ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2017

இந்தப் பூமியில் இனிமேல் ஏற்படப் போகும் மாற்றங்களை விஞ்ஞான ரூபமாகவும் கணக்கிட்டு அன்றே வெளிப்படுத்தியவர் நாஸ்டர்டாமஸ்

“நாஸ்டர்டாம்ஸ்” என்ற பிரெஞ்சு அறிஞர் அவர் எழுதிய நிலைகள் கொண்டு விஞ்ஞான ரூபமாகவும் “உலகம் அழியும்” என்று அந்தத் தத்துவ ஞானி அன்றே சொல்லி உள்ளார்.

பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதரும் காலத்தால் சொல்லிக் கொண்டு இருக்கும் போது இவர் சொல்வதற்கு முன்னாடி இதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கும் என்று சொன்னது அனைத்தும் நடந்துவிட்டது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதிக் கொண்டிருக்கும் வேளையில் ரஷ்யாவின் நிலைகள் அது சீர் குலைந்துவிடும் என்று ஏற்கனவே (அது நடப்பதற்கு முன்பே) சொல்லியிருந்தோம்.

முதலிலே எமது உபதேசங்களைக் கேட்ட சில நண்பரகளுக்கெல்லாம் இது தெரியும். ரஷ்யாவின் நிலைகள் சுக்குநூறாகிவிடும் அது சீர்குலைந்துவிடும் என்று சொன்ன மாதிரியே அதனின் நிலை ஆகியது.

மதத்தின் நிலைகள் இன்று எடுத்துக் கொண்டாலும் போர் உருவாகி மதத்திற்கு மதம் போர் செய்யும் நிலைகளும் அதிகமாகிவிட்டது. கிறிஸ்துவ மதமும் முகமதிய மதமும் உலகில் அதிகமான நிலையில் உள்ளது.

கிறிஸ்தவ மதத்திற்குள்ளும் இன பேதங்கள் அதிகமாகின்றது. முகமதிய மதத்திலும் அதிகமான மத பேதங்கள் இன பேதங்கள் வருகின்றது.

மதத்தின் தன்மை கொண்டு போர் செய்தாலும் அந்த உணர்வுக்குள் இன பேதங்கள் வரும் பொது இவனை இவனுக்குள் அழித்திடும் நிலையும் அவர் அவருக்குள் அழித்திடும் நிலையும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது.

யூத வம்சத்திலிருந்து அன்றைய நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகள் பல பல. விஞ்ஞான அறிவு அதற்குள் அந்த நுண்ணிய அறிவினுடைய நிலைகள் விளைந்தது இந்த யூத வம்சத்திலிருந்து தான்.

யூதர்கள் செய்த மந்திர ஒலியாலும் அவர்களுடைய சாணக்கியத்தனத்தாலும் மெய்ஞான அறிவைக் கண்டுணர்ந்த அவனாலும் அவனுடைய காலத்தால் உண்மை அறியாது அந்தத் தத்துவ ஞானியை இம்சித்தார்கள்.

யாரை இம்சித்தார்களோ அதனால் இந்த யூத வம்சமே பெரும் பிரளயத்திற்கு ஆளாகி அதே இம்சை நிலைகளைப் பெற்றார்கள்.

அதே சமயத்தில் அது மதமாக்கப் படும்பொழுது இதனுடைய சலுகையும்     மற்ற நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இன்றும் பார்க்கலாம். அதில் சாமியார்களாக வரக்கூடியவர்கள் இந்த உலகத்தையே சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள் (அவர்களுக்குள்).

 இதனின் நிலைகள் கொண்டு எதிலிருந்து உட்பிரிவுகள் வந்ததோ கிறிஸ்ததுவ மதமும் இந்த யூத மதத்திலிருந்து தான் வந்தது. அதே சமயத்தில் முகமதிய மதமும் இதிலிருந்து தான் வந்தது.

இந்த மூன்றும் ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு உட்பிரிவாகப் பிரிக்கப்பட்டு “என் மதம் வேறு… உன் மதம் வேறு…” என்ற நிலைகள் தத்துவ ஞானிகள் காட்டிய உண்மைகள் மறைந்து மத பேதங்கள் அதிகமாக உருவாகி விட்டது.

