்களிலெல்லாம் பார்த்தோம் என்றால் இன்றைக்கு மறைமுகமாக சுவையாக இருக்கிறது என்று மனிதனுடைய பிரேதங்களையே உணவாக உட்கொள்கிறார்கள்.

நோயில்லாது பிரேதம் வந்தால் அல்லது ஆக்சிடென்ட் ஆகியவர்களைப் புதைத்தால் புதை குழியில் உள்ளே வைப்பதற்குப் பதில் அங்கே உள்ளவர்களிடம் காசைக் கொடுத்து ஆளுக்கொரு பகுதி என்ற நிலைகள் வாங்கிக் கொள்கிறார்கள்.

பின் அந்தத் தசைகளை முழுவதும் சீவி எடுத்து புதை குழியில் எலும்பைப் போட்டு மூடி வைத்து விட்டுவிடுகின்றார்கள். அந்தத் தசைகள் எல்லாம் இன்றைக்கு ஹோட்டல்களில் நாகரீகமானதாகச் சாப்பாட்டுக்கும் போய்க் கொண்டு இருக்கிறது.

இன்று அமெரிக்காவில் விஞ்ஞான அறிவு வளர்ந்திருந்துள்ளது என்றாலும் அசுர உணர்வுகள் கொண்டு அவன் நர மாமிசமாக உணவாக உட்கொண்டுள்ளார்கள்.

ரோட்டில் நடந்து சென்றால் போதும். அலுங்காமல்… “வாருங்கள் என் வீட்டிற்குப் போகலாம்…” என்று நண்பரைப் போல் பழகுகின்றான். வீட்டுக்குள் போனவுடன் “டக்…” என்று ஆளைக் கத்தரித்து விடுகிறான். உறுப்புகள் எல்லாம்  ஐஸ் பெட்டிக்குள் போய் விடுகிறது.

எலும்பெல்லாம் தூக்கிப் புதைத்துவிடுகின்றான். ஐஸ் பெட்டியிலிருந்து எடுத்து அதைச் சாப்பாடாகச் சாப்பிட்டுக் கொள்கிறான். (தினசரி பத்திரிக்கை படிப்பவர்களுக்கு இது தெரியும் – பார்க்கலாம் ஃப்ரிட்ஜைத் திறந்தால் மனித உறுப்புகள் இருந்தது. மேலை நாடுகளில் இப்படி நடக்கிறது என்று)

 இப்படியும் நடக்கின்றது. (சாமிகள் இதை உபதேசித்த வருடம் 1993)

அதை போல இன்றைக்குக் குழந்தைகள் காணாமல் போனதென்றால் இங்கிருந்து வியாபாரத்திற்கு ஆகின்றது. மனிதனின் கண்கள் நல்ல பேரத்திற்குப் (பணம்) போகின்றது.

இன்றைக்கு சாதாரணமாக ஒரு வீட்டில் கொள்ளையடிப்பதைக் காட்டிலும்  ஒரு பையனைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள்.

கண்களை எடுப்பதற்கு அதற்கென்று ஒரு டாக்டர் இருக்கிறார். அந்த டாக்டர் தான் கற்றுக் கொண்ட நிலைகளில் எல்லாம் தெரிந்து கொள்கிறான். கண்களை எப்படி நோண்டி எடுப்பது? இதை ஐஸ் பெட்டியில் எப்படி வைப்பது?

அடுத்து இதை எடுத்துக் கொண்டு போய் விற்று விட்டால் இதற்கு நிறையப் பணம் கிடைக்கிறது. அதில் வரக்கூடிய இரத்தத்தைத் தனியாகப் பிடித்துச் சேமித்து அதை விற்றால் அதற்கும் பணம் கிடைக்கிறது.

அதே சமயத்தில் கிட்னியைப் பக்குவப்படுத்தி சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அதையும் விற்றுக் காசாக்குகின்றார்கள்.

