ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2018

மனதைத் தங்கமாக்கச் செய்யும் கொங்கணவமாமகரிஷி


அன்று மெய்ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வுகளை அரசர்கள் மந்திர ஒலி கொண்டு மனித உடலுக்குள் ஊடுருவச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருக்கிக் கொண்டார்கள்.

1.ஆயிரம் தரம்… ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம்… தடவை ஜெபித்தால்
2.ஆற்றல்மிக்க சக்தி வருகிறது என்று சொல்லி
3.ஒரே உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மந்திர சக்திகள் கூடுகின்றது.
4.இதற்கென்று ஒரு மூலத்தை முன் வைத்திருப்பார்கள்.

மூலம் என்பது ஒவ்வொரு அரசனும் ஒவ்வொரு நிலை கொண்டு மந்திரம் செய்வார்கள். இன்று நாடி சாஸ்திரங்களைப் பார்க்கலாம். இந்த நாடிகள் என்றோ எழுதியது இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாடிகள் அனைத்தும் அரசர்களால் எழுதப்பட்டதுதான்…! (ஞானிகளும் மகரிஷிகளும் நாடிகளை உருவாக்கவில்லை)

அரசனாக இருக்கப்படும் பொழுது அவன் தன் உடலை விட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் போக வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த நாடியை எழுதினார்கள்.

அதை எழுதி இன்னொரு உடலுக்குள் மாறவேண்டும் என்று கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரத்திலே செயல்படுத்தி அடுத்தவர் உடலுக்குள்ளே புகுந்து விடுவார்கள்.

புகுந்த உடலுக்குள் தன் உணர்வின் தன்மையை அங்கு செயலாக்கி மற்ற அரசர்களின் போர் முறையிலிருந்து தப்பித்துத் தன் உணர்வின் நிலையை இன்னொரு நிலைகளுக்கு நிலைப்படுத்தச் செய்தார்கள். இப்படித்தான் நாடி சாஸ்திரத்தின் நிலைகள் வந்தது.

இவ்வாறு வந்த நிலைகளில்தான் அரசனாக இருந்த பிருகு ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவர் உடலுக்குள் வந்தது.

பிருகு பல உடல்கள் மாறி மாறி இதைப் போன்று நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர்.

அப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலிருந்து எடுத்து வந்தார்.

பிருகு முந்தைய நிலைகளில் அரசனாக இருக்கும் பொழுது மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அதில் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.

1.போர் முறைகளினுடைய நிலைகளாலும் பிறிதொரு நிலைகளாலும்
2.தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான்
3.கொங்கணவரின் உடலுக்குள் வந்து தான் விண் செல்வதற்காக
4.ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றிய அவர்கள் எண்ணும் நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே தன்னை அந்த ஒளிச் சரீரம் பெற வைக்கும் என்று உணர்ந்து கொண்டார்.

அதை உணர்ந்த நிலையில் தன் “மனதைத் தங்கமாக்குவதற்காக…” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
1.மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.
2.கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்…” இன்றும் திருப்பதியில் உண்டு.

மெய்யை உணர்ந்து ஞான ஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் - முருகனின் சிலை. வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

பின் வந்த அரசர்கள்தான் இதைப் பல நிலைகளுக்கு மாற்றி விட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்று விட்டார்கள். திருப்பதிக்குச் சென்றால் நாம் என்ன செய்கின்றோம்…?

தங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு எனக்குத் தங்கத்தைக் கொடு…! என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாபாரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாகக் காசு வாங்கிவிட்டு அங்கே கொண்டு போய்ச் செலவழித்துவிட்டு வருகின்றோம்.

லாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம்.
1.இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ
2.இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ அங்கே வருவதில்லை.
3.காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர
4.மெய் ஒளியை யாரும் காண முடியவில்லை.

கொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது என்று உணர்ந்து கொண்டார்.

1.ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால் மனம் தங்கமாகின்றது.
2.மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.
3.ஆகவே நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
4.தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம்.