ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2017

விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியில் உருவாக்கப்பட்ட பல சாதனங்கள் இன்று “மனிதனுடைய சிந்தனையை… முற்றிலும் அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது”

இன்று உலகில் எங்கேயோ இருக்கும் செய்திகளைக் கேட்டறிய பார்த்துணர விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட ரேடியோ டி.வி கம்ப்யூட்டர் மூலம் எத்தனையோ விதமான நிலைகளை
1.உற்றுப் பார்த்து நமக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்
2.அவை அனைத்தும் நம் உடலுக்குள் பதிந்து கொண்டேயுள்ளது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவின் வளர்ச்சியில் தன் விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ள சூட்சமமான நிலைகளில் நமக்குத் தெரியாமலே ரேடியோ டி.வி அலைகளிலும் (கம்ப்யூட்டர்) “கடுமையான விஷத்தன்மைகளைப் பரப்பிக் கொண்டுள்ளார்கள்”.

பரப்பும் நிலைகளை அந்தப் படங்களை டி.வி.யிலும் கம்ப்யூட்டரிலும் நாம் இரசித்துப் பார்க்கின்றோம். இன்று அதைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணமாக
1.கடுமையான நிலைகளும்
2.மனிதனுடைய சிந்தனையைக் குழப்பும் நிலைகளும்
3.பல விதமான விளையாட்டுகளையும்
3.போர் முரசு கொண்டு அரக்கத்தனமான ஓர் போர் முறையைக் காண்பிப்பதும்
4.ஈவு இரக்கமற்ற செயல்களைச் செய்வதையும்
5.அதன் அருகில் இருந்து மற்றவர்கள் சிரிப்பதைப் போன்றும்
6.அதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றும் காட்டுகின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால் அந்த அசுர குணங்களின் உணர்வுகள் அனைத்தும் பதிவாகின்றது. அணுக்களாக விளையத் தொடங்குகின்றது.

அதிலே இந்தப் படவிழிகளிலே (படத்தைக் காட்டும் திரை – MONITOR) எர்த் இந்தப் படங்களை அடிக்கடி மாற்றி அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மாறுபடும் நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு மாறுபடும் தன்மையாகும் அதற்குள் விஞ்ஞான அறிவு கொண்டு நம் சிந்தனையைக் குறைக்கும் நிலையாகச் சில நிலைகளைப் பரப்பியுள்ளார்கள்.

அதையெல்லாம் நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் உற்றுப் பார்க்கும் பொழுது நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவாக்கியதன் துணை கொண்டு ஒரு இடத்திலிருந்து கொண்டு நம்மையெல்லாம் “புத்தி பேதமாக்கி…” உலகம் முழுவதற்கும் உள்ள மக்களைத் தன் மதமாக மாற்றிடவும் உலகையே ஆட்சி புரியவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

1.ஆக இயற்கையாகத் தாவர இனங்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளை நாம் சுவாசிப்பதற்குப் பதில்
2.கெமிக்கல் கலந்த உலோகக் கலவையால் கலந்து உருவாக்கப்பட்ட திரைகள் மூலம்
3.நாம் பார்த்துச் சுவாசிக்கும் உணர்வலைகள் அதனின் இயக்கமாக
4.மனிதன் என்ற சிந்தனையைச் சிறுகச் சிறுக இழக்கச் செய்து கொண்டுள்ளது.

இத்தகைய செயற்கையால் உருவாக்கப்பட்ட “விஷம் கொண்ட மின் காந்த உணர்வலைகள்” உலகம் முழுவதும் பரவி ஆறாவது அறிவு கொண்ட மனிதனை “ஐந்தறிவு…” கொண்ட மிருகமாக மாற்றும் நிலைக்கே வந்துவிட்டது.

மனிதர்கள் மனித ரூபத்தில் இருந்தாலும் ஐந்தறிவு கொண்ட மிருகத்தின் செயலாகத்தான் செயல்படுவார்கள். ஏற்கனவே இந்த நிலை ஆகிவிட்டது. மனிதனை மனிதனே உணவாக உட்கொள்ளும் செயல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுங்கள்.
1.துருவ நட்சத்திரம் சிறிதளவு விஷத்தையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற்றது.
2.அதன் ஆற்றல் கொண்டு விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைப் போக்குங்கள்.

உடலை விட்டு எப்பொழுது அகன்றாலும் அங்கே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடைவீர்கள். 

உங்கள் உயிரான்மா அழியாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாகும்.