இது கூடப் பரவாயில்லை. மண்டையைப் பிளந்து அவர் மூளையை எடுத்து அதனுடைய நிலைகள் திரவமாக்கிக் கொள்கிறார்கள். ஒரு செத்துப் போகக்கூடிய கிழவன் இருந்தால் உடனே அவனுக்கு இந்தத் திரவத்தை ஏற்றிவிட்டால் அவன் வாலிபனாகின்றான்.

இன்றைக்கு ஹாஸ்பிட்டலில் காணாமல் போகின்ற குழந்தை எல்லாம் இப்படித்தான் நடக்கின்றது. ஏனென்றால் விஞ்ஞான அறிவில் நாம் எல்லாம் அந்த அளவிற்கு இருக்கின்றோம்.

 நாம் ஆறாவது அறிவின் தன்மை பிரம்மாவைச் சிறைப் பிடிக்கலாம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்ற நிலையில்  விஞ்ஞான அறிவின் தன்மை போய்விட்டது.

இப்பொழுது ஒன்று வந்திருக்கிறது.

மனிதன் சிந்நனைக்கில்லாதபடி போட்டு (CALCULATOR, COMPUTER) நம்பரை இப்படிப் போட்டுத் தட்டி விட்டால் உடனே விடையைப் பார்த்துக் கொள்ளலாம். அடுத்து  இரண்டு வயதுக் குழந்தையை 12வது பெருக்கல் வாய்ப்பாTடில் அதிலே இத்தனைக்கு இது என்ன என்று கேட்டால் உடனே “டக்..” கென்று அந்தக் குழந்தை சொல்லிவிடும்.

சிந்தனைக்கும் மன உணர்வின் தன்மை ஒற்றுமைக்கும் மனித வாழ்க்கையினுடைய நிலைகள் நன்மை பெறும் தன்மைக்கு அன்று பாட நிலைகள் வந்தது.

இன்று விஞ்ஞான அறிவால் இதைப் போட்டுக் கேல்குலேஷனைப் போட்டு விடலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகிக்காமல் மனிதனுடைய சிந்தனையில் கணக்குப் போடச் சொன்னால் தெரியாது.

கால்குலேட்டர் இல்லை என்றால் இங்கு எந்த வேலையும் நடக்காது, அப்புறம் சிந்தனை எங்கே வருகிறது? எப்படி வரும்?

1.ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலையில்
2.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று இருந்தாலும்
3.நம்முடைய அந்த அறிவினுடைய ஞானத்தையே
4.இன்று சுத்தமாக இழந்திடும் நிலைக்கு வந்துவிட்டது.

இதைப்போல் மனித உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் மனிதன் என்று இல்லாதபடி
1.மனிதன் தன் இனம் என்ற நிலைகள் இல்லாதபடி
2.மனிதனாகப் பிறந்தோம் என்ற நிலையும் அற்றுப்போய்
3.இன்று சிந்தனையற்ற நிலைகள் கொண்டு நாம் வாழுகின்றோம்.

நாம் விஷத்தை குடித்து விட்டால்… இந்த உடல் எதற்கு? என்று நினைப்பது போல மனித எண்ணத்திற்குள் எப்போது எதை வேண்டுமானாலும் தன் இஷ்டப்படி செய்து அந்த உணர்வின் தன்மை கொண்டு வாழ்ந்தால் போதும்.

பிறருடைய நலனைப் பற்றி எள்ளளவும் எண்ணுவது இல்லை. மனிதன் என்ற நிலைகளே அற்ற நிலைகள் இன்று இப்படிப் போய்க் கொண்டே இருக்கின்றது.

நாம் இன்று படைப்பது அனைத்தும் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகமாகச் சேர்த்து நாம் ஆரம்ப நிலைகளுக்குக் கீழே தான் போகின்றோம்.

1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுத்தே ஆக வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் அணுவாக ஆக்க வேண்டும். 

வேறு வழியில்லை.