ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2019

விஷத்தை வடிகட்டும் நம் உடல் உறுப்புகளின் இயக்கங்களைச் செம்மையாக்கி நோயிலிருந்து விடுபடுங்கள்


நாம் நல்ல நறுமணங்கள் கொண்ட உணவுகளை உட்கொண்டாலும் அந்த நறுமணத்தை வீரியமாக இயக்கச் செய்யும் நஞ்சு அதிலே உண்டு. அத்தகைய நஞ்சினை எல்லாம் நம் உடல் பிரிப்பதனால் நம் மலம் நாற்றமான நிலையில் வருகின்றது.

நம்முடைய ஆறாவது நல்ல உணர்வின் சத்தை எல்லாம் நம் உடலாக மாற்றி நஞ்சை நீக்கிடும் நல்ல உணர்ச்சிகளாகத் தூண்டுகின்றது ஆகவே தான் இதைப் பரசுராம் என்று கூறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் நாம் இன்று விஷமான பொருள்களை நாம் உட்கொண்டாலும் அதன் சக்திக்குத் தகுந்தவாறு
1.நம்முடைய கிட்னி (KIDNEY – சிறுநீரகங்கள்) என்ற உறுப்பு இரத்தத்தில் வரும் அந்த நஞ்சினை வடிகட்டி விடுகின்றது.
2.அதைப் போல நம் குடல் உறுப்புகளிலும் சில நஞ்சினைப் பிரிக்கும் தன்மை வருகின்றது.
3.இரத்தத்தில் வரும் நஞ்சினைப் பிரிக்கப்படும் பொழுது விஷ அணுக்கள் உருவாக்காதபடி தடுத்துவிடுகின்றது.

அதே சமயம் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் நஞ்சு கலந்த உணர்வு வந்தாலும் அது உடலுக்குள் செல்வதற்கு முன் நமது பெரு மூளை வடிகட்டிவிடுகின்றது. அதைச் சளியாக மாற்றிவிடுகின்றது.

நமக்குள் தீமைகளை அகற்றிடும் சக்தி இப்படி விளைந்தாலும் சம அளவாக இருக்கும் பொழுது எல்லாமே சீராக இயங்குகின்றது. ஆனால் விஷத்தின் அளவு அதிகரித்துவிட்டால் நம் கிட்னி சரியாக வேலை செய்யாது.

அது சரியாக வேலை செய்யவில்லை என்றால்
1.விஷத் தன்மை கொண்ட அணுக்கள் அதிகமாகப் பெருகத் தொடங்குகின்றது.
2.நம் உடலில் சர்க்கரைச் சத்து அதிகரித்துவிடுகின்றது
3.வாத நோய் அதிகரித்து விடுகின்றது. உப்புச் சத்தும் அதிகமாகின்றது.

கிட்னி பிரிக்கும் தன்மை இழந்த பின் உப்புச் சத்து அதிமாகி விட்டால் நம் உடலில் உள்ள எலும்புகள் அனைத்திலும் அது ஊடுருவிவிடும். எலும்புகளைப் பலவீனப்படுத்திவிடும்.

சாதாரணமாக உப்பை வெளியிலே ஒரு இடத்தில் வைத்திருந்தால் அது கசியும் தன்மை வரும்.

இதைப் போல் நம் உடலுக்குள் அந்த அதிகப்படியா இருக்கும் உப்பு கசியும் தன்மை வந்துவிட்டால் சுவாசப்பைகளில் மூச்சுத் திணறல் அதிகரித்துவிடும். சுவாசிப்பதே மிகவும் கடினம் ஆகின்றது.

இதைப் போன்று நமக்குள் வந்துவிடுகின்றது. இதை மாற்றுவதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்...?

மிருகங்கள் அனைத்துமே நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாகப் பெற்றிருக்கின்றது. நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் நம் உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.

ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.

வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும்
2.இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து
3.இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அதைப் பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஊடுருவி நஞ்சான வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும்.

நோயிலிருந்து விடுபடவும் முடியும்...!