ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2019

உங்கள் எண்ணம் அண்டவெளி வரை போகும்…!


பணம் இந்த உடலின் நிலைகளுக்குத் தான் வரும். ஆனால் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இருளை எல்லாம் மாய்க்கலாம்.
1.இதற்குப் பணம் தேவையில்லை.
2.காசைச் செலவழிக்க வேண்டியதில்லை.

உங்கள் மனதில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். என் மூச்சு நான் பேசுகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாக வேண்டுமென்று இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் எடுத்துக் கொண்டிருந்தால்
1.உங்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும்.
2.உங்கள் மனது நல்லதாக இருக்கும்
3.உங்கள் குடும்பத்தில் நல்லதாக இருக்கும்.
4.சண்டையை நிறுத்தும். நோயைப் போக்கும். இத்தனையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
5.உங்கள் எண்ணம் அண்டவெளி வரையிலும் போகும்.
6.உங்கள் அனுபவத்தில் உங்களிடமிருக்கும் சக்தியை நீங்கள் பார்க்கலாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை பெறுவதற்கு வழியையும் கொடுத்து நீங்கள் பெறவேண்டும் என்று யாம் (ஞானகுரு) சதா பிரார்த்தனையும் செய்கிறோம்.

மகரிஷிகளும் ஞானிகளும் மனிதனைத்தான் தேடி வந்தார்கள். நீங்கள் தியானம் செய்யுங்கள். மெய் ஞானியரின் அருள் பெறவேண்டுமென்று நினையுங்கள். உங்களுக்குள் ஞானியரின் அருள் பெருகும் போது துன்பத்தை ஊட்டக் கூடிய உணர்வுகள் அனைத்தும் விலகுகிறது.