ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2019

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன...?


மனிதன் தவறு செய்வதில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அவனை இயக்கி விடுகின்றது. அதுதான் அவனை ஆட்சி புரிகின்றது. ஆனால் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த கூடிய நிலை பெற்றவன் தான் மனிதன்.

மற்ற உயிரினங்கள் வலு கொண்ட மிருகத்தைக் கண்டு “அது தன்னத் தாக்கிவிடும்...!” என்று அதையே நினைத்து அதில் இருந்து தப்ப வேண்டும் என்று எண்ணுகின்றது.

அதே போல நமக்கு யாராவது தொல்லை செய்கிறார்கள் என்றால் அவர்களையே நினைத்து “எனக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றான்...!” என்று எண்ணி வாழுகிறோம்.
1.அவன் தொல்லை கொடுத்த உணர்வு நமக்குள் வரும் போது
2.அந்தத் தொல்லையே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தொழிலின் நிமித்தம் நாம் கடன் கொடுத்து வாங்குகின்றோம். ஒருவருக்குக் கொடுத்த பின் சந்தர்ப்பம் அவர்களால் திரும்பக் முடியவில்லை என்றால் “நான் கொடுத்தேன்... எனக்குத் திரும்பக் கொடுக்கவில்லை...!” என்ற வேதனையைத் தான் எடுக்கின்றோம்.

அந்த வேதனை உணர்வை எடுத்து இங்கே நம் உடலுக்குள் சமைத்து வேதனையை வளர்க்கப்படும் போது அடுத்து யாரிடம் பேசினாலும் அந்த வேதனை உணர்வுடனே பேசுகிறோம்.

அப்பொழுது அவர்கள் நல்ல மனதையும் கெடுக்கச் செய்கின்றது.  நம்மையும் கெடுக்கின்றது. ஆக மொத்தம் அந்த வேதனை என்ற உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்கின்றது.

நம்முடைய திறமைகள் எவ்வளவு இருப்பினும்... முதலில் நல்ல குணங்கள் இருக்கும் போது செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த வேதனை அதிகமான பின் அந்த செல்வத்தையே காக்கும் திறன் அற்றுப் போகிறது.

செல்வத்தில் சுகமாக வாழ்ந்த நிலையில் அடுத்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது திரும்ப வரவில்லை என்றால் அவர்களிடம் கேட்டுச் சண்டைக்குப் போகிறோம்.

கடன் வாங்கிவரோ... என்னிடம் பணம் இல்லையே... நான் எப்படிக் கொடுப்பேன்...? நான் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தானே நினைக்கின்றேன்... நான் என்ன தரமாட்டேனா...? என்ற வாதம் தான் வரும்.

ஆனாலும் பணம் வரவில்லையே...! என்ற நிலையில் வேதனை உணர்வுகளை எடுத்து எடுத்து அது நம்மை அறியாமலேயே பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.

அப்பொழுது வேதனையான அணுக்கள் நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது. அது நல்ல உணர்வை நமக்குள் அணுக விடாது செயல்படுத்தும். அதிலிருந்து நாம் எப்படித் தப்புவது...?

இதைத் தான் மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் நல்லது செய்து கொண்டு இருப்பீர்கள்.
1.வேதனை என்ற வந்த பின் அந்த வேதனையோ மிகவும் வலு பெற்றது.
2.அதையே அடிக்கடி எண்ண வேண்டியது வரும்.
3.நல்லதை யார் சொன்னாலும் உங்களால் கேட்க முடியாது.
4.அவர் சொல்வார்...! அவருக்கென்ன தெரியும்...? நான் படுகிற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்...! என்று நல்லதை எண்ண விடாது.

அந்தக் கௌரவர்கள் வலு கொண்ட நிலையில் நாம் நல்லதைச் செய்ய விடாதபடி சிந்தனை இல்லாத சில செயல்களைச் செயல்படுத்தச் செய்கின்றது.

ஆகவே இதிலே நாம் எத்தகைய நல்லதை எண்ணினாலும் நம் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் இவைகள் எல்லாம் நம் உடலில் வளர்ந்து விளைந்து விட்டால் அவைகளுடைய வலுவால் நம்மை நல்லதை நுகர விடாது.

அதாவது நமக்குள் இருக்கக்கூடிய கௌரவர்கள்... “என்னை இப்படித் திட்டினான்... திட்டினான்...!” என்ற உணர்வு வரும் போது
1.நல்லதை உள்ளுக்குள் விடுவது இல்லை.
2.நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.
3.கோபம் வந்தால்.. நீங்கள் நல்லது யார் சொன்னாலும் கேட்கின்றீர்களா...?
4.கோபமான உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்பட்டிருந்தால் நல்லது ஏதாவது கேட்பீர்களா...?

கோபமான உணர்வுடன் நீங்க இருக்கப்படும் போது ஒரு சந்தோசமான உணர்வையோ ஒரு ஆடல் பாடலையோ ஒரு நல்ல சம்பவங்களையோ சொன்னால் என்ன ஆகும்...? அந்த உணர்வின் தன்மை கொண்டு இதை அழிக்கத்தான் செய்யும். அழிக்கத்தான் உதவும்.

அதைத்தான் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்...! எனறு சொல்வது.

ஏனென்றால் நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குதான் அது செயல்படுத்தும். ஆகவே அதிலிருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்வது...?

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமும் காந்தமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வைக் கவர்கின்றது. 
1.நாம் அந்த அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.

நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவால் நுகர்ந்தோமோ ஒளியின் சுடராக நமக்குள் இங்கே விளைகின்றது. இருளை அகற்றி மெய் பொருள் காணும் அந்த சக்தியை நமக்குள் பெறச் செய்கின்றது.

1.அதிலே அர்ஜுனன் என்பது துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிரின் வலிமை.
2.நாம் நுகர்ந்த பின் அந்த ஒளியின் உணர்வை ஊட்டுவது பீமன். அதாவது வலுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எதையுமே அலட்சியமாகத் தூக்கும்...! என்பது.
3.நகுலன் என்பது நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் (உடலிலே) ஒவ்வொன்றுடன் இணைந்து அதனுடன் “தன் உணர்வை உயர்த்தும்...!” என்று பொருள்.
4.சகாதேவன் என்பது இருளை அகற்றி அதைத் “தன்னுடைய பண்புடன் அரவணைத்துக் கொள்வது...!”
5.தர்மன் என்பது அந்த அருள் உணர்வின் தன்மையைத் “தனக்குள் ஏற்றுக் கொள்வது...!” என்பது பொருள்.

அப்படி ஏற்றுக் கொண்ட நிலையில் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றும்... நம்மைப் பேரொளியாக மாற்றும் என்பது பொருள்.