மத பேதத்தினால் போர் முறைகள் பரப்பும் போது அதற்குள் உள் மதத்தின் உட் கிளைகளின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அடித்து இந்த அந்த ஞானிகள் காட்டிய நிலைகளைப் பிழையான நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
1.அத்தகைய பிழையினாலேயே
2.இவர்களை வீழ்த்திடும் நிலைகள் இன்று வருகின்றது.

இதிலிருந்து மனிதர்கள் நாம் மீள வேண்டுமா இல்லையா?

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி  என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அணுவின் ஆற்றல் கொண்ட “அகஸ்தியனின் உணர்வுகள்” உலகெங்கும் பரவி உள்ளது.

அந்த அகஸ்தியமா மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்கள் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெறச் செய்யுங்கள்.
1.அதன் மூலம் உங்களைக் காக்கின்றீர்கள்.
2.உலகிலுள்ள நஞ்சினை மாற்றிட முடியும்.
3.மதப்போரை அகற்றிட முடியும்
4.உலகைக் காத்திடவும் முடியும்.
5.உங்களையும் காத்திட முடியும்.
6.அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றிட முடியும்.
7.என்றும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று
8.உங்களை நீங்கள் நம்பி அந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்.

சாமி செய்வார் சாமியார் செய்வார் கடவுள் செய்வார் எவரோ செய்வார் என்ற நிலைகளில் கடவுள் எங்கேயோ இருக்கிறார் என்று எண்ண வேண்டாம்.

1.நீங்கள் எண்ணியது எதுவோ அதை உங்கள் உயிர் கடவுளாக உள் நின்று
2.எண்ணிய உணர்வின் தன்மையை ஜீவனாக்கி
3.இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதற்குள் செயலாக்கும் கடவுளாக இருந்து
4.நாம் எதை எண்ணுகிறோமோ அதன் வழியில் செயல்படச் செய்கிறது என்று
5.அன்று வியாசகனால் உணர்த்தப்பட்ட அந்த உணர்வின் தன்மை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.
6.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்குவோம்.

புதுத் தம்பதிகள் இனித் தங்கள் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இதை போன்று யாம் உபதேசித்த இந்த உணர்வுப்படி அந்தச் “சப்தரிஷிகளின் அருள் பெற வேண்டும்” என்று குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் இதைச் செய்யுங்கள்.

நான் இதைப் பேசுகிறேன் என்று எண்ணவேண்டாம். மூன்றாம் வகுப்பு கூட நான் முறையாகப் படிக்கவில்லை. எனக்கு இதெல்லாம் தெரியாது. இதைப் பேசுகிறேன் என்றல் குரு வழி உணர்வின் செயலாக்கங்கள் தான் இதைப் பேசுகின்றது.

 அன்று நாஸ்டர்டாமஸ் சொன்னார் என்றல் உணர்வின் இயக்கத்தின் நிலைகளை அவருக்குள் எடுத்து அதைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது இன்ன இன்ன திசைகளில் இன்ன இன்ன நிலைகள் என்று விஞ்ஞான அறிவின்படி கண்டு கொள்கிறார்.

மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்த்து உலகின் நிலைகளில் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளைக் கருவிலே வளரும் உங்கள் குழந்தைக்குப் போதித்துப் பாருங்கள்.
1.அந்த குழந்தை உலகின் அறிவை உங்களுக்குள் ஊட்டும்.
2.உங்களை அறியாது வந்த இருளைப் போக்கும். அதை ஓட்டும்.
3.மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள் வளரும் அதை நீங்கள் பெற முடியும்.

“நீங்கள் எண்ணியதைத்தான்..” உங்கள் உயிர் இயக்குகின்றது. உணர்வின் அலைகளாகப் பரப்புகின்றது. உணர்வின் சொல் அம்பாக அந்தக் கருவின் நிலைகள் ஊடுருவுகின்றது. 

உணர்வின் தன்மையை இணைக்கின்றது. மெய் ஒளியைப் பெருக்கும் தன்மையை அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்குகின்றது.