ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2019

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்


இந்தப் பூமிக்குள் பல கோடி மனிதர்கள் நாம் எப்படி சுழன்று கொண்டுள்ளோமோ அதே போல் விண்வெளிகளில் மனிதனாகி உயிரின் ஒளியை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஒளி சரீரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பேரண்டத்தில் விளையும் ஆற்றல் மிக்க சக்தியின் தன்மையை அவர்கள் அடக்கி அந்த உணர்வின் ஆற்றலை ஒளியாக மாற்றி விண்ணுலகைப் படைக்கவல்ல அணுவின் சிதறல்கள் அவர்களுடைய மூச்சலைகளாக விண்வெளியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. இதைத்தான்
1.நம் சாஸ்திர விதிகள் மறைமுகமாக
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்கின்றது. 
3.அவ்வாறு ஆற்றல் பெற்ற அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கிறது.

அதை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேதேவர் அவர் காட்டிய அணுவுக்குள் அணுவின் தன்மையும் மகரிஷிகள் எவ்வறு அந்த அணுவின் தன்மை பெற்றார்கள்...? என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

அந்த உணர்வின் அருள் ஒளியை எமக்குள் (ஞானகுரு) பதியச் செய்தார்.

நாம் எப்படி TAPE ல் பதிவு செய்து அந்த உணர்வைப்   பரப்பியபின் அந்த உணர்வின் ஒளி அலைகளை நாம் கேட்டு உணர்கின்றோமோ இதைப் போன்று
1.அந்தச் சப்தரிஷிகள் பெற்ற ஆற்றலை
2.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை ஈர்த்து நமக்குள் பதிவாக்கிக் கொண்டால்
3.அதனின் தன்மைகள் நமக்குள்ளும் விளையத் தொடங்கும்.

இந்த உடலுக்குப் பின் நாமும் அவர்கள் வாழும் எல்லைக்குச் செல்ல முடியும்.