ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2018

நம்பிக்கையுடன் தியானியுங்கள் – தரிசனம் கிடைக்கும்


நம்பிக்கை என்னும் நிலை மனித உள்ளத்தில் ஊன்றி விட்டால அந்த “நம்பிக்கையே தான் மனிதனுக்குத் தெய்வம்…!

நம்பிக்கையை வைத்துப் பல பேருண்மைகளைச் சொல்லி விடலாம் நம்பிக்கை இல்லா விட்டால் உயிர் நிலையே இல்லை.

நம்பிக்கையைக் கைவிடுபவர்களுக்கெல்லாம் பல குழப்ப நிலைகள் தான் வரும். அதிலிருந்து வருவதுதான் கஷ்ட நஷ்டங்கள் எல்லாமே.

“நம்பினோரைக் கை விடமாட்டான் ஆண்டவன்…!” என்கிறார்கள் ஆண்டவன் யார்...? அவன் மன நம்பிக்கையே தான் அவனுக்கு ஆண்டவன்.

1.இரண்டு குத்து விளக்கை வைத்து
2.விண்ணிலிருக்கும் மகரிஷிகளை எண்ணி
3.புருவ மத்தியில் ஓ…ம் ஈஸ்வரா…! என்று அழுத்தமாக நினைத்து நம்பிக்கையுடன் தியானம் செய்யுங்கள்.

கண்களை மூடியிருந்தாலும் சரி… அல்லது கண்களைத் திறந்திருந்தாலும் சரி… ஜோதி வடிவான தரிசனம் நிச்சயம் கிடைக்கும்.