ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2018

நெஞ்சு வலி மாரடைப்பு இரத்த அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து விடுபட "இதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை"


உங்கள் இதயங்களில் பலவீனம் இருந்தால் துடிப்பின் தன்மை அதாவது PUMP செய்யும் போது (இரத்தம்) கிடைக்கவில்லை என்றால் துடிப்பு வேகமாக இருக்கும். சில இடங்களில் இரத்தத்தைப் PUMP செய்தாலும் அழுத்தமாகும் பொழுது துடிப்பின் தன்மை அதிகமாகும்.

இதயத்தை இயக்கும் நரம்புகள் பலவீனமானால் இரத்தத்தை இழுக்கும் சக்தி குறையும். துடிப்பு குறைந்து அப்போது வலி என்ற உணர்வுகள் தோன்றும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து தப்ப உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உங்கள் இதயத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் பாய்ச்சிச் சீரான இயக்கமாக இயக்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்.

1,கண்ணின் நினைவாற்றல் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.நம் உடல் உறுப்புகளில் “நேரடியாகப் பாய்ச்சி....!”
3.தீமையான அணுக்களை நமக்குச் சாதகமாக மாற்றி
4.நல்ல உணர்வின் உறுப்புகளை உருவாக்கும் அந்தச் சக்தி பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இதயம் முழுவதும் படர்ந்து இதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இதயத்தில் பாய்ச்சுங்கள்.

உங்கள் இதயத்தில் நல்ல அணுக்கள் உருவாகி உடல் முழுவதற்கும் நல்ல இயக்கச் சக்தியாக மாற்றவும் நல்ல இரத்தங்களை எல்லா உறுப்புகளுக்கும் மூளை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் மேலே சென்று பாய்ச்சும்படிச் செய்யுங்கள்.

நல்ல உணர்வின் நிலையாக மாற்றும் அந்தத் திறன் பெற்ற இதயமாக உங்கள் இதயம் ஆக வேண்டும் என்று அந்த அணுக்களுக்கு இயக்கத்தை (ஞானகுரு) ஊட்டுகின்றேன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
2.நீங்கள் எண்ணி ஏங்கினால் தான் அந்தச் சக்தியைப் பெற முடியும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எமது உணர்வும் உங்களுக்குள் இப்பொழுது கலந்து
4.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் இதயம் நேரடியாகக் கிடைக்கக்கூடிய திறன் பெறுகின்றது.
5.அதைப் பெற்று இதயத்தைச் சீராக்கி கொள்ளுங்கள்.

அருள் உணர்வைப் பெருக்கி எல்லா அணுக்களிலும் ஒளி என்ற உணர்வைப் பாய்ச்சி வலிமையான இதயமாக உங்களுக்குள் உருவாக்குங்கள்.

இவ்வாறு செய்தால் உங்களில் இதயத்தில் வாயுவினால் ஏதாவது வலி இருந்தாலும் அல்லது இதயம் பலவீனம் ஆகி மாரடைப்பு வரக்கூடிய அந்த நிலைகள் இருந்தாலும் அதை மாற்றி ஒரு தெளிவான இதயமாக்க முடியும்.

எங்கள் இதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினைத் இதயத்தில் செலுத்தி வலுபெறச் செய்யுங்கள். திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அந்த உணர்வை இதயத்தில் பாய்ச்சுங்கள்.

இப்பொழுது இதயத்திலும் இரத்தம் செல்லும் பாதைகளிலும் இரத்தமோ அல்லது மற்ற பொருள்களோ உறைந்திருந்தால் அவைகள் எல்லாம் கரையத் தொடங்கும்.

1.உங்கள் இதயத்தை இயக்கும் நரம்புகள் வலுவாக இயங்கி இதயத் துடிப்பு சீராகின்றது.
2.இதயத்தில் உள்ள வால்வுகளும் சீராக இயங்கி
3.இரத்தத்தை உடலிலுள்ள எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தும் வலிமை பெறுகின்றது.

நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள். மன பலம் பெறுவீர்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.