ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2017

தாய் கருவிலிருக்கும்போது அந்தச் சிசு பெறும் “பூர்வ புண்ணியம்” பற்றிய பேருண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் வேதனைப்படுபவர்களை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் அதனின் கருவிலே வளரும் அந்த உணர்ச்சிகள் சிசுவுக்கும் பதிவாகின்றது.

அவருடைய கஷ்டங்களை தாய் உணர முடியும். ஆனால் தாயின் உடலிலும் இத்தகைய அணுக்கள் விளைகின்றது.

ஆஸ்த்மாவோ கான்சரோ மற்ற கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களின் உணர்வுகளை கர்ப்பமாக இருக்கும் தாய்
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் நுகர்ந்தால்
2.அந்தத் தாய் கருவிலே விளையும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் பட்டு
3.அந்த உடலுக்குள் விஷ அணுக்களை உருவாக்கும் நிலைகள் வருகின்றது.

குழந்தைப் பருவத்தில் தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த  மனிதனின் உடலிலிருந்து அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும்போது அவர் உடலில் எது விளைந்ததோ
3.அதைப் போல அதே நோயின் தன்மை
4.குழந்தை உடலில் விளையத் தொடங்கிவிடும். 

இன்று இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

இவையெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள். தாய் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் அது உடலுக்குள் ஊழ் வினையாக என்ற வித்தாக மாறி விடுகின்றது. 

அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

நாம் நல்ல மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நம் தாய் கருவிலே இருக்கப்படும் போது இத்தகைய தீமைகளிலிருந்து தப்பியவர்கள் - இன்று நல்ல உடல்களை நாம் உருவாக்கி உள்ளோம்.

ஆனாலும் நாம் கருவிலிருக்கும்போது பிறருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் கேட்டு அறிந்திருந்தால் அந்தச் சாப அலைக்குள் நம்முடைய திறமை எது இருந்தாலும் அது செயலிழந்து இந்த வாழ்க்கையில் அதனால் நமக்குத் தொல்லைகள் வரும்.

இந்த உணர்வுகளை நம் உயிர் நுகர்ந்தபின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
1.”இப்போது அல்ல…”
2.தாய் கருவிலே விளையும் போது தாய் எடுத்த உணர்வின் வித்து
3.அதனுடைய பருவம் வரும் போது அதை விளைய வைத்துவிடும்.

தென்னை மரங்களை எடுத்துக் கொண்டால் அதனுடைய காலம் வரும்போது தான் அதனுடைய காய்களை விளைவிக்கின்றது.

ஒரு செடியின் தன்மை எடுத்துக் கொண்டால் அதன் காலம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சலைக் கொடுக்கின்றது.

நெல் பயிரை எடுத்துக் கொண்டால் ஆறு மாதம் கழித்து நெல் மணிகளை உருவாக்குகின்றது.

இப்பொழுது 3 மாதத்திலும் 2.5 மாதத்திலும் அதற்குத் தக்க உணர்வுகள் உண்டாக்கித் துரித நிலையில் கொண்டு விளையும் பருவத்தையும் விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்துள்ளார்கள்.

இணை சேர்த்த உணர்வின் தன்மை கொண்டு துரித நிலைகளில் இவ்வாறு வளர்வதும் உண்டு.

இதைப் போன்று கருவிலே இருக்கும் போது தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் அனைத்தும் விளைந்து அதற்குத்தக்க நம்மை இப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது.

இதைத்தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.

ஒரு தீமை செய்பவனையோ திருடுபவனையோ அல்லது தவறான வழிகளில் நடப்பவனையோ உற்றுப் பார்த்து அந்த உணர்வினை கருவுற்ற தாய் நுகர்ந்திருந்தால் கருவிலே அந்த உணர்வுகள் விளைந்து
1.குழந்தை வளர வளர
2.அவன் “தவறு செய்பவனாகவே…” மாறிவிடுகிறான்.
3.நீங்கள் என்ன தான் சொல்லி அவனைத் திருத்திப் பார்த்தாலும் முடியாது.

இதுவெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

ஏனென்றால் நமது உயிர் நாம் நுகர்வதையெல்லாம் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று நமக்குள் அணுவாக உருவாக்கும் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது

இன்று சாதாரண நிலைகளில் சாமிக்குத் தீபாராதனை காட்டியோ சாமியாருக்கு இலஞ்சம் கொடுத்துப் பார்த்தோ யாரை வேண்டிக் கொண்டு எதைப் பண்ணினாலும் அவனை மாற்ற முடியாது.

ஆனால் அதே தாய் “மகரிஷியின் அருள் உணர்வுகள் தன் குழந்தை பெறவேண்டும்…” என்று ஏங்கித் தன் குழந்தைக்கு அந்த உணர்வினைப் பாய்ச்சினால் ஒழிய அதை மாற்ற முடியாது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பத்திலுள்ளோர் அனைவருமே சேர்ந்து நல் உணர்வுகளை அந்தத் தாயை நுகரும்படிச் செய்ய வேண்டும்.

தெய்வீக நிலைகளையும் அருள் ஞானிகளைப் பற்றியும் அந்தத் தாய் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் நுகர்ந்தால் பிறக்கும் குழந்தை இந்த உலகுக்கு ஒரு மெய் ஞானியாக வருவான்.

1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.”அகஸ்தியனைப் போன்ற” அருள் ஞானிகளை உருவாக்குங்கள்.
3.அவனின் மறைவில் நாமும் உயர்ந்த நிலை அடையலாம்.